எங்கள் வாழ்வும், எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு…..

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே….

[இணையத் தமிழ்ப் பயணத்திற்கும், இந்த வலைப்பூவிற்கும் அடித்தளமாக இருக்கும் சகோதரன் செ.வேல்முருகனின் அன்புக்கும் அருகாமைக்குமான நன்றிகளுடன்]

வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களிலும் நான் அடையும் வெற்றிகள் அனைத்திற்கும் காரணமாக நான் நினைப்பது என் தந்தையார் திரு.ச.கைவல்யம் அவர்களின் வழி நடத்தலும் அன்பும் தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.மாறாத மனித நேயத்தையும், இன உணர்வையும், தமிழின் இனிமையையும் எனக்கு உணர்த்திய அவரின் பாதங்களில் இருந்து தொடங்குகிறது என் தமிழ்ப் பயணம்.

தமிழனாகப் பிறந்ததனால் எப்போதும் பெருமிதம் கொள்ளும் ஒரு தமிழன் என்றே என்னை உங்களிடம் அறிமுகம் செய்வேன், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன், அரசு அலுவலர் மகனாக வளர்ந்தேன், ஒரு முழுமை பெற்ற மனிதனாக வளர நினைக்கிறேன், காரைக்குடி அருகில் இருக்கும், சிராவயல் மருதங்குடி எனது சொந்த ஊர், தந்தை வழித் தாத்தா ஒரு பெரியார் வழி வந்த பண்பாளர், தந்தையார் கூட்டுறவு சார் பதிவாளராக இருந்து ஓய்வு பெற்றவர், தாயார் பாசமுள்ள ஒரு தமிழ் நங்கை, தலைமகன் நான், தங்கை ஒருத்தி (மைவிழி), தம்பி ஒருவன் (அன்பழகன்), தங்கைக்கு இரண்டு குழந்தைகள், மூத்தவன் ஆதவன், இளையவள் அமிழ்தினி, மைத்துனர் சோமு.கதிரவன் ஒரு கணிப்பொறி கட்டமைப்பாளர், தம்பி உணவக மேலாண்மை அலுவலராக மங்களூரில் பணியாற்றுகிறான்.

காதல் மணம் புரிந்த கணம் முதல் இமைப்பொழுதும் பிரியாமல் என் இதயமெல்லாம் நிறைந்திருக்கும் அன்பு மனைவி சுமதி, பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணி, தமிழ் நிறைந்த நண்பர்கள், நூல்களால் நிரப்பப்பெற்ற வீடு, மெல்லிய இசை போல வாழ்க்கை அழகாகவே இருக்கிறது.

நான் என்னும் இந்த பிம்பம், முழுமையான நான் அல்ல, நான் என்பது ஒரு காலிப் பாத்திரமாய் உருவாகி, சமூக வண்ணங்களால் நிரப்பப் பெற்று என்னைச் சுற்றி இருக்கும் எண்ணங்களை எதிரொலிக்கிறது. சில நேரங்களில் நீங்களே நான். சமூக ஏற்ற தாழ்வுகளையும், வர்க்க வேறுபாடுகளையும் களைய குறைந்த அளவு சிந்திக்கும் தகுதி ஒன்றே போதும், நீங்கள் என் நண்பனாக இருப்பதற்கு…………………..

 

பெரியாரின் சமூகப் புரட்சி கண்ட தமிழ்ப் பேரன் நான், பாரதிதாசனின் தமிழ் முழக்கங்களின் வழித் தோன்றல் நான், நீர்த்துப் போன திராவிடக் கட்சிகளின் எந்த மேடையிலும் என்னை நீங்கள் பார்க்க முடியாது, சாதிக் கட்சிகளின் மாநாடுகள் நடக்கும் பாதையில் கூட என் கால்கள் நகராது, வறட்டு சித்தாந்தங்கள் பேசிக் கொண்டு வம்பளக்கும் இசங்கள் என்னை ஒருபோதும் தம் பக்கம் திருப்பியதில்லை, நான் மனிதம் நிரம்பிய மனிதத்தை இவ்வுலகில் நிரப்பிய தமிழன். அது மட்டுமே என் அடையாளம்.

 

 

 

தமிழுக்கும் அமுதென்று பேர்,

அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர். 

 

[தொழில்நுட்பம் சார்ந்த வடிவமைப்பும் திருத்தங்களும் சகோதரி.இந்துமதியின் பங்களிப்பு]

 

 

 

 

 

73 மறுவினைகள் முதல் “என்னைப் பற்றி…….”


  1. 2 மரணம் சொல்லும் செய்தி சமத்துவம் - ஈழமைந்தன் 11:01 பிற்பகல் இல் ஜூன் 26, 2008

    உங்கள் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள் முத்தமிழ் இளைஞர் அரக்கம் ஆகட்டும் இந்த தமிழ் அறிவு வலைப்பதிவாகட்டும். அமேரிக்காவில் வசிக்கும் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு வைத்த பெயரே கூறுகின்றது தமிழ் மணம் மாறாத குடும்பம் என்று உங்களுடையது என்று

    உங்களைப்போலவே தமிழனாகப் பிறந்ததனால் எப்போதும் பெருமிதம் கொள்ளும் ஒரு தமிழன்

  2. 3 selva rayan 12:54 மு.பகல் இல் ஜூன் 27, 2008

    தமிழ் என்னும் தென்றல் உங்கள் வாழ்வில் என்றும் வீசட்டும்…
    தொடரட்டும் உங்கள் தமிழ் அர்ப்பணிப்பு… வாழ்த்துகள் அண்ணா!

