<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>கை.அறிவழகன்</title>
	<atom:link href="http://tamizharivu.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://tamizharivu.wordpress.com</link>
	<description>எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு.</description>
	<lastBuildDate>Sun, 29 Jan 2012 06:49:28 +0000</lastBuildDate>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='tamizharivu.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://s2.wp.com/i/buttonw-com.png</url>
		<title>கை.அறிவழகன்</title>
		<link>http://tamizharivu.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://tamizharivu.wordpress.com/osd.xml" title="கை.அறிவழகன்" />
	<atom:link rel='hub' href='http://tamizharivu.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>&#8220;சின்னப்புள்ளை&#8221; என்கிற தமிழ்ச்செல்வி.</title>
		<link>http://tamizharivu.wordpress.com/2012/01/25/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1-%e0%ae%a4/</link>
		<comments>http://tamizharivu.wordpress.com/2012/01/25/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1-%e0%ae%a4/#comments</comments>
		<pubDate>Wed, 25 Jan 2012 08:44:10 +0000</pubDate>
		<dc:creator>கை.அறிவழகன்</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">https://tamizharivu.wordpress.com/?p=3094</guid>
		<description><![CDATA[பக்கத்தில் படுத்திருந்த அந்தப் பெண்ணைப் பார்க்கவே அருவருப்பாகவும், குமட்டலாகவும் இருந்தது எனக்கு, அவளுடைய அழுக்கடைந்த கனத்த சேலையில் இருந்து நாற்றம் பொங்கி வழிவதைப் போல நான் உணர்ந்தேன், அவளது குறட்டைச் சத்தம் வேறு மழைத்தவளையின் கரகரத்த இரைச்சலைப் போல அந்த அறையை நிரப்பிக் கொண்டிருந்தது, எனக்கு பதினைந்து நாட்களுக்குப் பிறகு இரவுப் பணி வழங்கி இருக்கிறார்கள், பகலில் இந்தப் பெண்ணை நான் பல முறை பார்த்திருக்கிறேன், மருத்துவமனையின் சின்னச் சின்ன வேலைகளை இவள் தான் செய்து தருவாள். [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamizharivu.wordpress.com&amp;blog=3902339&amp;post=3094&amp;subd=tamizharivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2012/01/7700495-lg.jpg"><font color="#9b00d3"><strong><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="7700495-lg" border="0" alt="7700495-lg" src="http://tamizharivu.files.wordpress.com/2012/01/7700495-lg_thumb.jpg?w=184&#038;h=244" width="184" height="244" /></strong></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>பக்கத்தில் படுத்திருந்த அந்தப் பெண்ணைப் பார்க்கவே அருவருப்பாகவும், குமட்டலாகவும் இருந்தது எனக்கு, அவளுடைய அழுக்கடைந்த கனத்த சேலையில் இருந்து நாற்றம் பொங்கி வழிவதைப் போல நான் உணர்ந்தேன், அவளது குறட்டைச் சத்தம் வேறு மழைத்தவளையின் கரகரத்த இரைச்சலைப் போல அந்த அறையை நிரப்பிக் கொண்டிருந்தது, எனக்கு பதினைந்து நாட்களுக்குப் பிறகு இரவுப் பணி வழங்கி இருக்கிறார்கள், பகலில் இந்தப் பெண்ணை நான் பல முறை பார்த்திருக்கிறேன், மருத்துவமனையின் சின்னச் சின்ன வேலைகளை இவள் தான் செய்து தருவாள். </strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>தேநீர் வாங்கிக் கொண்டு வருவது, மருத்துவர்களும், நாங்களும் சாப்பிடும் தட்டுக்களைக் கழுவி வைப்பது, மருந்துகளை எடுத்துக் கொடுப்பது மாதிரியான பல வேலைகளைச் செய்து தரும் இந்தப் பெண்ணைக் குறித்த பெரிய அக்கறையும், ஆர்வமும் எனக்கு உண்டாக வாய்ப்பில்லை, ஆனால், இப்போது இந்தக் கணத்தில் இந்தப் பெண் ஒரு அருவருப்பான பொருளை அருகில் படுக்க வைத்திருப்பது போல இருந்தது எனக்கு. வேறு வழியில்லாமல் நீண்ட மருத்துவமனையின் வெளிச்சுற்றில் நடை பழகத் துவங்கினேன் நான், கண்கள் சோர்வடைந்து நான் எப்போது மீண்டும் வந்து உறங்கினேன் என்று எனக்குத் தெரியாது.</strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>முன்பக்கச் சாளரங்களில் இருந்து மெல்லிய குளிர் காற்றும், மஞ்சள் வெயிலும் தலை காட்டத் துவங்கி இருந்ததை வைத்து விடியலின் அடையாளத்தை உணர முடிந்தது, எனக்கு அருகில் படுத்திருந்த அந்தப் பெண்ணை இப்போது காணவில்லை. மறுநாள் காலைப் பணிக்கு வந்து சேர்ந்த முல்லைக் கொடியிடம் இரவில் படுத்திருந்த அந்தப் பெண்ணைப் பற்றிக் கேட்டேன்,</strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>சின்னப்புள்ளை என்று அழைக்கப்படுகிற தமிழ்ச்செல்வி வெகு காலமாக அங்குதான் வேலை செய்கிறாள் என்றும், அந்த மருத்துவமனையின் மிக முக்கியமான மருந்துகள் முதற்கொண்டு பிணவறைக்கு அருகில் இருக்கிற எலி வளை வரைக்கும் அவளுக்கு நன்றாகத் தெரியும் என்றும் ஒரு கதை சொல்லும் பாட்டியைப் போலத் துவங்கினாள் முல்லை.</strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>சின்னப்புள்ளைக்கு ஏறக்குறைய ஐம்பது வயது இருக்கலாம், தட்டையான வளைந்த கால்கள், கொஞ்சம் உப்பிய வயிறு, வறண்டு காய்த்துப் போன கைகள், முதுகோடு ஒட்டிய தலை, நீண்ட காலம் பயன்படுத்தப்பட்ட ஒரு தகர டப்பாவைப் போல அவளது முகம் சலனங்கள் ஏதுமின்றி எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. </strong></font></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2012/01/katherine-casaban-rose.jpg"><font color="#9b00d3"><strong><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="katherine-casaban-rose" border="0" alt="katherine-casaban-rose" src="http://tamizharivu.files.wordpress.com/2012/01/katherine-casaban-rose_thumb.jpg?w=244&#038;h=184" width="244" height="184" /></strong></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>அவள் எப்போது இந்த மருத்துவமனைக்கு வந்தாள், யார் அவளை இங்கே வேலைக்குச் சேர்த்தது என்கிற எந்த விவரங்களும் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது, அவளைப் பற்றிய விவரங்கள் தெரிந்த ஒரே மனுஷி கிரேஸ் சிஸ்டர் மட்டும்தான், கிரேஸ் சிஸ்டர் அந்த விவரக் குறிப்புகளை யாரிடமும் பகிர்ந்து கொண்டதுமில்லை, பகிரப் போவதுமில்லை என்று சொல்லிவிட்டு உடைகளை மாற்றத் தயாரானாள் முல்லை. எனக்கு இப்போது சின்னப் புள்ளையின் மீதான வெறுப்புடன் கூடவே கொஞ்சம் ஆர்வமும் சேர்ந்து கொண்டது.</strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>இடையில் ஒருமுறை புதிதாய் வந்த ஒரு இளம் டாக்டர் சின்னப் புள்ளையை மருத்துவமனையில் இருந்து விரட்டி அடித்து விட்டார், ஐந்தாறு நாட்களாய் சின்னப் புள்ளை மருத்துவமனையில் இருந்து கொஞ்சத் தொலைவில் இருக்கிற ரயில் நிலையத்தில் படுத்திருப்பதை கருப்பையாவும், திரவியமும் பார்த்ததாகச் சொன்னார்கள். </strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>ஆறாவது நாள் என்ன மாயம் நடந்ததோ தெரியாது அந்த இளம் டாக்டர் தன்னுடைய காரிலேயே சின்னப்புள்ளையைக் கூட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தார், சின்னப்புள்ளைக்கு நல்ல ஒரு உணவகத்தில் பகல் உணவு வாங்கித் தருமாறு தன்னுடைய உதவியாளர்களை அவர் விரட்டினார். பிறகு தான் மாற்றலாகிப் போகும் வரையில் தன்னுடைய தாயைப் போல அவர் கவனித்துக் கொண்டார்.</strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>ஒரு நாள் நள்ளிரவில் ஐயோ ஐயோ என்று அடித்து அழுதபடி வந்து நின்றார்கள் பத்துப் பதினைந்து மனிதர்கள், வண்டியில் இருந்து இறக்கப்பட்டாள் இருபத்தைந்து வயது நிரம்பிய இளம்பெண்ணொருத்தி, அவளது உடல் ஒரு பெரிய திருமண வீட்டின் சமையலுக்குப் பயன்படுத்திய விறகைப் போல கருகி இருந்தது, என்னோடு இருந்த இரண்டு செவிலியர்களில் ஒருத்தி அப்போது தான் வேலைக்குச் சேர்ந்திருந்தாள், இன்னொருவளோ தன்னுடைய உறக்கம் எந்த விதத்திலும் பாதிப்படைந்து விடக் கூடாது என்பதில் திட்டவட்டமாக இருந்தாள். நான் அருகில் செல்லப் பயந்தும், செல்லாமல் இருக்கக் கூசியுமாய் இடைப்பட்டிருந்தேன்.</strong></font></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2012/01/hospital20bed.jpg"><font color="#9b00d3"><strong><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="hospital%20bed" border="0" alt="hospital%20bed" src="http://tamizharivu.files.wordpress.com/2012/01/hospital20bed_thumb.jpg?w=244&#038;h=178" width="244" height="178" /></strong></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>மருத்துவமனை ஊழியர்களான ஆண்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம், எங்கெல்லாம் காசு பறிக்கலாம், எப்படியெல்லாம் இந்த எளிய மனிதர்களைப் பந்தாடிப் பார்க்கலாம் என்பதில் கைதேர்ந்தவர்களாய் இருந்தார்கள் அவர்கள். உடலெங்கும் மருந்தெல்லாம் தடவி அந்தப் பெண்ணைப் படுக்கையில் கிடத்தி இருந்தாலும், அருகில் இருக்க அஞ்சி விலகிப் போனார்கள் உறவினர்கள், இறக்கப் போகும் இளம்பெண்ணுக்கு அருகில் இருந்தாள் ஆவி பிடித்து ஆட்டி வைக்கும் என்பது அவர்களின் பாழாய்ப் போன நம்பிக்கையாய் வேறு இருந்து தொலைத்தது. </strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>அம்மா, எரியுதே, எரியுதே என்று அலறித் துடித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் அழுகுரல் ஒரு கருநாகத்தின் பிளவுற்ற நாவைப் போல அருகில் இருக்கும் மனிதர்களின் செவிகளுக்குள் புகுந்து நெஞ்சைப் பிசைந்து காலத்தைக் கனக்க வைப்பதாய் இருந்தது.</strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>அப்போது எங்கிருந்தோ வந்திருந்த சின்னப்புள்ளை அந்தப் படுக்கைக்கு அருகில் நின்று கொண்டிருந்தாள், படுக்கையின் ஒரு முனையில் அமர்ந்து அந்த இளம்பெண்ணின் பாதங்களை வருடியவாறு ஏதோ பேசிக் கொண்டிருந்தாள், பிறகு மெல்ல அவளுக்கு அதிகமாய் வலிக்கிற பகுதிகளில் எல்லாம் மருந்தைத் தடவி தலையைக் கோதி ஆசுவாசப் படுத்தினாள் சின்னைப்புள்ளை. </strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>முக்கால் மணி நேரத்தில் அந்த இளம்பெண்ணின் அலறல் முற்றிலுமாய் நின்று போயிருந்தது, சின்னப் புள்ளையின் மடியில் தலை வைத்து பாதி வெந்து போன தனது கண்களை மேலே உயர்த்தி சின்னப் புள்ளையிடம் ஏதோ கொண்டிருந்தாள் அந்த இளம் பெண். பிறகு அவர்கள் இருவரும் உரையாடத் துவங்கினார்கள். </strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>தான் உயிருக்குயிராய் நேசித்த தன் கணவன் தன்னை மறந்து விட்டு வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்ட கதையை அந்த இரவில் சின்னப்புள்ளையிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் பாதி கருகிய அந்த இளம்பெண். அவளுடைய வலியின் பாதியை சின்னப்புள்ளை அந்த இரவில் ஒரு வண்ணத்துப் பூச்சியின் மகரந்த உறிஞ்சளைப் போல உறிஞ்சிக் கொண்டிருந்தாள். </strong></font></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2012/01/the-hands-2.jpg"><font color="#9b00d3"><strong><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="" border="0" alt="" src="http://tamizharivu.files.wordpress.com/2012/01/the-hands-2_thumb.jpg?w=244&#038;h=171" width="244" height="171" /></strong></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>தான் இனிப் பிழைக்க முடியாதென்றும், பிழைத்திருக்க விரும்பவில்லை என்றும் சொல்லி விட்டு சின்னப்புள்ளையின் அழுக்கடைந்த சேலைத் தலைப்பில் முகம் புதைத்துக் குலுங்கிக் குலுங்கி அழுதால் அந்தப் பெண். இரவு இருவரையும் வேடிக்கை பார்த்தபடி எந்த மாற்றங்களும் இன்றி தன் பாட்டில் நகர்ந்து கொண்டே இருந்தது. </strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>விடிகாலைப் பொழுதில் சின்னப்புள்ளையின் மடியிலேயே இறந்து போயிருந்தாள் அந்தப் பெண், கால்களை அசைக்காமல் ஒரு மரக்கட்டையைப் போல அந்தப் படுக்கையில் அமர்ந்திருந்த சின்னப்புள்ளையை மருத்துவர் வந்து எழுப்பினார், விலகி சரிந்து கிடந்த அந்த இளம்பெண்ணின் துணிகளை உறங்கும் மகளுக்கு ஆடை திருத்தும் ஒரு தாயைப் போல சின்னப்புள்ளை சரி செய்த போது மருத்துவரின் கண்கள் கலங்கி இருப்பதை எதிரில் இருந்த கண்ணாடி சரியாகக் குறித்துக் கொண்டது.</strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>மறுநாள் இரவு வந்திருந்தது இப்போது, நான் எனது பணிகளை முடித்துக் கொண்டு கொஞ்ச நேரம் கண்ணயரலாம் என்கிற முடிவுக்கு வந்து எனது படுக்கைக்கு அருகில் வந்தேன், பக்கத்துப் படுக்கையில் எந்தச் சலனங்களும் இல்லாமல் தனது வழக்கமான குறட்டைச் சத்தத்தோடு உறங்கிக் கொண்டிருந்தாள் சின்னப் புள்ளை. </strong></font></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2012/01/oympic_mtns__sunset.jpg"><font color="#9b00d3"><strong><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="Oympic_Mtns__Sunset" border="0" alt="Oympic_Mtns__Sunset" src="http://tamizharivu.files.wordpress.com/2012/01/oympic_mtns__sunset_thumb.jpg?w=244&#038;h=163" width="244" height="163" /></strong></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>எனது மனம் கண்களின் வழியாக ஒரு தெளிந்த நீரோடையைப் போல அந்தப் பெண்ணின் பாதங்களை நோக்கி ஓடியது, வெளியே இரவு ஒரு அற்புதமான நிகழ்வாய் இருந்தது, நாம் நேசிக்கிற அல்லது நம்மை நேசிக்கிற மனிதர்களின் ஊடே ஓடாடிக் களைத்துப் பின் கயிற்றுக் கட்டிலில் படுத்தபடி தெளிந்த வானத்தின் ஊடாக மிதக்கிற சில விண்மீன்களுக்கு இடையே இன்றைய உறக்கம் நிகழும் போலிருந்தது, வானம் ஒரு மெல்லிய துணிச் சுருளைப் போல சுருண்டு மருத்துவமனை மரங்களின் வழியாய் இறங்கி சின்னப்புள்ளையின் மடியில் சேலையாகிப் புரண்டு கொண்டிருந்தது. </strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong></strong></font></p>
<h2 align="center"><font color="#ff0000">************</font></h2>
<p><font color="#9b00d3"><strong></strong></font></p>
<p><font color="#9b00d3"><strong></strong></font></p>
<p><font color="#9b00d3"><strong></strong></font></p>
<p><font color="#9b00d3"><strong></strong></font></p>
<p><font color="#9b00d3"><strong></strong></font></p>
<p><font color="#9b00d3"><strong></strong></font></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/tamizharivu.wordpress.com/3094/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/tamizharivu.wordpress.com/3094/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/tamizharivu.wordpress.com/3094/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/tamizharivu.wordpress.com/3094/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/tamizharivu.wordpress.com/3094/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/tamizharivu.wordpress.com/3094/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/tamizharivu.wordpress.com/3094/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/tamizharivu.wordpress.com/3094/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/tamizharivu.wordpress.com/3094/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/tamizharivu.wordpress.com/3094/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/tamizharivu.wordpress.com/3094/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/tamizharivu.wordpress.com/3094/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/tamizharivu.wordpress.com/3094/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/tamizharivu.wordpress.com/3094/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamizharivu.wordpress.com&amp;blog=3902339&amp;post=3094&amp;subd=tamizharivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamizharivu.wordpress.com/2012/01/25/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1-%e0%ae%a4/feed/</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/53ac03245aa7ccb9e51dbd80eb41ca47?s=96&#38;d=http%3A%2F%2F1.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96&#38;r=G" medium="image">
			<media:title type="html">கை.அறிவழகன்</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2012/01/7700495-lg_thumb.jpg" medium="image">
			<media:title type="html">7700495-lg</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2012/01/katherine-casaban-rose_thumb.jpg" medium="image">
			<media:title type="html">katherine-casaban-rose</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2012/01/hospital20bed_thumb.jpg" medium="image">
			<media:title type="html">hospital%20bed</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2012/01/the-hands-2_thumb.jpg" medium="image" />

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2012/01/oympic_mtns__sunset_thumb.jpg" medium="image">
			<media:title type="html">Oympic_Mtns__Sunset</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>&quot;தகிதா&quot; &#8211; தமிழோடு அழைக்கிறது</title>
		<link>http://tamizharivu.wordpress.com/2011/12/12/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1/</link>
		<comments>http://tamizharivu.wordpress.com/2011/12/12/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1/#comments</comments>
		<pubDate>Mon, 12 Dec 2011 07:50:32 +0000</pubDate>
		<dc:creator>கை.அறிவழகன்</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">https://tamizharivu.wordpress.com/?p=3075</guid>
		<description><![CDATA[இளம் தலைமுறை இளைஞர்களிடையே அழுத்தமாய் பதிவாகி இருக்கும் பதிப்பகம் “தகிதா”, கோவையில் இருந்து இயங்கினாலும் உலகெங்கிலும் தமிழ் நெஞ்சங்களில் இமயம் போல் வீற்றிருக்கும் இந்தப் பெயரின் பின்னால் ஒரு பேராசிரியரின் உழைப்பும், தமிழும் கலந்திருக்கிறது, முனைவர் மணிவண்ணன், பதிப்புலகில் காணப்பெறும் இடர்ப்பாடுகளில் இருந்து தமிழை இன்னும் இளமையாய் மாற்றும் அளப்பரிய பணிகளைத் தொய்வின்றி நிகழ்த்தி வரும் ஒரு அரிய மனிதர். தகிதா தனது இரண்டாம் ஆண்டு நூல்களை வெற்றிகரமாய் முழுமையாக்கி வெளியிடுவதற்கும் தயாராகி விட்டது, கோவையில் நடைபெறும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamizharivu.wordpress.com&amp;blog=3902339&amp;post=3075&amp;subd=tamizharivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p align="justify"><strong><span style="color:#9b00d3;"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/12/387554_320498194645956_100000573330162_1204432_20368253_n.jpg"><img style="background-image:none;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;margin-right:auto;padding-top:0;border:0;" title="387554_320498194645956_100000573330162_1204432_20368253_n" src="http://tamizharivu.files.wordpress.com/2011/12/387554_320498194645956_100000573330162_1204432_20368253_n_thumb.jpg?w=243&#038;h=244" alt="387554_320498194645956_100000573330162_1204432_20368253_n" width="243" height="244" border="0" /></a></span></strong></p>
<p align="justify"><strong><span style="color:#9b00d3;">இளம் தலைமுறை இளைஞர்களிடையே அழுத்தமாய் பதிவாகி இருக்கும் பதிப்பகம் “தகிதா”, கோவையில் இருந்து இயங்கினாலும் உலகெங்கிலும் தமிழ் நெஞ்சங்களில் இமயம் போல் வீற்றிருக்கும் இந்தப் பெயரின் பின்னால் ஒரு பேராசிரியரின் உழைப்பும், தமிழும் கலந்திருக்கிறது, முனைவர் மணிவண்ணன், பதிப்புலகில் காணப்பெறும் இடர்ப்பாடுகளில் இருந்து தமிழை இன்னும் இளமையாய் மாற்றும் அளப்பரிய பணிகளைத் தொய்வின்றி நிகழ்த்தி வரும் ஒரு அரிய மனிதர்.</span></strong></p>
<p align="justify"><strong><span style="color:#9b00d3;">தகிதா தனது இரண்டாம் ஆண்டு நூல்களை வெற்றிகரமாய் முழுமையாக்கி வெளியிடுவதற்கும் தயாராகி விட்டது, கோவையில் நடைபெறும் வண்ணமிகு விழாவில் இந்த ஆண்டின் தகிதா படைப்பாளர்கள் அணிவகுக்கப் போகிறார்கள், வருகிற டிசம்பர் திங்கள் 24 ஆம் நாள் கோவை காந்தி சிலை அருகில் அமைந்திருக்கும் &#8220;ஆத்ரா&#8221; மன்றத்தில் தகிதாவின் நூல் வெளியீட்டு விழா இனிதே நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் தமிழ் இலக்கியத்தின் வாசகர்கள், படைப்பிலக்கிய முன்னோடிகள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க இசைந்திருக்கிறார்கள். </span></strong></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/12/388104_308564632505979_100000573330162_1172594_2037874103_n.jpg"><img style="background-image:none;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;margin-right:auto;padding-top:0;border:0;" title="388104_308564632505979_100000573330162_1172594_2037874103_n" src="http://tamizharivu.files.wordpress.com/2011/12/388104_308564632505979_100000573330162_1172594_2037874103_n_thumb.jpg?w=244&#038;h=189" alt="388104_308564632505979_100000573330162_1172594_2037874103_n" width="244" height="189" border="0" /></a></p>
<p align="justify"><strong><span style="color:#9b00d3;">தமிழில் பதிப்புலகம் எளிய மனிதர்கள், இளம் தலைமுறை எழுத்தாளர்கள் தொட்டு விடும் தொலைவிலேயே இருக்கிறது என்கிற புதிய நம்பிக்கையை தனது கடும் உழைப்பாலும், தமிழின் மீது கொண்ட காதலாலும் மீண்டும் ஒரு முறை உறுதி செய்திருக்கிறார் முனைவர் மணிவண்ணன்.</span></strong></p>
<p align="justify"><strong><span style="color:#9b00d3;">இந்த விழா தமிழின் படைப்புலக மகுடங்களில் ஒரு மறைக்க முடியாத மணிமுடியாக வீற்றிருக்கும் என்பதில் தமிழை நேசிப்பவர்கள் யாரும் மறுக்க மாட்டார்கள், தகிதா பதிப்பகத்தின் சார்பாகவும், தகிதா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு படைப்பாளிகளின் சார்பாகவும், இந்த விழாவுக்கு மேன்மை மிக்க நண்பர்கள் மற்றும் தமிழ்க் குடும்பத்தினர் அனைவரையும் எதிர் நோக்குகிறோம்.</span></strong></p>
<p align="justify"><strong><span style="color:#9b00d3;">வாருங்கள் நண்பர்களே கோவையில் சந்திப்போம், அன்னைத் தமிழின் நிழலில் கொஞ்சம் இளைப்பாறுவோம்.</span></strong></p>
<p align="justify"><strong><span style="color:#9b00d3;"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/12/229716_254764151219361_100000573330162_968376_1887234_n.jpg"><img style="background-image:none;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;margin-right:auto;padding-top:0;border:0;" title="229716_254764151219361_100000573330162_968376_1887234_n" src="http://tamizharivu.files.wordpress.com/2011/12/229716_254764151219361_100000573330162_968376_1887234_n_thumb.jpg?w=219&#038;h=170" alt="229716_254764151219361_100000573330162_968376_1887234_n" width="219" height="170" border="0" /></a></span></strong></p>
