ஈனப் பெருஞ்சுவரா நாங்க வச்ச சுவருங்க….
சீனப் பெருஞ்சுவரை சிறுக்க வச்ச சுவருங்க
சாதிக் கல்லாள செதுக்கி வச்ச சுவருங்க…….
உடைக்க முடியாத உத்தபுரச் சுவருங்க……
தின்னத் திகட்டாத தேனமுதம் இல்லீங்க ,
எண்ணி முடியாத அறுசுவையும் இல்லீங்க
மனிதத்தை மண்ணிலிட்டு மலம் தின்ன விருந்துங்க…..
திண்ணியத்தில் நாங்க வச்ச திகட்டாத விருந்துங்க…..
கம்ப்யூட்டர் வந்தாலும், கலாம் ஐயா வந்தாலும்..
கண்ணின் இமை போல காலமெல்லாம் காத்து நின்னு
அடுத்த தலைமுறைக்கும் அடைகாத்துக் குடுப்போங்க..
பத்துப் பெரியாரு வந்தாலும் முடியாது, புரையோடும் சாதி வெறி…
சூட்டுக் கோட்டெல்லாம் போட்டு வந்து தொழுவம் திறப்பீக,
சூதுவாதில்லா நம்ம சேரித் தெருவுக்குள் தெரியாம நுழைஞ்சாலும்
தீட்டுப் பட்டதுன்னு தீண்டாமைச் சோப்புப் போட்டு மறக்காமக் குளிப்பீக..
மாடும் பெரிசாப் போய் மனுசனத்தான் மறந்தீக, மனுஷனத்தான் மறந்தீக…
பாழும் சாதிய விட்டு நீங்க மனுஷனாவது எப்போது?
ஐயா, மனுஷனாவது எப்போது??????


//சூட்டுக் கோட்டெல்லாம் போட்டு வந்து தொழுவம் திறப்பீக,
சூதுவாதில்லா நம்ம சேரித் தெருவுக்குள் தெரியாம நுழைஞ்சாலும்
தீட்டுப் பட்டதுன்னு தீண்டாமைச் சோப்புப் போட்டு மறக்காமக் குளிப்பீக..
மாடும் பெரிசாப் போய் மனுசனத்தான் மறந்தீக, மனுஷனத்தான் மறந்தீக…
பாழும் சாதிய விட்டு நீங்க மனுஷனாவது எப்போது?//
மனிதனை மனிதனாக மதிக்கச்செய்யும், ஆறாவது அறிவை நாம் தொலைத்துவிட்டோம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.