  3. 5 இளவரசு 9:10 மு.பகல் இல் ஜூலை 19, 2008

    தங்களின் தமிழ் ஆர்வமும் பற்றும் கண்டு அகம் மகிழ்கிறேன் தங்களின் இல்லத்து உருப்பினர்கள் பெயரில் இருக்கும் தமிழ்; சிந்தனை, தமிழனாய் பிறந்த ஒவ்வொருவனுக்கும் இருக்க வெண்டும் என்பதும் செயல் படுத்திட தமிழை செம்மை படுத்திட மூட பழக்கத்தின் ஆனி வேரை பிடுங்கி எரிந்திட எதிர்கால சந்ததிக்கும் எடுத்துரைக்கும் வண்ணம் உல்லது….. அருமை

  4. 8 தமிழ் மணி 8:29 மு.பகல் இல் ஆகஸ்ட் 11, 2008

    உங்கள் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள் நண்பரே!!

  5. 9 Johnson 6:36 மு.பகல் இல் ஆகஸ்ட் 14, 2008

    உங்களின் அர்பணிப்பும் ,தமிழின் மீது நீங்கள் கொண்ட காதலும் என்றும் உருதியோடு இருக்க வாழ்த்துகின்றேன்.

  6. 11 பெயரிலி 1:50 மு.பகல் இல் செப்டம்பர் 15, 2008

    உங்களின் அர்பணிப்பும், தமிழின் மீது நீங்கள் கொண்ட காதலும் என்றும் உருதியோடு இருக்க வாழ்த்துகின்றேன்.

    !!! வாழ்க தமிழ். வளர்க ஜாதி, மத பேதமில்லாத தமிழினம். !!!

    வீ முருகேசன், பம்பாய், இந்தியா. +91 9833776818.

  7. 12 V MURUGHESAN 1:54 மு.பகல் இல் செப்டம்பர் 15, 2008

    உங்களின் அர்பணிப்பும், தமிழின் மீது நீங்கள் கொண்ட காதலும் என்றும் உருதியோடு இருக்க வாழ்த்துகின்றேன்.

    !!! வாழ்க தமிழ். !!!

    !!! வளர்க ஜாதி, மத பேதமில்லாத தமிழினம். !!!

    வீ முருகேசன், பம்பாய், இந்தியா. +91 9833776818.

  8. 13 arumugam 6:15 மு.பகல் இல் செப்டம்பர் 18, 2008

    வறட்டு சித்தாந்தங்கள் பேசிக் கொண்டு வம்பளக்கும் இசங்கள் என்னை ஒருபோதும் தம் பக்கம் திருப்பியதில்லை,
    kulappaka irukkirathee?

  9. 14 jerald 7:44 மு.பகல் இல் செப்டம்பர் 18, 2008

    உங்கள் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள் முத்தமிழ் இளைஞர் அரக்கம் ஆகட்டும் இந்த தமிழ் அறிவு வலைப்பதிவாகட்டும். அமேரிக்காவில் வசிக்கும் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு வைத்த பெயரே கூறுகின்றது தமிழ் மணம் மாறாத குடும்பம் என்று உங்களுடையது என்று

    உங்களைப்போலவே தமிழனாகப் பிறந்ததனால் எப்போதும் பெருமிதம் கொள்ளும் ஒரு தமிழன்

  10. 15 RV 10:14 மு.பகல் இல் செப்டம்பர் 26, 2008

    அறிவழகன்,

    தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி!

    உங்களது பல கருத்துக்களோடு நான் வேறுபடுகிறேன். ஆனால் அந்த கருத்துக்களுக்கு பின்னால் இருக்கும் தார்மீக கோபத்தை மிகவும் மதிக்கிறேன். அதனால் உங்கள் மறுமொழியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் – அது அம்பி என்று ஆரம்பித்து திட்டுவதாக இருந்தாலும் சரி. :-) )

  11. 17 வீ. முருகேசன் 6:59 மு.பகல் இல் செப்டம்பர் 30, 2008

    ~~~ அறிமுகப் படுத்திகொள்வோம் ~~~

    பெயர் : வீ. முருகேசன்

    வயது : 41

    ஊர் : பண்டாரகுளம் (திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகில்)
    ~~~~ பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, வசிப்பு மற்றும் வேலை எல்லாமே மும்பை

    படிப்பு : பிகாம்

    வேலை : அக்கவுண்டண்ட் (பைனான்ஸ் கன்ட்ரோல்)

    வேலை செய்யும் துறை : கன்ஸ்ட்ரக்சன்

    பகுதி நேர தொழில் : ரியல் எஸ்டேட் கன்சல்டன்சி

    மொபைல் எண் : 9833776818

    ஆனந்தம் : பிறருக்கு முடிந்த உதவி செய்வது

  12. 18 சோலை 3:55 மு.பகல் இல் அக்டோபர் 1, 2008

    அறியனுக்கு ஒரு சவுக்கடி!