<p align="justify"><strong><span style="color:#9b00d3;">தகிதா இரண்டாம் ஆண்டின் படைப்புகள் மற்றும் படைப்பாளிகள்:</span></strong></p>
<p align="center"><strong><span style="color:#ff0000;">• நீர் தேடும் வேர்கள் &#8211; ராமசாமி </span></strong></p>
<p align="center"><strong><span style="color:#ff0000;">• நீர்த்தடம் &#8211; இரத்னப்ரியன் </span></strong></p>
<p align="center"><strong><span style="color:#ff0000;">• கற்கள் எரியாத குளம் &#8211; விநாயகமூர்த்தி </span></strong></p>
<p align="center"><strong><span style="color:#ff0000;">• மண்ணிழந்த தேசத்து மலர்கள் &#8211; கோபிநாத் </span></strong></p>
<p align="center"><strong><span style="color:#ff0000;">• கனவு விழிகள் &#8211; இராஜேந்திரகுமார் </span></strong></p>
<p align="center"><strong><span style="color:#ff0000;">* இலையுதிர்காலத்தின் முதல் இலை &#8211; பிராங்ளின் குமார் </span></strong></p>
<p align="center"><strong><span style="color:#ff0000;">* பூ மலர்த்தும் முட்கள் &#8211; தேவிபிரியா </span></strong></p>
<p align="center"><strong><span style="color:#ff0000;">* ஐயப்ப மாதவன் </span></strong></p>
<p align="center"><strong><span style="color:#ff0000;">• பெய்த நூல் – மணிவண்ணன்</span></strong></p>
<p align="center"><strong><span style="color:#ff0000;">• முற்றத்து மரங்கள் &#8211; கை.அறிவழகன்</span></strong></p>
<p align="justify"><span style="color:#9b00d3;"><strong>இந்த ஒன்பது நூல்களின் இடையே முத்தாய்ப்பாக <span style="color:#ff0000;">“தகிதாவின் காலாண்டு கவிதைச் சிற்றிதழ்”</span> முற்றிலும் புதிய உள்ளடக்கங்களோடு வெளியாகிறது.</strong></span></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/12/mutrathu-marangal.jpg"><img style="background-image:none;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;margin-right:auto;padding-top:0;border:0;" title="mutrathu marangal" src="http://tamizharivu.files.wordpress.com/2011/12/mutrathu-marangal_thumb.jpg?w=159&#038;h=244" alt="mutrathu marangal" width="159" height="244" border="0" /></a></p>
<p align="center"><strong><span style="color:#9b00d3;">நாள் &#8211; 24 &#8211; 12 &#8211; 2011 (சனிக்கிழமை)</span></strong></p>
<p align="center"><strong><span style="color:#9b00d3;">நேரம் &#8211; காலை பத்து மணி</span></strong></p>
<p align="center"><strong><span style="color:#9b00d3;">இடம் &#8211; கோவை</span></strong></p>
<p align="center"><strong><span style="color:#9b00d3;">மன்றம் &#8211; ஆத்ரா மன்றம் (பேரறிஞர் அண்ணா சிலை அருகில்) </span></strong></p>
<h2 align="center"><span style="color:#ff0000;">***********</span></h2>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/tamizharivu.wordpress.com/3075/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/tamizharivu.wordpress.com/3075/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/tamizharivu.wordpress.com/3075/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/tamizharivu.wordpress.com/3075/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/tamizharivu.wordpress.com/3075/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/tamizharivu.wordpress.com/3075/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/tamizharivu.wordpress.com/3075/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/tamizharivu.wordpress.com/3075/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/tamizharivu.wordpress.com/3075/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/tamizharivu.wordpress.com/3075/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/tamizharivu.wordpress.com/3075/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/tamizharivu.wordpress.com/3075/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/tamizharivu.wordpress.com/3075/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/tamizharivu.wordpress.com/3075/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamizharivu.wordpress.com&amp;blog=3902339&amp;post=3075&amp;subd=tamizharivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamizharivu.wordpress.com/2011/12/12/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/53ac03245aa7ccb9e51dbd80eb41ca47?s=96&#38;d=http%3A%2F%2F1.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96&#38;r=G" medium="image">
			<media:title type="html">கை.அறிவழகன்</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/12/387554_320498194645956_100000573330162_1204432_20368253_n_thumb.jpg" medium="image">
			<media:title type="html">387554_320498194645956_100000573330162_1204432_20368253_n</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/12/388104_308564632505979_100000573330162_1172594_2037874103_n_thumb.jpg" medium="image">
			<media:title type="html">388104_308564632505979_100000573330162_1172594_2037874103_n</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/12/229716_254764151219361_100000573330162_968376_1887234_n_thumb.jpg" medium="image">
			<media:title type="html">229716_254764151219361_100000573330162_968376_1887234_n</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/12/mutrathu-marangal_thumb.jpg" medium="image">
			<media:title type="html">mutrathu marangal</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>இளவேனிற் காலத்தின் கடைசிப் பந்து.</title>
		<link>http://tamizharivu.wordpress.com/2011/11/24/%e0%ae%87%e0%ae%b3%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf/</link>
		<comments>http://tamizharivu.wordpress.com/2011/11/24/%e0%ae%87%e0%ae%b3%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Thu, 24 Nov 2011 12:23:28 +0000</pubDate>
		<dc:creator>கை.அறிவழகன்</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">https://tamizharivu.wordpress.com/?p=3064</guid>
		<description><![CDATA[சாலையோர மரங்களின் இலைகளில் மெல்லப் படியத் துவங்குகிறது முன்னிரவுப் பனி, கனத்த தொப்பிகளை அணிந்தபடி வீடுகளை நோக்கி நகரத் துவங்குகிறார்கள் மனிதர்கள், நீண்ட இரவின் கொண்டாட்டங்களைத் கண்சிமிட்டியபடி பார்க்கத் துவங்குகிறது இரவு விடுதிகளின் மங்கலான நியான் விளக்குகள், வார்னர் பல்கலைக் கழகத்தின் வாயிலில் இருந்த காவலர் தனது கையேட்டில் வருகையைப் பதிவு செய்யத் துவங்குகிறார். பொன்னிறம் கலந்த அரக்கு கோட் அணிந்த ஒரு முதியவர் தான் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட முடியாதென்றும், தான் நன்கொடை வழங்க வந்திருப்பதாகவும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamizharivu.wordpress.com&amp;blog=3902339&amp;post=3064&amp;subd=tamizharivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/11/spring-1181.jpg"><font color="#9b00d3"><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="spring-1181" border="0" alt="spring-1181" src="http://tamizharivu.files.wordpress.com/2011/11/spring-1181_thumb.jpg?w=193&#038;h=244" width="193" height="244" /></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3">சாலையோர மரங்களின் இலைகளில் மெல்லப் படியத் துவங்குகிறது முன்னிரவுப் பனி, கனத்த தொப்பிகளை அணிந்தபடி வீடுகளை நோக்கி நகரத் துவங்குகிறார்கள் மனிதர்கள், நீண்ட இரவின் கொண்டாட்டங்களைத் கண்சிமிட்டியபடி பார்க்கத் துவங்குகிறது இரவு விடுதிகளின் மங்கலான நியான் விளக்குகள், வார்னர் பல்கலைக் கழகத்தின் வாயிலில் இருந்த காவலர் தனது கையேட்டில் வருகையைப் பதிவு செய்யத் துவங்குகிறார். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">பொன்னிறம் கலந்த அரக்கு கோட் அணிந்த ஒரு முதியவர் தான் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட முடியாதென்றும், தான் நன்கொடை வழங்க வந்திருப்பதாகவும் காவலரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார், காவலர் கண்டிப்பான குரலில் அப்படி அனுமதிக்கத் தனக்கு அதிகாரம் இல்லையென்றும், முதியவர் பல்கலை நிர்வாகத்தின் அனுமதிச் சீட்டு வைத்திருந்தால் மட்டுமே கை எழுத்தின்றி உள்நுழைய முடியும் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">நகரத்தின் அதீத ஓசைகளை தனக்குள் உள்வாங்கி செதுக்கப்பட்ட புல்வெளிகளின் ஓரங்களில் அமைதியை வழியவிட்டபடி காற்றில் அசைந்து கொண்டிருந்தது வார்னர் பல்கலைக் கழகப் பூங்கா. மரப் பலகைகளால் நுட்பமாக வடிவமைக்கப்பட்டிருந்த சாய்வு நாற்காலிகளில் பல காலியாகிக் கிடந்தது, பனிப் பொழிவுக் காலங்களில் மாலை ஐந்து மணிக்கெல்லாம் மாணவர்கள் வீடு திரும்பி விடுவார்கள்.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">குளிரை விரட்ட ஒருவரோடு ஒருவர் நெருக்கமாய் அமர்ந்திருக்கும் சில காதலர்களை மரத் தண்டுகள் மறைத்துக் கொண்டிருந்தன, காதலர்களுக்கான விதி உலகெங்கும் பொதுவானதாகவே இருக்கிறது, யாரும் பார்க்காத நேரமென்று அவர்கள் கருதும் நேரங்களில் இதழ் சுவைக்கிறார்கள், கட்டித் தழுவிக் கொண்டு அன்பைப் பரிமாறுகிறார்கள். அப்படிச் செய்து முடித்தவர்கள் பலர் வயதான பின்பு இது பொது இடத்தில் அத்து மீறல் என்று புலம்புகிறார்கள், வாய்ப்புக் கிடைக்காத பலர் வயிறெரிகிறார்கள். உலகம் அப்படியே கொஞ்சம் அமுக்கப்பட்ட உருண்டையாகவே சுற்றிக் கொண்டிருக்கிறது.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">வார்னர் உள்ளரங்கு பாதி நிறைவடைந்திருந்தபோது பேராசிரியர் அக்கோ பெர்னாண்டோ மேடையில் தோன்றி உரையாற்றத் துவங்கினார், மேடையில் பின்புறத்தில் &quot;மனநலம் சரியில்லாத குழந்தைகளுக்கான நிதி சேகரிப்பு நாள்&quot; என்று சிவப்பு நிற எழுத்துக்களில் வண்ணம் தீட்டப்பட்டிருந்தது. </font></p>
<p align="justify"><font color="#9b00d3">அக்கோ, வார்னர் பல்கலையின் வரலாற்றில் இது ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட நாள் என்றும், இந்த நாளில் கடவுளின் குழந்தைகளுக்கு நம்மால் இயன்றவற்றை வழங்க நாம் கடமைப்பட்டிருப்பதாகவும் மெல்லிய கீச்சுக் குரலில் பேசிக் கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்த பலரது காதுகளைச் சென்று அடையாத அக்கோவின் உரையைத் தாண்டி முணுமுணுப்பும், காற்றின் அலை குரலும் உள்ளரங்கில் சுதந்திரமாய் சுற்றிக் கொண்டிருந்தன. </font></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/11/memorialgarden.jpg"><font color="#9b00d3"><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="The University of Georgia&#039;s Main Campus sustainable design projects.&#013;&#010;Athens, GA&#013;&#010;" border="0" alt="The University of Georgia&#039;s Main Campus sustainable design projects.&#013;&#010;Athens, GA&#013;&#010;" src="http://tamizharivu.files.wordpress.com/2011/11/memorialgarden_thumb.jpg?w=244&#038;h=175" width="244" height="175" /></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3">இப்போது ஷேன் கோவர்டின் தந்தை நம்மிடையே உரையாற்றுவார் என்று சொல்லி விட்டுத் தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார் அக்கோ. ஷேன் கோவர்ட் யாரென்று அங்கிருக்கும் பலருக்குத் தெரியாது, ஆனாலும் அந்த நடு வயதுத் தந்தையை கூட்டம் ஒரு முறை கூர்ந்து பார்த்துக் கொண்டது. அவர் மெல்ல மேடையேறி ஒலிபெருக்கியின் கோணத்துக்குத் தன் முகத்தை பொருத்திக் கொண்டார், இரண்டு முறை கைகளால் தட்டி ஒலிபெருக்கி வேலை செய்கிறதா என்று சோதனை செய்து கொண்டு அவர் கூட்டத்தினரைப் பார்த்துப் பேசத் துவங்கினார்.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">இந்த உலகில் எல்லாவற்றையும் இயற்கை சரியாகப் படைத்திருக்கிறதா? அப்படி சரியாகப் படைக்கப்பட்டிருந்தால் என் சின்னஞ்சிறு மகன் ஷேன் கோவர்ட் ஏன் சரியாகப் படைக்கப்பட்டிருக்கவில்லை, எல்லா சின்னஞ்சிறு மனிதர்களையும் போல அவனால் தனக்கான வேலைகளையும் செய்து கொள்ள முடிந்திருக்கவில்லை, அவன் கற்றுக் கொள்வதில் நிறைய நேரம் செலவிட்டான், கடவுளோ இயற்கையோ அவனை ஏன் இப்படி ஒரு கடினமான வாழ்க்கையை எதிர் கொள்ளப் பணித்திருந்தார்கள்? </font></p>
<p align="justify"><font color="#9b00d3">இப்படி ஒரு கேள்வியை கேட்டு விட்டுக் கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தார் ஷேன் கோவர்ட்டின் தந்தை. கூட்டம் இப்போது முணுமுணுப்பதை நிறுத்தி விட்டு நிமிர்ந்து அமர்ந்து கொண்டது, காவலரிடம் சண்டை பிடித்துக் கொண்டிருந்த அந்த வயதான மனிதர் தனது கோட்டின் உள் பைகளில் வைக்கப்பட்டிருந்த மூக்குக் கண்ணாடியை எடுத்துத் துடைக்க ஆரம்பித்தார்.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">ஷேன் கோவர்ட்டின் தந்தை கேட்ட அந்தக் கேள்வி அரங்கின் கடைசி இருக்கைகளில் போய் ஒளிந்து கொண்டது, அதற்கான விடையைத் தேடி கூட்டத்தினரின் கண்கள் அலையத் துவங்கி இருந்தன, அவர்கள் உரையைத் தொடர்ந்து கேட்கும் மனநிலைக்கு வந்திருந்தார்கள்.இப்போது ஷேன் கோவர்ட்டின் தந்தையார் மீண்டும் பேசத் துவங்கினார். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">அது ஒரு இளவேனிற்கால மாலைப் பொழுது கனவான்களே, ஞாயிற்றுக் கிழமைகளின் கணங்களில் எனது சின்னஞ்சிறு மனிதன் ஷேன் கோவர்ட் சில புதியவற்றைக் கற்றுக் கொள்ளப் பழகி இருந்தான். நான் அவனது கைவிரல்களைப் பிடித்து மெல்ல நடத்திச் சென்றேன், எங்களுக்கான சிற்றுண்டியைத் தயாரிப்பதில் மும்முரமாய் இருந்த ஷேன் கோவர்ட்டின் அம்மாவிடம் நாங்கள் தற்காலிகமாய் விடைபெற்றோம், வீதிகளைக் கடந்து நாங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பள்ளி வளாகத்தை அடைந்தோம். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">பள்ளி மைதானத்தின் நடைமேடையில் சிறுவர்கள் அமர்ந்திருந்தார்கள், அவர்களின் கண்களில் அந்த இளவேனிற் கால மரங்களின் கதகதப்பும், தூய்மையும் நிரம்பிக் கிடந்தது, வெவ்வேறு வண்ணங்களில் மழைக்கால தும்பைப் பூக்களின் மீது சிலிர்ப்பாய்ப் பறக்கும் வண்ணத்துப் பூச்கிகளைப் போல அவர்கள் அங்குமிங்குமாய் அலைந்து கொண்டிருந்தார்கள், </font></p>
<p align="justify"><font color="#9b00d3">அவர்களைப் பார்த்தவுடன் ஷேன் கோவர்ட் உற்சாகமடைந்தான், தனது வளைந்த மென்மையான கைவிரல்களால் இன்னொரு கையைத் தட்டி ஓசை வரவழைக்க முயன்று கொண்டிருந்த அவனது முயற்சி அந்த மாலைக்கு மிகப் பொருத்தமான ஒரு செயலாக இருந்தது. </font></p>
<p align="justify"><font color="#9b00d3">அவனது உற்சாகத்தைக் குலைத்து விடாதபடி நான் அவனோடு பேசத் துவங்கினேன், பள்ளி மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி குறித்து அவனிடம் விளக்கிச் சொல்லியபடி நடந்து கொண்டிருந்த போது ஷேன் கோவர்ட் இப்படிக் கேட்டான், </font></p>
<p align="justify"><font color="#9b00d3">&quot;அப்பா, இந்த விளையாட்டுப் போட்டியில் என்னையும் சேர்த்துக் கொள்வார்களா?&quot; அந்தக் கேள்விக்கான விடையைக் கூட என்னிடம் இருந்து கோவர்ட் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் எனக்குள் அந்தக் கேள்வி ஒரு தந்தையின் தவிப்பையும், வலியையும் உண்டாக்கி விட்டிருந்தது. பதில் ஏதும் பேசாமல் நீண்ட அந்தப் பள்ளியின் தாழ்வாரத்தில் நானும் கோவர்ட்டும் பல சுறுசுறுப்பும் துடிப்பும் நிரம்பிய சிறுவர்களைக் கடந்து நடந்து கொண்டிருந்தோம், குளிர் காற்றின் சில்லிட்ட பரவலைத் தாண்டி எனது முகத்தில் வெம்மை பரவி இருந்ததை நான் உணர்ந்தேன்.</font></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/11/cricket.jpg"><font color="#9b00d3"><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="cricket" border="0" alt="cricket" src="http://tamizharivu.files.wordpress.com/2011/11/cricket_thumb.jpg?w=244&#038;h=186" width="244" height="186" /></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3">அமர்ந்திருந்த கிரிக்கெட் குழுவினரின் தலைவனாக இருந்த அந்தச் சிறுவனிடம் சென்று ஷேன் கோவர்ட்டை உங்கள் அணிக்காக விளையாட ஒப்புக் கொள்வீர்களா? என்று தயக்கத்தோடு கேட்டேன், புன்சிரிப்புடன் ஷேன் கோவர்ட்டை ஒருமுறை பார்த்து விட்டு, அந்தச் சிறுவன் இப்படிச் சொன்னான், </font></p>
<p align="justify"><font color="#9b00d3">&quot;ஒரு அணி விளையாடி முடித்து விட்டது அங்கிள், அவர்கள் இருபது ஓவர்களில் நூற்றி நாற்பது ஓட்டங்கள் எடுத்திருக்கிறார்கள், நாங்கள் இப்போது ஆடிக் கொண்டிருக்கிறோம், பதினேழு ஓவர்கள் முடிந்து தொண்ணூற்று மூன்று ஓட்டங்களைப் பதிவு செய்திருக்கிறோம், எங்களிடம் இருப்பதோ இன்னும் மூன்று ஆட்டக்காரர்கள் தான், இருப்பினும் நான் ஷேன் கோவர்ட்டை விளையாட அனுமதிக்கிறேன், வாய்ப்பிருந்தால் அவனும் விளையாடட்டும்&quot; என்று ஒரு முதிர்ந்த மனிதனைப் போலச் சொன்னான். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">சொல்லி முடித்த கையோடு தான் அணிந்திருந்த தனது அணிக்கான கருநீல வண்ண மேலாடையை ஷேன் கோவர்ட்டுக்கு அணிவித்தான், கருநீல நிற மேலாடை ஷேனுக்கு மிகப் பொருத்தமானதாகவும், மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் இருந்தது, நான் ஷேனுக்கு அருகில் அமர்ந்து கொண்டேன், ஷேன் நன்றியோடு என்னை ஒருமுறை பார்த்துச் சிரித்தான், வெம்மை குறைந்து குளிர் காற்றின் விழுதுகள் என் முகத்தில் படியத் துவங்கி இருந்தன.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">நூற்று முப்பத்தி ஓரு ஓட்டங்களை பெற்றிருந்த போது ஒன்பது ஆட்டக்காரர்களை இழந்து தடுமாறியது அணி, இப்போது அணித்தலைவன் ஷேன் கோவர்ட்டின் கைகளில் பாட்டைக் கொடுத்து மைதானத்துக்குள் செல்லுமாறு பணித்தான், ஷேன் கிரிக்கெட் விளையாடுவான், அவனது வலிமை இக்கட்டான இன்றைய ஆட்டத்தில் வெல்லப் போதுமானதாக இல்லையென்றாலும் அணித்தலைவன் ஷேன் கோவர்ட்டால் விளையாட முடியும் என்று நம்பினான். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">ஷேன் கோவர்ட் என்ற அந்தச் சின்னஞ்சிறு மன நலமில்லாத மனிதன் மிகப் பெரிய மைதானத்துக்குள் நுழைந்து அதன் நடுவே நின்று கொண்டிருந்தான். பந்து வீசத் துவங்கிய அந்தச் சிறுவனின் கால்கள் பந்தைச் சுமந்த கைகளோடு ஓடத் துவங்கியபோது எனது இதயத் துடிப்பு அதிகரிக்கத் துவங்கியது. </font></p>
<p align="justify"><font color="#9b00d3">விக்கட்டின் மறுமுனையில் வந்து கொஞ்சம் நிதானித்தான் பந்து வீசும் சிறுவன், அவனது கைகளில் இருந்து வழக்கமாய் வரும் வேகத்தில் இல்லாமல் இம்முறை மிக மெதுவாகவும், மட்டைக்கு நேராகவும் வந்தது பந்து, ஷேன் மட்டையைச் சுழற்றிக் காற்றில் திரும்பினான், நூழிழையில் தப்பிச் சென்றது பந்து, &quot;ஊவ்வ்வ்&quot; என்று வாயில் விரல் வைத்துக் கடித்துக் கொண்டான் அணித்தலைவன், </font></p>
<p align="justify"><font color="#9b00d3">இப்போது சில சிறுவர்கள் எழுந்து நின்று &quot;கம் ஆன் ஷேன், கம் ஆன் ஷேன், கம் ஆன் ஷேன்&quot; என்று கத்தத் துவங்கினார்கள், இம்முறை அதிக தூரம் செல்லாமல் மிகக் குறைந்த தூரத்தில் இருந்து மட்டையிலேயே விழுமாறு பந்து வீசினான் பந்து வீசும் சிறுவன், தனது பலம் முழுவதும் திரட்டி ஷேன் மட்டையைச் சுழற்றினான், பந்து மட்டையில் பட்டு ஷேனின் இடது பக்கமாக ஓடத் துவங்கியது, &quot;ஷேன் ஓடு ஓடு&quot; என்று நாலாபக்கமும் இருந்து சிறுவர்கள் குரல் கொடுக்கவும், ஷேன் ஓடத் துவங்கினான், மூச்சிரைக்க ஓடி ஒரு ஓட்டம் எடுத்து முடித்த போதும் பந்து திரும்பி வந்திருக்கவில்லை, அணித்தலைவன் இப்போது &quot;ஷேன் இன்னொரு ஓட்டம் எடு, ஓடு, ஓடு&quot; என்று மைதானத்துக்குள் நுழைந்து கத்தினான். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">கைகளைத் தட்டியபடி நானும் ஷேனின் இன்னொரு ஓட்டத்தை காணக் காத்திருந்தேன், ஷேன் இப்போது மிகவும் களைத்திருந்தான், அவனால் மற்ற சிறுவர்களைப் போல அத்தனை வேகமாக ஓட முடியாது, ஆனாலும் ஷேன் என்னைப் பார்த்துச் சிரித்தபடி இரண்டாவது ஓட்டத்திற்கு முயன்று வெற்றியும் பெற்றான். இப்போது அணியின் ஓட்டங்கள் நூற்று முப்பத்து மூன்று. </font></p>
<p align="justify"><font color="#9b00d3">மூன்றாவது பந்தை மிக மெதுவாகவும், மட்டையில் படுமாறும் வீசிய சிறுவனின் கண்களில் ஷேன் ஓட்டங்களை எடுக்க வேண்டும் என்கிற அளவற்ற அன்பு நிறைந்திருந்தது, அந்த அன்பு ஷேனின் மட்டையை பந்தோடு இணைக்கப் போதுமானதாக இருந்தது, இன்னுமொரு ஓட்டத்தை எடுத்திருந்தான் ஷேன், அடுத்த பந்தை சந்தித்த உயரமான மற்றொரு ஆட்டக்காரச் சிறுவன் பந்தை ஓங்கி அறைந்தான், </font></p>
<p align="justify"><font color="#9b00d3">பந்தைக் கவனிக்காமலேயே ஓடத் துவங்கிய அந்தச் சிறுவன் ஷேன் இன்னும் ஓடத் துவங்காததை கவனித்தான், &quot;ஷேன் ஓடு, ஓடு&quot; என்று கத்திக் கொண்டே தன்னை நோக்கி ஓடி வந்த அந்தச் சிறுவனைப் பார்த்தவுடன் தான் ஓட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து பாதி தூரம் ஓடி முடித்திருந்தான் ஷேன், கனத்துக் கிடந்த அந்த மட்டையைத் தூக்கியபடி ஓடிக் கொண்டிருந்த ஷேனை இப்போது இரண்டு அணி வீரர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள், பந்து எல்லைக் கோட்டைத் தாண்டி இருந்தது. </font></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/11/untitled.png"><font color="#9b00d3"><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="untitled" border="0" alt="untitled" src="http://tamizharivu.files.wordpress.com/2011/11/untitled_thumb.png?w=167&#038;h=244" width="167" height="244" /></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3">நான்கு ஓட்டங்கள், அணியின் ஓட்டங்கள் நூறு முப்பத்து எட்டு, இப்போது ஷேனின் முறை, ஒரே ஒரு ஓட்டத்தை எடுத்தால் அணி சமநிலை பெறும், இரண்டு என்றால் வெற்றி, ஆட்டம் இழந்தால் எதிர் அணி வெற்றி பெறும், இம்முறை பந்து வீசிய சிறுவன் தனது வழக்கமான வேகத்திலேயே மட்டைக்கு நேராக வீசினான், ஷேன் மட்டையைச் சுழற்றாமல் பந்தைத் தடுத்தான். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">பந்து நகரத் துவங்கியது, இடது பக்கமாக மிக அருகில் நின்றிருந்த எதிர் அணி வீரனின் கையில் பந்து சிக்கிக் கொண்டது, ஷேன் மூச்சிரைக்க ஓடத் துவங்கினான், களைப்பிலும், அயர்ச்சியிலும் ஷேன் இருமியபடி மட்டையைத் தூக்கிக் கொண்டு ஓடினான், பாதி தூரத்தில் இருக்கும் ஷேனின் விக்கட்டை எறிந்து வீழ்த்தி விடுவதற்கான எல்லா வாய்ப்புகளும் பந்தை வைத்திருந்த சிறுவனிடம் இருந்தது, ஆனால் யாரும் எதிர்பார்க்காத மாதிரி அந்தச் சிறுவன் பந்தை விக்கெட் கீப்பரின் தலைக்கு மேலே வீசி எறிந்தான். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">பந்து யாருமற்ற திசையில் ஓடிக் கொண்டிருந்தது, அதற்குள் ஷேன் இரண்டாவது ஓட்டத்தை முடித்து விட்டிருந்தான், ஷேனின் அணி வீரர்கள் ஓடி வந்து ஷேனைத் தங்கள் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டார்கள், ஷேன் தனது மெல்லிய வளைந்த விரல்களால் ஓசை எழுப்ப முயன்றபடி என்னைப் பார்த்துச் சிரித்தான், தனது தந்தையின் ஆவலைத் தான் பூர்த்தி செய்து விட்டதாக அவன் பெருமையோடு நினைத்துக் கொண்டிருந்தான்.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">சிறுவர்கள் தங்களுக்குள் ஆட்டத்தின் வெவ்வேறு கணங்களைப் பேசிக் கொண்டிருந்த போது நான் அணித்தலைவனான அந்தச் சிறுவனின் கைகளைப் பற்றிக் கொண்டேன், &quot;நன்றி, ஜேம்ஸ், நீ ஷேன் கோவர்ட்டின் வாழ்க்கையை நம்பிக்கையோடு துவக்கி வைத்திருக்கிறாய்&quot;, என்றவுடன், &quot;ஷேன் இன்னும் சிறப்பாக விளையாடுவான் அங்கிள்&quot; என்று உரக்கச் சொல்லி விட்டு விடை பெற்றான்.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">சூரியன் தனது வெம்மையைக் குறைத்துக் கொண்டு மேல் திசையில் மறையத் துவங்கி இருந்த அந்த மாலையில் ஷேன் கோவர்ட் புதிய நம்பிக்கைகளோடு என் கைகளைப் பிடிக்காமல் நடக்கத் துவங்கினான். ஷேன் கோவர்ட் என்ற அந்தச் சின்னஞ்சிறு மனிதன் இரண்டு இளவேனிற் காலங்களுக்குப் பிறகு இறந்து போனான், ஆனாலும் அவனைப் போலவே மனநலம் குன்றி வாழ்க்கையை எதிர்கொள்ளும் குழந்தைகளின் வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர் கொள்ளவும், வெற்றி கொள்ளவும் அவன் எனக்கு உதவி செய்திருந்தான். அவனது நம்பிக்கையை நான் இந்த ஒலிபெருக்கியின் மூலமாக உங்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறேன், நன்றி.” என்று சொல்லி அமர்ந்து கொண்டார் ஷேன் கோவர்ட்டின் தந்தை. </font></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/11/stock-footage-a-beautiful-tree-with-spring-green-life-foliage-basking-in-radiant-sunlight-seamle.jpg"><font color="#9b00d3"><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="stock-footage-a-beautiful-tree-with-spring-green-life-foliage-basking-in-radiant-sunlight-seamless-looping-clip" border="0" alt="stock-footage-a-beautiful-tree-with-spring-green-life-foliage-basking-in-radiant-sunlight-seamless-looping-clip" src="http://tamizharivu.files.wordpress.com/2011/11/stock-footage-a-beautiful-tree-with-spring-green-life-foliage-basking-in-radiant-sunlight-seamle1.jpg?w=244&#038;h=140" width="244" height="140" /></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3">அவரது கண்களில் கண்ணீர் ஓரு மெல்லிய கீற்றுப் போல வழிந்து கொண்டிருந்தது, இப்போது கூட்டம் ஆரவாரித்தது, ஷேன் கோவர்ட்டின் தந்தையைச் சூழ்ந்து கொண்டு பலர் கைகுலுக்கத் துவங்கினார்கள், உரை மிகச் சிறப்பானதாக இருந்ததாக அவரிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார், காவலரோடு சண்டை பிடித்துக் கொண்டிருந்த வயதான அந்த மனிதர். பேராசிரியர் அக்கோ பெர்னாண்டோ முதல் முறையாக பத்தாயிரம் டாலர்களுக்கு மேலாக மனநலம் குன்றிய குழந்தைகளின் வளர்ச்சி நிதியை பதிவு செய்து கொண்டிருந்தார். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">வார்னர் பல்கலைக் கழகத்தின் உள்ளரங்க இருக்கைகளில் படிந்திருக்கும் ஷேன் கோவர்ட்டுக்கான கண்ணீர்த் துளிகள் நாளை காலையில் துடைக்கப்படலாம், ஆனாலும் அந்த ஈரத்தில் இருந்து தான் தழைத்து வளர்கின்றன வார்னர் பல்கலைக் கழகத்தின் மரங்கள். இந்த உலகமும், வாழ்க்கையும் கூட&#8230;.. </font></p>
<p align="justify"><font color="#9b00d3"></font></p>
<p align="justify"><strong><font color="#ff0000">(&quot;ரப்பி பேசச் க்ரோனின்&quot; &quot;யாரும் விளையாடலாம் – (Anyone can Play)&quot; என்ற ஆங்கிலச் சிறுகதையைத் தழுவி எழுதப்பட்டது.)</font></strong></p>
<p align="justify">&#160;</p>
<h3 align="center"><font color="#9b00d3">*************</font></h3>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/tamizharivu.wordpress.com/3064/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/tamizharivu.wordpress.com/3064/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/tamizharivu.wordpress.com/3064/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/tamizharivu.wordpress.com/3064/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/tamizharivu.wordpress.com/3064/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/tamizharivu.wordpress.com/3064/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/tamizharivu.wordpress.com/3064/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/tamizharivu.wordpress.com/3064/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/tamizharivu.wordpress.com/3064/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/tamizharivu.wordpress.com/3064/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/tamizharivu.wordpress.com/3064/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/tamizharivu.wordpress.com/3064/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/tamizharivu.wordpress.com/3064/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/tamizharivu.wordpress.com/3064/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamizharivu.wordpress.com&amp;blog=3902339&amp;post=3064&amp;subd=tamizharivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamizharivu.wordpress.com/2011/11/24/%e0%ae%87%e0%ae%b3%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/53ac03245aa7ccb9e51dbd80eb41ca47?s=96&#38;d=http%3A%2F%2F1.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96&#38;r=G" medium="image">
			<media:title type="html">கை.அறிவழகன்</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/11/spring-1181_thumb.jpg" medium="image">
			<media:title type="html">spring-1181</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/11/memorialgarden_thumb.jpg" medium="image">
			<media:title type="html">The University of Georgia&#039;s Main Campus sustainable design projects.&#013;&#010;Athens, GA&#013;&#010;</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/11/cricket_thumb.jpg" medium="image">
			<media:title type="html">cricket</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/11/untitled_thumb.png" medium="image">
			<media:title type="html">untitled</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/11/stock-footage-a-beautiful-tree-with-spring-green-life-foliage-basking-in-radiant-sunlight-seamle1.jpg" medium="image">
			<media:title type="html">stock-footage-a-beautiful-tree-with-spring-green-life-foliage-basking-in-radiant-sunlight-seamless-looping-clip</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஜாமண்டிரி பாக்ஸ் &#8211; சிறுகதை</title>
		<link>http://tamizharivu.wordpress.com/2011/11/11/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4/</link>
		<comments>http://tamizharivu.wordpress.com/2011/11/11/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4/#comments</comments>
		<pubDate>Fri, 11 Nov 2011 07:10:20 +0000</pubDate>
		<dc:creator>கை.அறிவழகன்</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">https://tamizharivu.wordpress.com/2011/11/11/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4/</guid>
		<description><![CDATA[கந்தசாமி எழுந்து மிதிவண்டியின் பின்புறச் சக்கரங்களின் காற்றளவைக் கைகளால் அழுத்திப் பார்த்தான், கொஞ்சம் காற்றுக் குறைவாக இருப்பதாகவே பட்டது, யோசித்தபடி மிதிவண்டியை உருட்டியபடி சென்று சுந்தரம் வீட்டுக் முன்புறம் வண்டியை நிறுத்திவிட்டு வீட்டின் கம்பிக் கதவைத் திறந்தான், கருப்பும் வெள்ளையும் கலந்த சுந்தரம் வீட்டு நாய் தலையை முன்னும் பின்னும் அசைத்தவாறு குரைக்கத் துவங்கியது, கந்தசாமி அங்கேயே நின்று விட்டான். கடந்த எட்டு வருடங்களாக அந்த நாய் கந்தசாமியைப் பார்த்துக் குறைக்கத்தான் செய்கிறது, இப்படிக்கும் கந்தசாமி இதே [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamizharivu.wordpress.com&amp;blog=3902339&amp;post=3053&amp;subd=tamizharivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/11/ice-cubes-3.jpg"><font color="#9b00d3"><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="ice-cubes-3" border="0" alt="ice-cubes-3" src="http://tamizharivu.files.wordpress.com/2011/11/ice-cubes-3_thumb.jpg?w=244&#038;h=244" width="244" height="244" /></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3">கந்தசாமி எழுந்து மிதிவண்டியின் பின்புறச் சக்கரங்களின் காற்றளவைக் கைகளால் அழுத்திப் பார்த்தான், கொஞ்சம் காற்றுக் குறைவாக இருப்பதாகவே பட்டது, யோசித்தபடி மிதிவண்டியை உருட்டியபடி சென்று சுந்தரம் வீட்டுக் முன்புறம் வண்டியை நிறுத்திவிட்டு வீட்டின் கம்பிக் கதவைத் திறந்தான், கருப்பும் வெள்ளையும் கலந்த சுந்தரம் வீட்டு நாய் தலையை முன்னும் பின்னும் அசைத்தவாறு குரைக்கத் துவங்கியது, கந்தசாமி அங்கேயே நின்று விட்டான். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">கடந்த எட்டு வருடங்களாக அந்த நாய் கந்தசாமியைப் பார்த்துக் குறைக்கத்தான் செய்கிறது, இப்படிக்கும் கந்தசாமி இதே வீதியில் நடமாடிக் கொண்டிருக்கும் பழைய ஆள்தான், பெரும்பாலும் செல்லும் எல்லா ஊர்களிலும் நாய்கள் கந்தசாமியைப் பார்த்துக் குரைக்கத்தான் செய்கின்றன, குரைக்கும் நாய்களாவது பரவாயில்லை, கீழப்பூங்குடியில் ஒரு செவலை நாய் கணுக்காலில் பார்த்துக் கடித்து வைத்து விட்ட தழும்பு இன்னமும் மறைந்தபாடில்லை. </font></p>
<p align="justify"><font color="#9b00d3">நாய்களுக்குக் கந்தசாமியின் மீதெல்லாம் எந்த வெறுப்பும் இல்லை, கந்தசாமி தனது மிதிவண்டியின் பின்னால் கட்டி வைத்திருக்கும் அந்தப் பெட்டியும் அதன் நிறமும் தான் பெரும்பாலான நாய்களுக்குப் பிடிப்பதில்லை, யோசித்தபடி நின்றிருந்த கந்தசாமியை பேருக்குக் கூட ஒரு புன்னகை இல்லாமல் வெளியில் வந்து பார்த்தார் சுந்தரம்.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">&quot;என்ன, கந்தா, பம்ப்பு வேணுமா?&quot; காரணத்தைக் கண்டறிந்து விட்டதை ஒரு சாதனை போல எண்ணியபடி உள்ளே சென்று தொலைக்காட்சியில் மூழ்கி இருந்த மகனிடம் குரல் கொடுத்தார் சுந்தரம் &quot;டேய், மணிகண்டா, அந்தப் பம்ப்ப எடுத்துக் கொண்டு போய் குடு&quot;, &quot;ஏதாவது ஓசி கேட்டு வர்றதே வேலையாப் போச்சு&quot; என்று முனகினார் சுந்தரம். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">சுந்தரம் இரண்டாவதாய்ச் சொன்னது மட்டும் கந்தசாமியின் காதில் சத்தமாகக் கேட்டது, கடைக்குப் போனால் இரண்டு ரூபாய், சுந்தரம் சில நேரங்களில் முகம் சுழித்தாலும் கூட இரண்டு ரூபாய் சேமிக்கப் படுவதை நினைத்தபடி பொறுத்துக் கொள்ள வேண்டியது தான். கடந்த இரண்டு வருடங்களாய் அப்படித்தானே பொறுத்துக் கொள்கிறான்.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">மணிகண்டன் வேண்டா வெறுப்பாக வெளியில் வந்து பம்ப் ஐக் கந்தசாமியின் கைகளில் கொடுத்து விட்டு உள்ளே போனான், &quot;மாமா, அப்படியே திண்ணைல வச்சுட்டுப் போயிருங்க&quot;, என்று மறக்காமல் சொல்லி விட்டுப் போனான் மணிகண்டன், பம்ப்பின் குழாயை மிதிவண்டியின் சக்கரத்தில் பொருத்தி அழுத்தினான் கந்தசாமி, பம்ப்பின் தண்டு வழியாகக் காற்றைச் செலுத்தும் &quot;வாசர்&quot; சரியாக வேலை செய்யவில்லை, அதைச் சரி செய்து இரண்டு சக்கரங்களிலும் காற்றை நிரப்பிக் கொண்டான் கந்தசாமி. </font></p>
<p align="justify"><font color="#9b00d3">பம்ப்பை திண்ணையில் வைத்து விட்டு திண்ணையில் அமர்ந்து சவரம் செய்து கொண்டிருந்த சுந்தரத்திடம் &quot;சுந்தரண்ணே தேங்க்ஸ்&quot; என்றான் கந்தசாமி, கண்களை மட்டும் திருப்பி ஒரு ஏளனப் பார்வை பார்த்தபடி கண்ணாடியில் மோவாயைப் பார்க்கத் துவங்கினார் சுந்தரம், சுந்தரம் வீட்டில் மிதிவண்டி இல்லை, மிதிவண்டி இருந்த காலத்தில் அவர் பயன்படுத்திய, இப்போது எந்தப் பயனும் இல்லாமல் அந்தப் பம்ப்பை அவர் கந்தசாமிக்கு ஓசி கொடுப்பதை ஒரு மிகப்பெரிய சமூக சேவையைப் போல ஊரெங்கும் சொல்லிக் கொண்டிருக்கிறார், அந்தப் பெருமை மட்டும் இல்லை என்றால் அவர் எப்போதோ கந்தசாமிக்குப் பம்ப் இல்லை என்று சொல்லி இருப்பார். </font></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/11/4578164630_cefae03596.jpg"><font color="#9b00d3"><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="India, Rajasthan, Tonk district, Nagar village" border="0" alt="India, Rajasthan, Tonk district, Nagar village" src="http://tamizharivu.files.wordpress.com/2011/11/4578164630_cefae03596_thumb.jpg?w=244&#038;h=164" width="244" height="164" /></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3">மறக்காமல் கம்பிக் கதவின் இடைவெளியில் கைகளை நுழைத்துத் தாழ் போட்டு விட்டு மிதிவண்டியை உருட்டிக் கொண்டு வந்து தனது வீட்டு முன்பாக நிறுத்தினான் கந்தசாமி, கந்தசாமியின் நாய் வாலைக் குழைத்தபடி ஓடி வந்தது, அதன் நெற்றியில் கையை வைத்து கந்தசாமி வருடவும், தனது முன்னங்கால்களைத் தூக்கி அவனது மணிக்கட்டை நக்கத் துவங்கியது &quot;மணி&quot; என்கிற வெள்ளையும், கருப்பும் கலந்த நாய். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">அமுதனும், அழகுமதியும் எழுந்து விட்டிருந்தார்கள், அழகுமதி பாத்திரம் விளக்கிக் கொண்டிருந்தாள், அமுதன் ஐஸ் பெட்டியைக் கழுவிக் கொண்டிருந்தான், இருவரும் நன்றாக வளர்ந்து விட்டிருந்தார்கள், ஐஸ் பெட்டியைக் கழுவ வேண்டும் என்று நேற்று இரவு கந்தசாமி தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்ததை அமுதன் கவனித்திருக்க வேண்டும், அப்பாவின் வேலை குறித்தும், அதில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் அமுதனுக்கு எப்போதும் அதிக அக்கறை உண்டு, அருகில் சென்று &quot;என்னடா, ஏதோ பரிச்சை இருக்குன்னு சொன்னியே, படிக்காம எதுக்கு ஐஸ் பெட்டியைக் கழுவுக்கிட்டு இருக்க?&quot; என்றவுடன் அமுதன் கந்தசாமியின் பக்கம் திரும்பி &quot; இல்லப்பா, நேத்து ராத்திரியே படிச்சு முடிச்சிட்டேன்&quot; என்றான்.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">கிணற்றடியில் குளித்துக் கொண்டிருக்கும் போது வழக்கம் போலவே ஒழுகிக் கொண்டிருக்கும் இந்த வாளியை மாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் கந்தசாமி, அனேகமாக மூன்று மாதங்களாக அதையே தான் நினைத்துக் கொள்கிறான். காலம் தான் கைகூடவில்லை, சட்டியில் கஞ்சியும், கிண்ணத்தில் வெங்காயமும் கொண்டு வைத்து வைத்து விட்டு &quot;வரும்போது கொஞ்சம் பருப்பும், தக்காளியும் வாங்கிட்டு வாங்கங்க&quot; என்று மெல்லிய குரலில் சொன்னாள் செல்வி, </font></p>
<p align="justify"><font color="#9b00d3">&quot;ம்ம்ம், நான் வர லேட்டாச்சுன்னா நீ பால்சாமி ஐயா கடைல வாங்கிக் கொழம்பு வய்யி செல்வி, நான் வரும் போது காசு குடுக்குறேன்&quot; என்று சொல்லி விட்டு பெட்டியை எடுத்து மிதிவண்டியில் கட்டத் துவங்கினான் கந்தசாமி, அமுதன் வந்து கயிற்றைப் பிடித்துக் கொண்டான், &quot;யப்பா, அடுத்த வாரம் பரிச்சை ஆரம்பிக்குது, ஜாமன்றி பாக்ஸ் வாங்கணும், அது இருந்தாத் தாம்பா கணக்குப் பரிச்சை எழுத முடியும்&quot;, என்றான் அமுதன். </font></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/11/geo13-250x250.jpg"><font color="#9b00d3"><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="geo13-250x250" border="0" alt="geo13-250x250" src="http://tamizharivu.files.wordpress.com/2011/11/geo13-250x250_thumb.jpg?w=244&#038;h=148" width="244" height="148" /></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3">எட்டாவது படிக்கும் போது அவனுக்கு ஒரு ஜாமன்றி பாக்ஸ் வாங்கிக் கொடுத்திருந்தான், கந்தசாமி, அமுதனும் இத்தனை காலம் உறை எல்லாம் போட்டு அதைப் பத்திரமாகவே வைத்திருந்தான், பரிச்சைக்கு அதைப் பயன்படுத்த முடியாது போலிருக்கிறது, அதன் முனைகள் மழுங்கிப் போய் பயன்படுத்த முடியாத அளவுக்குத் தேய்ந்து போயிருப்பதை கந்தசாமி பார்த்திருக்கிறான். &quot;சரிப்பா, நாளைக்கு வாங்கிட்டு வாரேன்&quot; கந்தசாமி கண்களால் உறுதி கொடுத்து விட்டு மிதிவண்டியில் ஏறி அழுத்தத் துவங்கினான். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">மிதிவண்டியின் இருக்கை ஏறத்தாழ ஒரு எலும்புக் கூடு மாதிரி மாறிப் போயிருந்தது, அதன் உள்ளிருக்கும் கம்பிகள் பின்புறத்தை அழுத்துவதில் இருந்து தப்பிக்க ஒரு குற்றாலத் துண்டை அதற்குக் கீழே வைத்துக் கட்டி இருந்தான் கந்தசாமி. வண்டி நகரத் துவங்கியது, கல்லல் வீதிகளைக் கடந்து ஐஸ் கம்பெனி வாசலில் வண்டியை நிறுத்தியபோது செல்வமும், இஸ்மாயிலும் புறப்படத் தயாராகி இருந்தார்கள், முதலாளி எங்காவது வெளியில் கிளம்பிப் போய் விட்டால் காத்திருக்க வேண்டியிருக்கும் என்கிற உண்மை அடிக்கிற வெய்யிலை விடவும் சூடாக இருந்தது, </font></p>
<p align="justify"><font color="#9b00d3">அவசரம் அவசரமாக உள்ளே நுழைந்த போது முதலாளி பெரிய பெட்டி அருகில் நின்று கொண்டிருந்தார், &quot;கந்தா, நூத்தம்பது ஐஸ் எடுத்து வச்சிருக்கேன், போதுமா?&quot; என்றார். மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்தான் கந்தசாமி, நூற்றி இருபது ரூபாய் கிடைக்கும், போதாது, ஜாமன்றி பாக்ஸ் எப்படியும் நாப்பது அம்பது ரூபாய் ஆகும், தக்காளி, பருப்பு ஒரு நாப்பது சீட்டு அம்பது ரூபாய், &quot;அய்யா, கூட ஒரு அம்பது வைங்கய்யா&quot;, என்றவுடன், வாங்குறது பெரிசில்ல கந்தா, எல்லாத்தையும் விக்கணும், திருப்பிக் கொண்டாந்தா நான் எடுத்துக்க மாட்டேன் பாத்துக்க, என்று சொல்லி விட்டு ஐஸ் குச்சிகளை எண்ணிக் கொண்டிருந்தார். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">பெட்டியைக் கழற்றி எடுத்து வந்து கீழே வைத்து அதன் ஓரங்களில் உப்பு ஐஸ் வைத்து நிரப்பத் துவங்கினான் கந்தசாமி, இருநூறு ஐஸ் விற்க வேண்டுமென்றால் நேரம் பிடிக்கும், மாலை வரையில் தாக்குப் பிடிக்க வேண்டுமென்றால் பெட்டி குளிராகவே இருக்க வேண்டும், அடிக்கிற வெயிலுக்கு ஐஸ் கரைந்து பெட்டி சூடாக்கி விட்டால் கதை கந்தலாகி விடும் என்பதை உணர்ந்தவாறு ஐஸ்களை நிறம் பிரித்து அடுக்கி வைத்துவிட்டுப் பெட்டியை எடுத்துக் கட்டிக் கொண்டு மிதிவண்டியை அழுத்தியபோது யோசனை வந்தது கந்தசாமிக்கு. </font></p>
<p align="justify"><font color="#9b00d3">&quot;இன்னைக்கி பேசாம காளையார் கோயில் போக வேண்டியது தான், திருவிழா நடக்குது, எப்பிடியும் வித்துறலாம்&quot;. அதற்கு முன்பு முருகப்பா ஸ்கூல் வாசலுக்கு ஒருமுறை போய் விட்டுச் செல்லலாம் என்று முடிவு செய்து வண்டியைத் திருப்பினான் கந்தசாமி, பள்ளி இடைவேளை விடுவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தது, கொஞ்சம் வேகமாக அழுத்திப் பள்ளி வாசலை அடையவும், இடைவேளைக்கான மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது, எல்லாப் பிள்ளைகளும் வெள்ளையும், நீலமும் கலந்த வண்ணத்தில் கலகலப்பாய் இருந்தார்கள். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">பள்ளிகளில் பிள்ளைகளுக்குச் சீருடை அணிவிப்பது தான் எத்தனை அருமையான முடிவு, இல்லையென்றால் அமுதனும், அழகுமதியும் பெரும்பாலும் கொஞ்சம் வெளிறிய நிறத்தில் இருக்கும் சில கிழிந்த ஆடைகளையும் அணிந்து தான் பள்ளிக்கு வர வேண்டியிருக்கும் என்று கந்தசாமியின் மனதுக்குள் தோன்றியது, அவர்கள் இருவருக்கும் சில நல்ல ஆடைகளை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்கிற கந்தசாமியின் நீண்ட காலக் கனவை ஏதாவது அற்புதம் நிகழ்த்துகிற மனிதர்கள் தான் நிறைவேற்ற வேண்டும். ஏழு ஐஸ் விற்றதில் ஒரு சிறுமி இரண்டு ரூபாய்க்கு ஐம்பது பைசா குறைவாக இருக்கிறது என்று சொன்னாள், பார்க்க</font></p>
<p align="justify"><font color="#9b00d3">அழகுமதியைப் போலவே இருந்தாள், &quot;சரி, நாளைக்குக் குடு, என்னம்மா!&quot; என்று பேருக்குச் சொல்லி விட்டு அந்தக் குறைவான காசுகளை வாங்கி உள்பையில் வைத்துக் கொண்டு சுற்றிலும் ஒருமுறை பார்த்தான் கந்தசாமி, இடைவேளை முடிந்து விட்டிருந்தது, பிள்ளைகள் வகுப்புகளுக்குள் ஓடத் துவங்கினார்கள். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">நெல்லிக்காய் விற்கிற பொன்னம்மாள் பாட்டி &quot;என்ன, கந்தசாமி, ரெண்டு நாளா ஆளக் காணும்&quot; என்றார்கள். இல்லம்மா, பேருவலச திருவிழா நடக்குதில்ல, அங்கே போயிட்டேன், இன்னைக்கி காளையார் கோயிலுக்குப் போகணும், அப்பிடியே பள்ளிக்கூடத்துக்கு வந்துட்டுப் போலாம்னு&quot; என்று பதில் சொல்லியபடி மிதிவண்டியின் மிதிகளில் கால்வைத்து ஏறி நகரத் துவங்கினான் கந்தசாமி. தேசிய நெடுஞ்சாலையில் பயணப்பட்டது கந்தசாமியின் மிதிவண்டி.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">காளையார்கோவிலைக் கந்தசாமியின் மிதிவண்டி தொட்ட போது மணி பன்னிரண்டை எட்டி இருந்தது, ஊரெங்கும் வண்ணத் தோரணங்களும், தண்ணீர்ப் பந்தலும் என்று களை கட்டி இருந்தது, கந்தசாமி குடியிருப்புப் பகுதிகளை அடைந்து மிதிவண்டியின் முன்புறம் பொருத்தப்பட்டிருக்கும் காற்று ஒலிப்பானை விடாமல் அடிக்கத் துவங்கி &quot;ஐஸ், ஐஸ், மேங்கோ ஐஸ், ஆரஞ் ஐஸ்&quot; என்று கத்தியவாறு வண்டியை உருட்டத் துவங்கினான், </font></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/11/1_1.jpg"><font color="#9b00d3"><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="__1_~1" border="0" alt="__1_~1" src="http://tamizharivu.files.wordpress.com/2011/11/1_1_thumb.jpg?w=244&#038;h=182" width="244" height="182" /></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3">ஒன்றும் இரண்டுமாக ஐஸ் கட்டிகள் கரையத் துவங்கி இருந்தன, தேரடி வீதியில் இருந்து கீழே இறக்கத்தில் இறங்கி கந்தசாமி நடந்தபோது நாட்டு ஓடுகள் வேயப்பட்ட முற்றத்து வீட்டில் இருந்து ஒரு இளைஞன் கந்தசாமியை அழைத்தான், அவனுக்குப் பின்னால் ஏழெட்டுக் குழந்தைகள் நின்று கொண்டிருந்தார்கள், &quot;அண்ணே, ஐஸ் எவ்வளவு?&quot; என்றான் இளைஞன், மூணு ரூபாய் தம்பி&quot; பெட்டியின் மூடியைத் திறந்து ஒரு ஐஸை எடுத்து வெளியில் தெரியும்படி காட்டினான் கந்தசாமி, இளைஞன் பெட்டி அருகே வந்து திறந்திருந்த பெட்டியின் உள்புறமாகப் பார்வையைச் செலுத்தினான், பிறகு குழந்தைகளை அழைத்து ஒவ்வொரு ஐஸாகக் கையில் பிடித்துக் கொடுக்க ஆரம்பித்தான். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">கந்தசாமி கவனமாக வெளியேறும் ஐஸ்களை எண்ணிக் கொண்டிருந்தான், கந்தசாமியின் மனதில் ஜாமன்றி பாக்ஸ், பருப்பு, தக்காளி, கிணற்று வாளி என்று மாறி மாறி பிம்பங்கள் ஓடிக் கொண்டிருந்தன. கந்தசாமியின் பெட்டியும், உடலும் சூடாகித் தளர்வடைந்தபோது மணி நாலரையாகி விட்டிருந்தது. இன்னும் ஐம்பது ஐஸுக்கு மேல் விற்றாக வேண்டும், தக்காளியும் பருப்பும் கூடச் சமாளித்து விடலாம், ஜாமன்றி பாக்ஸ் எப்படியும் இன்று வாங்கியே ஆக வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு தேரடி வீதிப் பாலத்தில் வண்டியை சாய்த்து விட்டு அமர்ந்து கொண்டான் கந்தசாமி. இனித் தாக்கு பிடிக்க முடியாது, ஏழு மணிக்கு மேல் போனால் முதலாளி ஐசைத் திரும்ப எடுத்துக் கொள்ள மாட்டார், கிளம்ப முடிவு செய்து கொண்டு சாய்த்த வண்டியை நிமிர்த்தினான் கந்தசாமி. </font></p>
<p align="justify"><font color="#9b00d3">அனிச்சையாகக் குனிந்த கந்தசாமியின் கண்களில் காற்றில்லாத மிதிவண்டியின் முன்சக்கரம் முள்ளாகக் குத்தியது. வண்டி பஞ்சர் ஆகி இருக்க வேண்டும், வெயிலுக்குக் காற்று இறங்கி இருந்தாலும் முழுதாக இறங்கி விடாது, இனி மிதிவண்டி பழுது பார்க்கும் கடையைத் தேடி அலைய வேண்டும், இப்போதெல்லாம் மிதிவண்டி பழுது பார்க்கும் கடைகள் அருகிக் கொண்டே வருவதை நினைத்தால் கோபம் கோபமாக வந்தது, உருட்டிக் கொண்டே ஒருவழியாக ஊருக்குள் வந்து ஒரு கடையைக் கண்டு பிடித்தான் கந்தசாமி. </font></p>
<p align="justify"><font color="#9b00d3">கடைக்காரனோ கடையை மூடும் அவசரத்தில் இருந்தான், திருவிழாக்காலம் இந்தக் கடையை விட்டால் பிறகு வீடு சேர்வது சிரமம் என்பதால், கெஞ்சிக் கதறி அந்தக் கடைக்காரனை பஞ்சர் ஒட்டுவதற்கு ஒப்புக் கொள்ள வைப்பதற்குள் களைத்துப் போனான் கந்தசாமி. கடைக்காரன் முனகியபடியே சக்கரத்தில் இருந்த முள்ளை எடுத்துக் கையில் காட்டி விட்டுக் &quot;கொஞ்சம் இருந்தா மௌத்ல போயிருக்கும்னே&quot;, நல்ல வேலை தப்பிச்சீங்க என்று அச்சமூட்டினான்.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">காற்று நிரப்பி வண்டியைக் கிளப்பியபோது மணி ஆறாகி இருந்தது, மூச்சு வாங்க அழுத்திக் கொண்டு வந்து முதலாளியிடம் கொஞ்ச நேரம் பேச்சுக் கேட்டு விட்டு இருநூற்று எண்பது ரூபாய் கொடுத்தான் கந்தசாமி, “ஐஸ எடுத்து பெரிய பெட்டில வையி கந்தா, எவளவு சொன்னாலும் நீ கேக்க மாட்ட, போகும் போதே நூத்தம்பது எடுத்துக்கிட்டுப் போன்னு சொன்னேனே கேட்டியா, நாளைக்கு உதிரி வந்தா உன் கணக்குல தான் வப்பேன்&quot; என்று விடை கொடுத்தார் முதலாளி.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">போகும் போது கறாராகப் பேசுவார், வரும்போது பெட்டி நிறைய ஐஸைத் திருப்பிக் கொண்டு வந்தாலும் ரெண்டு பேச்சுப் பேசி விட்டு திரும்ப வாங்கிப் பெரிய பெட்டியில் வைத்துக் கொள்வார், உதிரி உதிரி என்று சொல்வாரே தவிர ஒருநாளும் உதிரிக் கணக்கில் பிடித்தம் செய்ததில்லை.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">கந்தசாமி ஒருவழியாக கல்லல் பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் வெண்மதி புக் சென்டர் வாசலில் வண்டியை நிறுத்தி விட்டு கடைக்குள் ஏறும் போது தான் யோசித்தான் அமுதனின் கணக்குப் பரிசைக்குத் தேவையான அந்தப் பொருளின் பெயரை, கந்தசாமி அதன் பெயரை மறந்து விட்டிருந்தான், மண்டையை உடைத்து யோசித்துப் பார்த்தும் அதன் பெயர் நினைவுக்கு வரவில்லை. </font></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/11/india20the20polio20battle-1736725974_v2_grid-6x2.jpg"><font color="#9b00d3"><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="india%20the%20polio%20battle--1736725974_v2_grid-6x2" border="0" alt="india%20the%20polio%20battle--1736725974_v2_grid-6x2" src="http://tamizharivu.files.wordpress.com/2011/11/india20the20polio20battle-1736725974_v2_grid-6x2_thumb.jpg?w=244&#038;h=159" width="244" height="159" /></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3">கடைக்காரர் &quot;இரண்டு முறை கேட்டு விட்டார், &quot;என்னண்ணே வேணும்?&quot; என்று, ஒருவழியாய்ச் சமாளித்துக் கொண்டு கணக்குப் பெட்டி குடுங்கண்ணே என்றான், கடைக்காரர் சில நிமிடத் திகைப்புக்குப் பின்னர் உள்ளே சென்று ஒரு கால்குலேட்டரை எடுத்து வந்து காட்டினார், &quot;இது இல்லண்ணே, பயலுக கணக்குப் போடுற பெட்டி, இந்த வட்டம், குத்தூசி, அடிஸ்கேல் எல்லாம் வரும்ல டப்பாவுக்குள்ள, அதுன்னே&quot; என்று சொன்னவுடன் &quot;ஜாமன்றி பாக்ஸா&quot; என்று மறுபடி உள்ளே போனார். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">வாங்கிப் பையில் போட்டுக் கொண்டு வண்டியை வீட்டை நோக்கிக் கிளப்பினான் கந்தசாமி, போகிற வழியில் கடைக்குள் இருந்து பால்சாமி ஐயா குனிந்து பார்த்தார், அவர் எதார்த்தமாகக் கூடப் பார்த்திருக்கலாம். கந்தசாமிக்கு ஏனோ குற்ற உணர்வாய் இருந்தது, செல்வி தக்காளியும், பருப்பும் வாங்கி இருப்பாளோ?, முன்பாக்கி ஒரு நூத்தம்பது ரூபாய் இருந்ததே அதைக் கேட்டிருப்பாரோ? என்று மிதிவண்டிக்கு முன்பாகக் கேள்விகள் பயணித்தன.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">கந்தசாமி வண்டியை கல்லுக்காலில் வைத்துக் கட்டி விட்டு பையை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தவுடன் மணி ஓடி வந்து வாலை ஆட்டியது, அழகுமதி &quot;அப்பா&quot; என்றபடி ஓடி வந்து அணைத்துக் கொண்டாள், அமுதன் சுவற்றில் சாய்ந்தபடி படித்துக் கொண்டிருந்தான், செல்வி புதுச் சேலையோடு சமைத்துக் கொண்டிருந்தாள், எங்கோ வெளியில் சென்று வந்திருக்க வேண்டும், அலுமினியச் சட்டியின் நீரில் மூன்று தக்காளிகள் மிதந்து கொண்டிருந்தன, அப்பாடா, தக்காளியும், பருப்பும் வாங்கி விட்டிருக்கிறாள் என்று நிம்மதி பிறந்தது கந்தசாமிக்கு. </font></p>
<p align="justify"><font color="#9b00d3">கிணற்றடிக்குச் சென்று நீரிறைத்து கை, கால், முகம் கழுவிக் கொண்டு கொடியில் காய்ந்து கொண்டிருந்த துண்டை எடுத்து முகம் துடைத்துக் கொண்டு பிள்ளைகளோடு வந்து அமர்ந்தான் கந்தசாமி. &quot;இந்தாடா தம்பி, ஜாமுண்டி பாக்ஸ், பேரு வேற மறந்து போச்சுடா தம்பி, நல்ல வேளை கணக்குப் பெட்டின்னு சொன்னதும் கடைக்காரன் கண்டு பிடிச்சுக் குடுத்தான்&quot;. </font></p>
<p align="justify"><font color="#9b00d3">அது ஜாமுண்டி பாக்ஸ் இல்லப்பா, &quot;ஜியோமெட்ரிக் பாக்ஸ்&quot; என்று அழுத்தம் திருத்தமாக ஆங்கிலத்தில் சொன்னான் அமுதன், திறந்து பார்த்து எல்லாப் பொருட்களும் சரியாக இருக்கிறதா என்று ஒருமுறை பார்த்து விட்டுப் பைக்குள் வைத்துக் கொண்டான்.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">கல்லுக்காலில் சாய்ந்து கொண்டு இயல்பாகத் திரும்பிய போது கண்ணில் பட்டது சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த புத்தம் புதிய காற்றடிக்கும் பம்ப், கந்தசாமி கண்ணைச் சுருக்கிக் கொண்டு “செல்வி, யாரு சுந்தரண்ணே வீட்ல பம்ப் வாங்கினது, எதுக்கு வாங்குனீங்க?” என்று கேட்டவாறு எழுந்து சென்று பம்பை கையில் எடுத்துப் பார்த்தான் அதன் வழவழப்பில் அது புதிதாக வாங்கப்பட்டதென்ற உண்மை பளபளத்தது. “செல்வி, என்ன புதுசு மாதிரித் தெரியுது!!, யாரு வாங்குனா!!, காசு ஏது?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">செல்வி வாய் திறந்தாள், “இல்லங்க, அமுதனுக்கு பள்ளிகூடத்துல இன்னைக்கு ஸ்காலர்சிப் குடுக்குறாங்கன்னு மதியம் வந்து சொன்னான், ஆயிரத்தி முன்னூறு ரூவா குடுத்தாங்க, கையெழுத்துப் போட்டு நான்தான் வாங்குனேன், அப்பாட்டக் குடுப்பம்டான்னு சொன்னேன், அவன்தான் ரெண்டு வருசமா அப்பா சுந்தரம் மாமா வீட்டுல போயி பம்புக்காக நிக்கிறாரும்மா, புதுசா ஒரு பம்ப்பு வாங்கிருவோம், எனக்கு இனி பரிச்சைக்கு பணம் கட்டுனாப் போதும்மா சொல்லி வம்படியா கல்லலுக்குக் கூட்டிப் போயி இத வாங்கிட்டாங்க, கூடவே பஞ்சர் செட்டும் வாங்கி உள்ள வச்சிருக்கான் பாருங்கங்க&quot; என்று சொல்லிவிட்டு சமையலில் மூழ்கி விட்டிருந்தாள் செல்வி. </font></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/11/amazing-elephant-family-wallpaper-1600x1200-1005032.jpg"><font color="#9b00d3"><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="amazing-elephant-family-wallpaper-1600x1200-1005032" border="0" alt="amazing-elephant-family-wallpaper-1600x1200-1005032" src="http://tamizharivu.files.wordpress.com/2011/11/amazing-elephant-family-wallpaper-1600x1200-1005032_thumb.jpg?w=244&#038;h=184" width="244" height="184" /></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3">கந்தசாமி கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை, கூரையின் ஓட்டைகளில் நகர்ந்து கொண்டிருந்த சில விண்மீன்களைப் உற்றுப் பார்த்தான், தனது வாழ்நாளில் ஒரு உன்னதமான கணத்தில் நுழைந்த சுவடே இல்லாமல் கசிந்து கொண்டிருந்தது காலம், ஐஸ் பெட்டியின் மூடியைத் திறந்தவுடன் வெளியாகிற புகையைப் போல&#8230;&#8230;&#8230;&#8230;..</font></p>
<h2 align="center"><font color="#ff0000" size="4"></font><font>**********</font></h2>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/tamizharivu.wordpress.com/3053/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/tamizharivu.wordpress.com/3053/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/tamizharivu.wordpress.com/3053/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/tamizharivu.wordpress.com/3053/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/tamizharivu.wordpress.com/3053/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/tamizharivu.wordpress.com/3053/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/tamizharivu.wordpress.com/3053/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/tamizharivu.wordpress.com/3053/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/tamizharivu.wordpress.com/3053/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/tamizharivu.wordpress.com/3053/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/tamizharivu.wordpress.com/3053/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/tamizharivu.wordpress.com/3053/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/tamizharivu.wordpress.com/3053/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/tamizharivu.wordpress.com/3053/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamizharivu.wordpress.com&amp;blog=3902339&amp;post=3053&amp;subd=tamizharivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamizharivu.wordpress.com/2011/11/11/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/53ac03245aa7ccb9e51dbd80eb41ca47?s=96&#38;d=http%3A%2F%2F1.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96&#38;r=G" medium="image">
			<media:title type="html">கை.அறிவழகன்</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/11/ice-cubes-3_thumb.jpg" medium="image">
			<media:title type="html">ice-cubes-3</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/11/4578164630_cefae03596_thumb.jpg" medium="image">
			<media:title type="html">India, Rajasthan, Tonk district, Nagar village</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/11/geo13-250x250_thumb.jpg" medium="image">
			<media:title type="html">geo13-250x250</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/11/1_1_thumb.jpg" medium="image">
			<media:title type="html">__1_~1</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/11/india20the20polio20battle-1736725974_v2_grid-6x2_thumb.jpg" medium="image">
			<media:title type="html">india%20the%20polio%20battle--1736725974_v2_grid-6x2</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/11/amazing-elephant-family-wallpaper-1600x1200-1005032_thumb.jpg" medium="image">
			<media:title type="html">amazing-elephant-family-wallpaper-1600x1200-1005032</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஆறாம் அறிவும், ஏழாம் அறிவும்.</title>
		<link>http://tamizharivu.wordpress.com/2011/11/09/%e0%ae%86%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5/</link>
		<comments>http://tamizharivu.wordpress.com/2011/11/09/%e0%ae%86%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5/#comments</comments>
		<pubDate>Wed, 09 Nov 2011 10:53:13 +0000</pubDate>
		<dc:creator>கை.அறிவழகன்</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">https://tamizharivu.wordpress.com/2011/11/09/%e0%ae%86%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5/</guid>
		<description><![CDATA[சில திரைப்படங்களுக்கு நாம் விரும்பிச் செல்ல வேண்டி இருக்கிறது, சிலவற்றுக்கு வேறு வழியே இல்லாமல் செல்ல வேண்டியிருக்கிறது, இன்னும் சிலவற்றுக்கு நம்மை யாராவது பிடித்துக் கொண்டு போய் விடுகிறார்கள், இது ஏறத்தாழ பிடித்துக் கொண்டு போன மாதிரியான திரைப்படம் தான். முதல் கண்ணி இயக்குனரும் நண்பருமான செல்வகுமார் அவர்களிடம் இருந்து வந்தது, &#34;திருவள்ளுவர் குறித்து ஏன் யாருமே காட்சி ஊடகங்களில் பதிவு செய்யவில்லை?&#34; என்று வெகு நாட்களுக்கு முன்பு அவரும் நானும் பேசிக் கொண்டிருந்தோம், நாமே அதனைச் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamizharivu.wordpress.com&amp;blog=3902339&amp;post=3040&amp;subd=tamizharivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/11/stock-photo-a-statue-of-bodhidharma-a-buddhist-monk-traditionally-credited-as-the-transmitter-of.jpg"><font color="#9b00d3"><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="stock-photo-a-statue-of-bodhidharma-a-buddhist-monk-traditionally-credited-as-the-transmitter-of-zen-to-china-57588637" border="0" alt="stock-photo-a-statue-of-bodhidharma-a-buddhist-monk-traditionally-credited-as-the-transmitter-of-zen-to-china-57588637" src="http://tamizharivu.files.wordpress.com/2011/11/stock-photo-a-statue-of-bodhidharma-a-buddhist-monk-traditionally-credited-as-the-transmitter-of1.jpg?w=244&#038;h=166" width="244" height="166" /></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3">சில திரைப்படங்களுக்கு நாம் விரும்பிச் செல்ல வேண்டி இருக்கிறது, சிலவற்றுக்கு வேறு வழியே இல்லாமல் செல்ல வேண்டியிருக்கிறது, இன்னும் சிலவற்றுக்கு நம்மை யாராவது பிடித்துக் கொண்டு போய் விடுகிறார்கள், இது ஏறத்தாழ பிடித்துக் கொண்டு போன மாதிரியான திரைப்படம் தான். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">முதல் கண்ணி இயக்குனரும் நண்பருமான செல்வகுமார் அவர்களிடம் இருந்து வந்தது, &quot;திருவள்ளுவர் குறித்து ஏன் யாருமே காட்சி ஊடகங்களில் பதிவு செய்யவில்லை?&quot; என்று வெகு நாட்களுக்கு முன்பு அவரும் நானும் பேசிக் கொண்டிருந்தோம், </font></p>
<p align="justify"><font color="#9b00d3">நாமே அதனைச் செய்யலாம் என்று முடிவு செய்திருந்தோம், அதன் தொடர்ச்சியாக இந்தத் திரைப்படம் குறித்த ஒரு முன்னோட்டத்தை அனுப்பி இருந்தார், சரி ஏதோ நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏதோ வரலாற்று வாசனை அடிக்கிறதே பார்க்கலாம் என்று எண்ணி இருந்தேன்.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">சரி, இனி விஷயத்துக்கு வருவோம், எது எப்படியோ போதிதர்மன் என்கிற அடையாளத்தை இனித் தங்கத் தமிழகம் நீண்ட நாளைக்குத் தக்க வைத்துக் கொள்ளும் என்பதில் மட்டும் முரணில்லை,போதிதர்மன் எங்கே வாழ்ந்தார்?, எங்கே போனார்?, என்ன செய்தார்?, எப்படிச் செத்தார்? என்கிற வரலாற்றுத் தகவல்கள் வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு தனி மனிதர்களால் வைக்கப்பட்டிருப்பதால் அதற்குள் நுழைய முடியாத ஒரு குழப்பம் நிலவுகிறது. </font></p>
<p align="justify"><font color="#9b00d3">அதைத் தாண்டி நாம் அதற்குள் நுழைய வேண்டுமென்றால் ஏதாவது ஒரு கிளைக் கதையின் வாலைப் பற்றிக் கொண்டு புனைவுக்குள் நுழைந்து விட வேண்டும், அதைத் தான் முருகதாஸ் செய்திருக்கிறார், அவர் ஏறத்தாழ தான் நம்பிய அல்லது தனக்குக் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு போதிதர்மர் ஒரு தமிழர் என்றும் அவரை நாம் சரிவர நினைவு கொள்ளவில்லை என்றும் நிறுவ முயன்றிருக்கிறார். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">பல்வேறு ஆசிய நாடுகளில் தெரிந்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு தமிழ் நிலப்பரப்பில் பிறந்த மனிதரை அல்லது தமிழரை நாம் மறந்து விட்டிருப்பது முருகதாசின் மனதை நெருடி இருக்கிறது, கூடவே ஒரு கதைக் களமும் கிடைத்து விட்டது. வரலாற்றின் நெடுகிலும் இப்படியான மறக்கடிக்கப்பட்ட அல்லது மறைந்து போன மனிதர்களை நம்மால் கண்டறிய முடியும், வரலாற்றில் மறைந்து போன ஒவ்வொரு சுவடுகளுக்கும் தனி மனிதர்களையும், இப்போது இருக்கிற சமூகத்தையும் மட்டுமே குற்றம் சொல்லி விட முடியாது, பல்வேறு புறக்காரணிகள் வரலாற்றின் பக்கங்களை எழுதும் எழுதுகோலின் திசையை மாற்றுகின்றன. ஆனாலும், வழக்கமான பாதையிலிருந்து விலகி வரலாற்றுப் பக்கம் சென்று (கொஞ்ச நேரமானாலும்) தனக்கான கதைக் களத்தை அமைத்துக் கொண்ட இயக்குனரை நாம் பாராட்டலாம்.</font></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/11/bodhidharma-the-forgotten-hero-b4788303.jpg"><font color="#9b00d3"><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="bodhidharma-the-forgotten-hero-b4788303" border="0" alt="bodhidharma-the-forgotten-hero-b4788303" src="http://tamizharivu.files.wordpress.com/2011/11/bodhidharma-the-forgotten-hero-b4788303_thumb.jpg?w=244&#038;h=208" width="244" height="208" /></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3">இப்போதெல்லாம் திரைப்படத் துறை சார்ந்த சில நண்பர்களுக்கு ஈழத் தமிழர்கள் ஒரு அட்சய பாத்திரம் மாதிரி, ஆ, ஊ என்றால் ஈழத்தில் நடந்த படுகொலைகளை எண்ணியே நான் காலமெல்லாம் கண் கலங்கினேன், இன்னும் நான் சரியாகச் சாப்பிடுவது கூட இல்லை என்றால் பாருங்களேன் என்று ஒரு ஒப்பாரியை வைத்து விட்டுத் தான் மறு வேலை பார்ப்பார்கள், இந்தப் படத்தில் ஈழம் தொடர்பாக அல்லது இலங்கையை விமர்சனம் செய்து பேசப்பட்டிருக்கும் வசனங்கள் அந்த வகையைச் சார்ந்தவையாக இருக்காது என்று நம்புவோம். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">போர் தன்னுடைய கொடுங்கரங்களால் எமது குழந்தைகளையும், பெண்களையும் காவு கொண்டிருந்தபோது இவர்களில் பலர் வாய் மூடி போதிதர்மர்களாகவே மாறிப் போயிருந்தது ஒரு வியப்பான முரண், மௌனமாய் இருந்தால் கூடப் பரவாயில்லை, இவர்களில் பலர் இலங்கைக்கு மறைமுகமாக திரைப்பட வணிகம் செய்து கொண்டிருந்தார்கள் என்கிற உண்மை நெஞ்சைச் சுடுகிறது. </font></p>
<p align="justify"><font color="#9b00d3">தமிழ்க் குடும்பங்கள் கொத்துக் கொத்தாக இடம் பெயர்ந்து பெருமளவில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் வசிக்கிறார்கள், ஒரு தனிப்பெரும் பன்னாட்டு சமூகமாக அவர்கள் இன்றைக்கு மாறிப் போயிருக்கிறார்கள், தமிழகத்தில் இருந்து இயங்கும் பல்வேறு அரசியல் அமைப்புகள், வணிக நிறுவனங்கள், திரைப்படத் துறை சார்ந்த தனி மனிதர்கள் என்று ஒரு கூட்டம் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களை வணிக நோக்கங்களுக்காகக் குறி வைக்கிறது. அப்படி ஒரு குறியாக போதி தர்மர் இருக்கக் கூடாது என்பது நம்முடைய ஆவல்.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">திரைப்படம் ஒரு வரலாற்றுப் பின்னணியோடு துவங்குகிறது, உறுதியான எந்த ஆதாரங்களும் இல்லாத ஒரு சிக்கலான புனைவாக முதல் இருபது நிமிடங்களுக்கு வரும் போதி தர்மரின் வாழ்க்கைக் குறிப்புகள் காட்சி அமைப்பு ரீதியாக கொஞ்சம் நெருக்கத்தையும், வியப்பையும் கொடுக்கின்றன, சீன நிலப்பரப்பில் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கை, துறவிகளின் இயக்கம் என்று கொஞ்ச நேரமே வருகிற காட்சிகளாய் இருந்தாலும் நினைவில் நிற்கும் அழகான இயக்கமும், ஒளிப்பதிவும். இசை இன்னும் கொஞ்சம் மெருகேற்றப்பட்டு வழங்கப்பட்டிருக்குமேயானால் ஆகச் சிறந்த நிலைக்கு மாறி இருக்கும் வாய்ப்பு உண்டு என்று நினைவுறுத்துகிறது. </font></p>
<p align="justify"><font color="#9b00d3">ஒரு குழந்தையின் நோய்வாய்ப்பட்ட நிலையும், அது மரணத்திலிருந்து பிழைத்த பின்பு தாயோடு சேர்கிற அந்தக் கணமும் யாரையும் கொஞ்சம் கலங்க வைக்கும். தாயாக நடித்த அந்தப் பெண்ணின் உடல் மொழி உலகெங்கும் துளிர்த்திருக்கும் தாய்மையின் ஒரு துளி வாசம். அந்தக் காட்சிக்காக ஒரு சிறப்பான வாழ்த்துச் சொல்லலாம் முருகதாசுக்கு.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனா கதையாக அந்த வரலாற்றுப் பின்னணி நிறைவு பெற்ற உடனே படமும் நிறைவு பெற்று விட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு பொது மக்களின் பேட்டி என்றெல்லாம் மெனெக்கெட்டு வழக்கமான தமிழ்த் திரைப்படக் கதைக் களத்துக்கு வந்து விடுகிறார் இயக்குனர். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">சூர்யாவின் நடிப்புத் திறனைக் குலைக்க வேண்டும் என்று திட்டமிட்டுக் கிளம்பி இருக்கும் யாரேனும் இந்தப் படத்தின் திரைக் கதையில் சதி வேலைகளில் ஈடுபட்டிருப்பார்களோ என்று ஒரு ஐயம் இருக்கிறது, சூர்யா ஒரு மிகச் சிறந்த நடிகர் பாஸ், இப்படியெல்லாம் அவரை கயிறு கட்டித் தொட்டிக்குள்ள தூங்க வைக்க முருகதாஸ் மாதிரி பெரிய இயக்குனர்கள் தேவையா? படத்தின் முக்கால் பகுதியில் சூர்யாவுக்கு நடிப்பதற்கான வாய்ப்பே வழங்கப்படவில்லை.</font></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/11/surya207aam20arivu20stills00-2-1846696227.jpg"><font color="#9b00d3"><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="surya%207aam%20arivu%20stills00-2-1846696227" border="0" alt="surya%207aam%20arivu%20stills00-2-1846696227" src="http://tamizharivu.files.wordpress.com/2011/11/surya207aam20arivu20stills00-2-1846696227_thumb.jpg?w=154&#038;h=244" width="154" height="244" /></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3">மரபணுக் கூறுகள் குறித்த ஆய்வு, அதன் பின்னணியில் இயங்கும் சீனா என்றெல்லாம் அள்ளித் தெளித்து விட்டிருக்கிறார்கள், முதலில் ஒரு நாடு குறித்தும், அதன் அரசுகள் குறித்தும் இது போன்ற சிறுபிள்ளைத்தனமான புனைவுகளை உருவாக்குவது மிகப்பெரிய தவறு மிஸ்டர்.முருகதாஸ், எல்லா நாடுகளிலும் நம்மைப் போலவே எளிய மனிதர்கள் வாழ்கிறார்கள், அவர்களுக்கான தேர்வு செய்யப்பட்ட அரசுகள் இருக்கின்றன, சீனாக்காரன் நம்ம மேலே விஷக் கிருமிகளை ஏவி விடுவதற்கே அரசு நடத்திக் கொண்டிருப்பது மாதிரி ