யார் மீது கோபம் கொள்ள???
குடைக்கு மழை மேல் கோபம்,
உன் மீது வேகமாய்
வந்து விழுவதற்காய்!!!
மழைக்குக் குடை மேல் கோபம்
உன் கன்னங்களில் வழிந்தோடும்
வழியைத் தடுப்பதற்காய்!!!
முழுதாய் முகம் பார்க்க
முழு நாளும் காத்திருந்த நான்
யார் மீது கோபம் கொள்ள???
அகதி
நதி நீரில் வானம்
முகம் பார்க்கும் நிலவு
தென்றலின் தாலாட்டில்
அசைந்தாடும் அழகு
பூங்காற்றின் வாசத்தில்
வட்டமிடும் வண்டு…….
கரையோரம் வேலிக்குள்
ஒரு வேளை உணவு……..
இலக்கியங்கள் படைத்தாலும்
பெயரில்லை…
"அகதி"
கனவை இழக்கமாட்டோம்
நெல்லுக்கதிர் அறுக்க நஞ்சை இழந்தாலும்,
வண்ணக் கோலமிட வாசல் இழந்தாலும்,
துள்ளும் மீன்பிடித்த தோணி இழந்தாலும்,
தெள்ளு தமிழ்பாடும் எம்பிள்ளைகள் இழந்தாலும்,
கரைகள் இழந்தாலும்,காவியங்கள் இழந்தாலும்,
காதல் மொழிபேசும் எம்கன்னியரை இழந்தாலும்,
பாழும் உலகே,மானம் இழக்கமாட்டோம்……
கண்ணின் இமைபோல நாங்கள்
காத்து வந்த கனவை இழக்கமாட்டோம்,
கடைசித் தமிழ் மறவன் வாழும் காலம்வரை
ஈழம் இழக்கமாட்டோம்,
தமிழீழம் இழக்கமாட்டோம்………


கடைசித் தமிழ் மறவன் வாழும் காலம்வரை
ஈழம் இழக்கமாட்டோம்,
அருமை. வாழ்த்துகள்.
enakku melum melum unarvaiyum,vanmaththaiyum ooddukinrana ungal varikal…..engal pillaikalai naangal thayaar seyyathodangividdom,singalavanin kadaisi ver varai karuvarukka!ungal pillaikalaiyum uruvaakkungal,engalukku uthaviseyya!