  13. 19 அதிகாலை 8:13 மு.பகல் இல் அக்டோபர் 1, 2008

    வணக்கம்!

    அப்போ… ஒங்க ‘ரியல் எஸ்டேட் கம்பெனி’ விளம்பரம் போட்டுருவமா அதிகாலை-ல? முடிஞ்சா மின்னஞ்சல் அனுப்புங்க சாமி!

    - அதிகாலை நண்பர்கள்

  14. 21 நிலவன் 7:57 மு.பகல் இல் அக்டோபர் 17, 2008

    தோழருக்கு எனது இனிய வணக்கங்கள்,

    சிலர் எழுதுவது ஒன்றாக இருக்கும், பேசுவது ஒன்றாக இருக்கும், வாழ்க்கை முறையினில் நடப்பது ஒன்றாக இருக்கும்.

    ஆனால் எல்லா நிலையிலும் ஒரே உணர்வில், சிந்தனையில் தமிழ்பற்றையும் தாண்டி மனிதத்தை நேசிக்கும் உம்மவர்களின் பண்புகள் மற்றவர்களுக்கெல்லாம் பற்றட்டும். உங்களிடமிருக்கும் நல்ல குணங்களை என்னூள் ஏற்படுத்துவதற்கு பெரும் முயற்சி எடுத்து வெற்றி கொள்வேன்.

    தாங்களின் நட்பு கிடைத்ததற்கு பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

    நன்றி வணக்கம்.

    வாழ்க தமிழுடன்,
    நிலவன்

    http://eerththathil.blogspot.com

  15. 22 லெமூரியன் (எ) பா. ராஜசேகர். 8:21 பிற்பகல் இல் அக்டோபர் 27, 2008

    அன்புள்ள அண்ணன் அறிவழகன் அவர்கட்கு வணக்கம்.

    தங்களின் இந்த வலைப்பூ எண்ணை உயிர் சிலிர்க்க வைத்து….

    உங்களின் ஈழ சகோதரியின் மடல் கண்டு மெய் சிலிர்த்தவன் நான்…

    உங்களிடம் நான் நட்பு கொண்டதை நான் பெற்ற பேறாகவே கருதுகிறேஅன்.

    உங்களின் தமிழ் பனி மேஅன்மேஅளும் தொஅடற என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.

    என்றும் உங்கள் தோழன்.

    லெமூரியன் (எ) பா. ராஜசேகர்.

  16. 23 STALIN 12:47 மு.பகல் இல் அக்டோபர் 29, 2008

    வணக்கம் அறிவழகன்,
    ஜெயமோகனுக்கு நீங்கள் எழுதியிருந்த கடிதம் கண்டேன்.
    என‌து இந்தியாவிற்கு என‌து எதிர் வினையை எழுதியுள்ளேன்
    பாருங்க‌ள்.

    http://brahmanicalterrorism.wordpress.com/

  17. 24 superlinks 7:44 மு.பகல் இல் நவம்பர் 14, 2008

    வணக்கம்,
    உங்க‌ளுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்க‌ள்.

  18. 25 கை.அறிவழகன் 8:04 மு.பகல் இல் நவம்பர் 14, 2008

    என்னால் காண இயலவில்லை, நீங்கள் கொடுத்த இணைப்பை நான் எப்படிப் பார்க்க முடியும். கொஞ்சம் உதவுவீர்களா?

  19. 27 alagirisamy 11:39 மு.பகல் இல் நவம்பர் 15, 2008

    thambi vanakkam.keep it up.i am also periar follower.with regards.alagirisamy.

  20. 28 கை.அறிவழகன் 7:57 மு.பகல் இல் நவம்பர் 18, 2008

    மதிப்பிற்குரிய ஐயா அழகிரிசாமி அவர்களுக்கு,

    உங்கள் பின்னூட்டத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றி, தங்களைப் போன்ற பெரியவர்களின் வழிகாட்டுதலோடு ஒரு புதிய இளைய தலைமுறையை தமிழுக்குச் சமைப்போம்.

    வணக்கம்.

    தங்கள் அன்புக்குரிய
    தம்பி கை.அறிவழகன்

  21. 29 alagirisamy 9:19 மு.பகல் இல் நவம்பர் 25, 2008

    thambi vanakkam,i am alagirisamy.i read your message.let us read all writings of periar ,viduthalai and vunmai.

  22. 30 alagirisamy 10:01 மு.பகல் இல் நவம்பர் 25, 2008

    thambi ,vanakkam.i read your comments about kalaignar.please do no forget that kalaigar our leader.i request u that we should not underestimate his service to us.he is concerned with tamil people.we give voice unitedly.he is takig steps.you visit viduthalai.com.i request u to read the speepches of dr.k.veeramani.kindly excuse me if i hurt u.let us be united.

  23. 31 Arun 2:44 மு.பகல் இல் நவம்பர் 27, 2008

    இவர் பெரியார் பேரன் என்று சொல்லிக்கொள்வார் ஆனால் “எனக்கு தனிப்பட்ட முறையில் முத்துராமலிங்கத்தைப் பிடிக்கும்” என்றும் சொல்வார்.

    இப்போது சொல்லுங்கள் தோழர்களே

    இவர் பெரியாரின் பேரனா இல்லை முத்துராமலிங்கதின் சீடனா?

  24. 32 uumm 2:40 மு.பகல் இல் டிசம்பர் 4, 2008

    ஈரமுள்ள..இன்னொரு..தமிழனே…தாகமெடுக்கும்..பொழுதெல்லாம்..தமிழைக்குடிக்கும்..தமிழச்சியின்..வணக்கமும்..அன்பும்..உங்களூக்கு..

  25. 33 கை.அறிவழகன் 4:05 மு.பகல் இல் டிசம்பர் 4, 2008

    தங்கள் அன்புக்கு நன்றி தோழி, தமிழின் மீதான தாகம் உங்கள் எழுத்துப் பயணங்களின் உச்சங்களை அடைவதற்கும், தமிழரின் வாழ்க்கைப் பாதை சிறக்க வழி வகுக்கவும் உதவட்டும்.

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  26. 34 dayarubini kanagasabapathy 9:37 மு.பகல் இல் டிசம்பர் 11, 2008

    very nice.i am proud of you……

  27. 35 கை.அறிவழகன் 7:42 மு.பகல் இல் டிசம்பர் 12, 2008

    அன்புக்குரிய தயாரூபினி கனகசபாபதி,

    வலைப்பூவில், தங்கள் பின்னூட்டங்கள் எமது எழுத்துக்களை மென்மேலும் செம்மைப் படுத்தும், உங்களைப் போன்ற கடல் கடந்த தமிழர்கள் அன்பு எம் தமிழனத்தை விடியலை நோக்கி அழைத்து வரும்.

    நம்பிக்கையோடு காத்திருப்போம்

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  28. 36 டிரோஷன் 6:52 மு.பகல் இல் டிசம்பர் 16, 2008

    தமிழை பேசவே மறுக்கும் இக்காலத்தில் இப்படியும் தமிழுக்கு ஒரு மகனா, என் சிரம் தாழ்த்திய வந்தனங்கள்,

  29. 37 கை.அறிவழகன் 1:43 மு.பகல் இல் டிசம்பர் 17, 2008

    சகோதரர் டிரோசன் அவர்களுக்கு,

    உங்கள் அன்புக்கு நன்றி. தமிழைப் பேசுவது என்பதை ஒரு குற்ற உணர்வாகக் கருதியும், அவர்களை மாற்ற மொழிகளில் பேசச் சொல்லியும் வளர்க்கும் பெற்றோர் நடுவில், தமிழை எனக்கு நேசிக்கக் கற்றுக் கொடுத்த எம் தந்தையார் அவர்களைத் தான் இந்தப் பெருமை சென்றடையும்.

    மீண்டும் உங்கள் அன்புக்கு நன்றி.

    தமிழன்புடன்
    கை.அறிவழகன்

  30. 38 Neo 3:11 மு.பகல் இல் டிசம்பர் 21, 2008

    Arivalagan,

    Thangalin suyapuranam seem OK. But what have you done for the society. Can you share please.

    I could see your short sightedness in the topic on Thesa thanthai &
    absolute madness on the topic IRAIANMAI. How the hell one can justify a political leader of your country. The author is very unhuman in that way of justification. By the way of saying arrogantly that ‘ We only killed Rajiv , what can you do fot it ‘ , you are against the patriotic Indians (including Tamils)

    Dont try to feed any new TAMIL TERRORISM, please.

  31. 39 கை.அறிவழகன் 3:12 மு.பகல் இல் டிசம்பர் 22, 2008

    அன்புக்குரிய நியோ அவர்களே,

    எங்கள் குறுகிய பார்வை எல்லாம் கிடக்கட்டும், உங்கள் தமிழினத்திற்கு எதிரான பார்வையை எப்போது மாற்றிக் கொள்ளப் போகிறீர்கள்?

    எங்கே சென்றாலும், தமிழர்களின் உணர்வுகளை எதிர்ப்பதிலும், தமிழின விடுதலையை முட்டுக் கட்டை போடுவதிலும், பார்ப்பனர்கள் ஏன் முன்னணியில் நிற்கிறீர்கள்? எங்கள் பணம் தின்று, எங்களை அடிமைகள் என்று சொல்லி, இப்போது எங்கள் மக்களின் விடுதலையைக் கேள்வி கேட்க்கும் நிலைக்கு உங்களை வளர்த்தது எது? உங்களை தமிழகத்தில் இருந்து விரட்டுவதைத் தவிர இனி எங்களுக்கு வேறு வழியில்லை.

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  32. 40 Neo 11:18 மு.பகல் இல் டிசம்பர் 23, 2008

    ஒரு இநதிய தமிழன் இந்தியாவை பற்றி இழிவு பட ஏன் பேசுகிறாய்.

    அறிவழகனே, ஏன் இந்த நாடகம். இனிமையான முகவை கொடுத்து தேனொழுக எழுதிநாலும், உம் வக்கிரம் தெரிகிறது.

    மனித நேயம் என்பதற்கு விளக்கம் கேட்கிறேன்.தமிழ் எழுதுங்கள், ரசிக்கிறோம். சுய வக்ரத்தை வளர்காதிர்.

    ஜாதி (பார்பான்) பார்க்காதே, மனிதனை பார்.
    (டோன்ட் வேஸ்ட் டைம் – நான் பார்பான் இல்லை,தமிழன்)

    மேலும் தங்களின் சுயபுராணம் தவிர , தமிழ் மக்களுக்கு செய்த சாதனை பற்றி ஒன்றும் காணோம் !!!

  33. 41 கை.அறிவழகன் 1:07 மு.பகல் இல் ஜனவரி 5, 2009

    அன்று நடந்த ராமாயணத்தில் இராவணன் பயங்கரவாதியாக்கப்பட்டார், இன்று நடக்கும் ……ஆயானத்தில் பிரபாகரன் பயங்கரவாதியாக்கப்பட்டார், அன்று அனுமார்கள் இருந்தனர், இன்றும் அனுமார்கள் இருக்கிறார்கள், இலங்கைத் தமிழரின் வரலாறு தமிழகத்திற்கு நல்ல பாடங்களைப் புகட்டட்டும்.

    படித்தால் சரி.

    மரியதாசன்
    கனடா

    (தோழர் மரியதாசனின் பதிவின் ஆக்கம்)

  34. 42 sathees 7:49 பிற்பகல் இல் ஜனவரி 15, 2009

    என் வாழ்த்துக்கள் நண்பரே!!

  35. 43 v pandiraja 10:43 மு.பகல் இல் ஜனவரி 22, 2009

    arivu.its nice to see you through your webpages.i am really proud of what you are doing now.all the best.

  36. 45 பெயரிலி 8:53 மு.பகல் இல் ஜனவரி 30, 2009

    த‌வ‌த்தின் வ‌லிமை,
    த‌மிழுக்கு குண்டு,
    ச‌ங்க‌ த‌மிழே சாட்சிய‌டா_வீண்,
    தவங்க‌ள் புரிவ‌தில்,
    ப‌ய‌னொன் றில்லை,
    த‌மிழனை வீழ்த்து சூழ்ச்சிய‌டா……
    எங்க‌ள் ல‌ட்சிய‌த்தில் நியாய‌ம் இருக்கிற‌து மீழ மாட்டோம்…,
    எங்க‌ள் உட‌லில் உண்மையின் ப‌ல‌ம் இருக்கிறது வீழ மாட்டோம்…,
    எத்த‌னை முறை வீழ்கிறோம் என்ப‌து முக்கிய‌மில்லை…,
    அத்த‌னை முறை எழுகிறோம் என்ப‌தெ முக்கிய‌ம்…,
    சாக‌ மாட்டோம்…,
    பீனிக்ஸ் ப‌றவைக‌ள் நாங்க‌ள்…,
    எரித்தாலும் சாம்ப‌லின் க‌ற்ப‌த்திலிருந்து…,
    மீண்டும் ஜ‌னித்து விடுவோம்…
    வீழ மாட்டோம் யாம் வீழ மாட்டோம்…,
    எங்க‌ள் விரல்க‌ள் யாவும் விழுதுக‌ள் ஆனதால்…,
    வீழ மாட்டோம் சாக‌ மாட்டோம்…,
    யாம் சாக‌ மாட்டோம்…,
    சாவே எங்க‌ள் சாப்பாடானதால் சாக‌ மாட்டோம்…,
    ஆழி திறண்டு அலைக‌ட‌ல் எம்மை திண்றாலும்…,
    ஊழி திறண்டு உயிர்க‌ளை எல்லாம் உண்டாலும்…,
    ச‌ற்றும் எங்க‌ள் த‌லைக‌ள் ம‌ண்ணில் சாயாதே…,
    ஒற்றை த‌மிழன் உள்ள‌ வரைக்கும் ஓயாதே…

    த‌மிழ் செல்வ‌ன் ஹிண்ட்ராஃப் ம‌க்க‌ள் ச‌க்தி ம‌லாக்கா malaysia.

  37. 46 TAMIL CELVAN 8:55 மு.பகல் இல் ஜனவரி 30, 2009

    த‌வ‌த்தின் வ‌லிமை,
    த‌மிழுக்கு குண்டு,
    ச‌ங்க‌ த‌மிழே சாட்சிய‌டா_வீண்,
    தவங்க‌ள் புரிவ‌தில்,
    ப‌ய‌னொன் றில்லை,
    த‌மிழனை வீழ்த்து சூழ்ச்சிய‌டா……
    எங்க‌ள் ல‌ட்சிய‌த்தில் நியாய‌ம் இருக்கிற‌து மீழ மாட்டோம்…,
    எங்க‌ள் உட‌லில் உண்மையின் ப‌ல‌ம் இருக்கிறது வீழ மாட்டோம்…,
    எத்த‌னை முறை வீழ்கிறோம் என்ப‌து முக்கிய‌மில்லை…,
    அத்த‌னை முறை எழுகிறோம் என்ப‌தெ முக்கிய‌ம்…,
    சாக‌ மாட்டோம்…,
    பீனிக்ஸ் ப‌றவைக‌ள் நாங்க‌ள்…,
    எரித்தாலும் சாம்ப‌லின் க‌ற்ப‌த்திலிருந்து…,
    மீண்டும் ஜ‌னித்து விடுவோம்…
    வீழ மாட்டோம் யாம் வீழ மாட்டோம்…,
    எங்க‌ள் விரல்க‌ள் யாவும் விழுதுக‌ள் ஆனதால்…,
    வீழ மாட்டோம் சாக‌ மாட்டோம்…,
    யாம் சாக‌ மாட்டோம்…,
    சாவே எங்க‌ள் சாப்பாடானதால் சாக‌ மாட்டோம்…,
    ஆழி திறண்டு அலைக‌ட‌ல் எம்மை திண்றாலும்…,
    ஊழி திறண்டு உயிர்க‌ளை எல்லாம் உண்டாலும்…,
    ச‌ற்றும் எங்க‌ள் த‌லைக‌ள் ம‌ண்ணில் சாயாதே…,
    ஒற்றை த‌மிழன் உள்ள‌ வரைக்கும் ஓயாதே…

    த‌மிழ் செல்வ‌ன் ஹிண்ட்ராஃப் ம‌க்க‌ள் ச‌க்தி ம‌லாக்கா.

    http://tamilhindraf.blog.friendster.com/

  38. 47 vimalavan 10:41 மு.பகல் இல் ஜனவரி 30, 2009

    Is ‘The Hindu’ Newspaper a official dog(spoke) person of srilankan government?Publish Biased news items on srilankan Tamil issue(everyday, first page news items for Rajapakge and his wild dogs;inside a insignificant small news items on those tamils killed by wild dogs),prejudiced editorials on srilankan tamil issue,publish letters to editor from some brahminical elements from tamilnadu and USA and from somebody named nayars, rao, sharma, who had poor knowledge on srilankan issue, except what ‘The Hindu’ says and the Tamil traiters like col.karuna and puliyan will get space on op-ed page interviews.Tamil people knows how this snakes will spew venom on Dravidians.But the rest of india receives ‘The Hindu newspaper’s polluted,pro-srilankan government rhetorics.I have doubt whether ‘The Hindu’ Ram received honourary award(which he received sometime back)or regular money supply from srilankan government?Beware tamilians!Educate other indians on srilankan issue whennever you have oppurtunity else rest of india people will think the barking dog is right without actually knowing that it is rabies not the normal dog.

  39. 49 குயிலமுது 2:56 மு.பகல் இல் பெப்ரவரி 4, 2009

    <>

    ஐயா அவர்களே வணக்கம்…

    பார்ப்பனர்கள்/பாப்பான்கள் விரட்டிவிட்டு உங்கள் “மாவீரம்” பலன் உண்டால் நலம், ஆனால் ஏதோ ஒரு குறை உள்ளதே… தென் தமிழ் நாட்டில் நடைப்பெறும் கலவரம் நடந்துக்கொண்டுத்தான் உள்ளது. அம்பேத்கார் கல்லூரியில் சண்டை உங்களுக்கு அறிந்துள்ளச் செய்தி. இதில் “மோசக்காரப்” பார்பான் வரவில்லை. பாப்பான் இல்லாத இடங்களில் சாதிக்கலவரம் உச்சக்கட்டத்தில் நடந்துக்கொண்டேத்தான் இருக்கிறது. கீரிப்பட்டி, உத்தப்புறம் ஆகியவற்றில் “சாதனைகள்” நடந்துக்கொண்டே இருக்கின்றன.

    ஒரு வேளை நமது தெலுங்கு அரசியல் தலைவர்களுக்கு இந்த பின்னணியின் காரணம் என்ன என அறிவாரோ? அல்லது அவர்கள் “ஏற்பாடா?”

    இன்னொன்று நமது தெலுங்கு ஞானிகள், பார்ப்பான்/பாம்பன்/அந்தனன்/பார்பனியன்/பாப்பன் நாயன் போன்ற “மோசக்கார்களை” தமிழர்கள் அல்ல என கதைப்பார்கள், ஆனால் அவர்களோ இல்லத்தில் தெலுங்கில் உரைப்பார்கள். மேலும், இந்தி பேசும் நபர்களுக்கு தனிச்சலுகை தனி இட ஒதுக்கீடு வழங்குவார்கள். சென்னை விமான நிலையம் மூலம் பயணித்ததுண்டா? சாலைப்பணிகளில் யார் ஊழியர்கள் என கவனித்ததுண்டா? சென்னையில் உள்ள தி.நகர் கடைக்காரர்களைப் பார்த்ததுண்டா? இவர்கள் தமிழர்களா? இவர்கள் தமிழ் பேசுவார்களா? கவலை வேண்டாம், கொஞ்சம் வருடத்தில் தமிழ் அறியாமலே தமிழர்கள் ஆவார்கள், “சிறப்புப்” பட்டியலில் வருவார்கள்.

    “மோசக்காரப்” பார்ப்பான் பாம்பனை விரட்டும் உங்கள் மாவீரம் பலனடைந்தால் நன்று. எனினும் தமிழ் அறியாத “தமிழர்களுடன்” உங்கள் அரவணைப்பு அனுபவம் இனிதே அமைக.

  40. 50 Kelvi.Net 10:55 மு.பகல் இல் பெப்ரவரி 23, 2009

    உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
    சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

    கேள்வி. நெட்

  41. 51 Arivu maha 5:57 பிற்பகல் இல் மார்ச் 3, 2009

    நல்லது சகோதரா, உங்கள் பணி மேலும் வளர வாழ்த்துக்கள்!!! தமிழனின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்..

  42. 52 Amjathkhan 5:35 மு.பகல் இல் மார்ச் 20, 2009

    தேடி சோறு நிதம் தின்று – பல
    சின்னஞ் சிறு கதைகள் பேசி – மனம்
    வாடி துன்பம் மிக உழன்று – பிறர்
    வாட பல செயல்கள் செய்து – நரை
    கூடி கிழப் பருவம் எய்தி – கொடும்
    கூற்றுக்கு இரையென மாயும்- பல
    வேடிக்கை மனிதரை போலே – நான்
    வீழ்வேனென்று நினைத்தாயோ?

    - என்று என் அப்பன் பாரதியின் வரிகளுக்கு உயிர் கொடுக்க என் வாழ்த்துக்கள்!

    நன்றி, ப. அம்ஜத்கான்

  43. 53 தெ. சுந்தரமகாலிங்கம் 11:37 மு.பகல் இல் மார்ச் 25, 2009

    தங்கள் முயற்சி சிறக்க வாழ்த்துக்கள்!

  44. 54 saleh 3:46 மு.பகல் இல் ஏப்ரல் 14, 2009

    anna namm ethir parkkira vidivu vegu tholaivil illai

  45. 55 கை.அறிவழகன் 7:06 மு.பகல் இல் ஏப்ரல் 14, 2009

    நன்றி தம்பி சலே,

    நமது கனவுகள் நனவாக உழைப்போம்,

    தமிழர் தம் கனவு, தமிழீழத் தாயகமே.

    தோழமையுடன்
    உங்கள் அண்ணன்
    கை.அறிவழகன்

  46. 56 திருத்தணிகன் 8:54 மு.பகல் இல் மே 4, 2009

    நண்பரே சிரம் தாழ்ந்த வணக்கம் . மிக அற்புதம். வாழ்க தமிழ்.

  47. 57 I.S.SUNDARAKANNAN 10:39 மு.பகல் இல் மே 20, 2009

    உங்கள் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்

  48. 58 anbazhagan 8:10 மு.பகல் இல் மே 24, 2009

    anbulla annanukku…
    enn ariyamayin neenda thedalukkuppiragu unnudaya valaippoovin manam nugardden…neenda naatkalaai un padacchuvadugalin pinnal payanippadil magizhgiren…thodarum un velvigalin aananda vetkayil thagamudan annanin tamil thanneerukkaga…

    anbudan
    thambi anbazhagan

  49. 59 கை.அறிவழகன் 1:41 மு.பகல் இல் மே 25, 2009

    அன்புத் தம்பி,

    அறியாமை என்பது நிலைத் தன்மை கொண்டது அல்ல, அறிந்து கொள்வதில் இருக்கும் ஆர்வமே ஒரு மனிதனை அறியாமைகள் அற்ற மனிதனாக மாற்றி அவனது அறிவுச் சுடரை மிளிர வைக்கும், உனது ஆற்றல்களை உணர்ந்து உன்னைப் பலர் பின்தொடர நீ தமிழினத்தின் மாண்புகளைக் காக்கும் வீறு நடை கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம், வாழ்க்கையில் யாரையும் பின்பற்றி நடக்காதே, உனது பாதையில் பலரைப் பின்தொடரும் அளவிற்கு வாழ்க்கையில் வெற்றி பெறு.

    உனது பயணத்தில் மிக அருகாமையில் இருக்கும் வாய்ப்பு எப்பொழுதும் எனக்கு மகிழ்வானதே!!!

    வாழ்த்துக்களுடன்
    அண்ணன்
    கை.அறிவழகன்

  50. 60 கை.அறிவழகன் 7:58 மு.பகல் இல் மே 25, 2009

    தமிழில் எழுத இந்தச் சுட்டியைப் பயன்படுத்தவும்:

    http://www.google.com/transliterate/indic/tamil

  51. 61 பிரதீப் 12:48 மு.பகல் இல் மே 26, 2009

    சங்கிலியன் மற்றும் இன்ன பிற ஈழ மன்னர்களின் வரலாறு இணையத்தில் இருக்கின்றனவா?

  52. 62 இறைகற்பனைஇலான் 10:15 பிற்பகல் இல் ஜூன் 7, 2009

    தோழ, வணக்கம்.
    உங்கள் நன்முயற்சி வெல்லட்டும்.
    இன்ற்ய தேவை..
    தமிழியம்,
    பகுத்தறிவு[நாத்திகம்]
    பொதுவுடமை.
    இவற்றுடன் நிச்சயமாக “விபீஸ்ஸன ஆழ்வார்,அவரின்
    பட்டாபிசேகம், எதிர்பாராததும் “கருணா விபீடனன்” ஆகாததுமான
    இளைஞர்கல்ளை உருவக்காத்துமான பொருளாதார மிதப்பில்லாத நிலை
    வேண்டும் சிந்தை வளரவேண்டும் என எண்ணூகிறேன்.

  53. 63 கங்கை தமிழன் 2:33 மு.பகல் இல் ஜூன் 8, 2009

    நல்ல்து நண்பரே உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் எனக்கு இணையம் பயன்படாத அவ்வளவாக தெரியாது தவறிருந்தால் மன்னிக்க
    கங்கை தமிழன்

  54. 64 eniyavan 5:44 பிற்பகல் இல் ஜூன் 13, 2009

    தோழ, வணக்கம்.

    தமிழின் மீது நீங்கள் கொண்ட காதலும் என்றும்

    உருதியோடு இருக்க வாழ்த்துகின்றேன்.

    நமது கனவுகள் நனவாக உழைப்போம்,

    தமிழர் தம் கனவு, தமிழீழத் தாயகமே.

  55. 65 shiyanthan 8:16 பிற்பகல் இல் ஜூன் 27, 2009

    வணக்கம் அண்ணா,
    முதலில் என் தமிழை வளர்பதற்கு எனது நன்றிகள்.
    உங்கள் பணி தொடர என் வாழ்த்துகள்

  56. 66 Arul 8:57 மு.பகல் இல் ஜூலை 5, 2009

    ////////////
    பெரியாரின் சமூகப் புரட்சி கண்ட தமிழ்ப் பேரன் நான், பாரதிதாசனின் தமிழ் முழக்கங்களின் வழித் தோன்றல் நான், நீர்த்துப் போன திராவிடக் கட்சிகளின் எந்த மேடையிலும் என்னை நீங்கள் பார்க்க முடியாது, சாதிக் கட்சிகளின் மாநாடுகள் நடக்கும் பாதையில் கூட என் கால்கள் நகராது, வறட்டு சித்தாந்தங்கள் பேசிக் கொண்டு வம்பளக்கும் இசங்கள் என்னை ஒருபோதும் தம் பக்கம் திருப்பியதில்லை, நான் மனிதம் நிரம்பிய மனிதத்தை இவ்வுலகில் நிரப்பிய தமிழன். அது மட்டுமே என் அடையாளம்.
    ////////////////////

    நீங்க‌ள் ம‌ட்டும் அல்ல‌ தோழ‌ர் நானும்.
    இன‌, மொழி ம‌ற்றும் நாட்டின் எல்லைக‌ளை க‌ட‌ந்து ம‌னித‌த்தை நேசிக்க‌ க‌ற்றுக்கொடுத்த த‌மிழ் ம‌ட்டுமே ந‌ம் அடையாளம்.
    த‌மிழும் அது க‌ற்றுகொடுத்த‌ ம‌னித‌ நேய‌மும் ந‌ம் செய‌ல்க‌ளில் அடிநாத‌ங்க‌ளாக‌ இருக்க‌ட்டும்.

  57. 67 கை.அறிவழகன் 10:48 மு.பகல் இல் ஜூலை 5, 2009

    உங்கள் செயல்களிலும் அதனை நீங்கள் உறுதி செய்வது மிகுந்த மகிழ்வை அளிக்கிறது தோழர் அருள், தங்கள் குடும்பத்தில் ஒருவனாக என்னை இணைத்தமைக்கு நன்றி. இன்னும் நீண்ட தொலைவு பயணம் செய்ய வேண்டிய வலிமையை நமக்குத் தமிழன்னை வழங்கட்டும்.

  58. 68 mahendran 11:28 பிற்பகல் இல் ஜூலை 5, 2009

    hai. arivu anna naan mahen ilankayil irrundu naan padithadu tamilagathildan kumbakonam govt. college. B.sc zoo ungalai paarkumbodhu en nanbargal ninaivitku varugirargal perumayaga ulladu neo pondravargalai tamilanaga illai manidanagave ninaikka vendam ivvanai pondra sagunihalaldan naam ippadi irukkirom ippodu naan medicine padikkiren tamilagam vandal ungalai sandhikka ninaikiren . nandri vanakkam. vazgha tamil

  59. 69 சுதந்திரன் - ஈழம் 1:07 மு.பகல் இல் ஜூலை 17, 2009

    தோழா உம் பணி எம் பணியாகின் ஈழ விடுதலை வரைவில் கிட்டும்….

  60. 70 raavan rajhkumar-kudaththanai. 7:58 மு.பகல் இல் ஆகஸ்ட் 13, 2009

    annaa,vanakkam.ungal ezhuththukkal kanneer vara vaiththuviddana.verm varaddu siththaantham pesum naparkalukkidaiyil unmai pesukireerkal…engal eezha thesaththin niyaayangalai ungalaipponravarkalaal thaan urakka sollamudiyum..!enathu unarvukale ungalin ezhuththukkal.niraiya ezhungal…akala kaal pathiyungal..!

  61. 72 jeya vig 6:37 மு.பகல் இல் செப்டம்பர் 4, 2009

    I just read your statements is its good keep going thanks.

  62. 73 anbu 10:26 மு.பகல் இல் அக்டோபர் 23, 2009

    நிங்கள் கொண்டுள்ள தமிழ் பற்றும் ,தமிழர்கள் மேல் கொண்டுள்ள அக்கறையும் … எமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது .. உங்களின் இந்த உணர்வும் உழைப்பும் உமை ஒருநாள் ஆறுதல் படுத்தும் விரைவில் …


மறுமொழி இடுக




அதிகளவு சொடுக்குகள்

வலைப்பூவில் உலா வந்தவர்கள்

  • 25,654

நிழற்படங்களில் நெஞ்சில் நிறைந்தவை

acceptance

More Photos

RSS My English Blog

தொகுப்புகள்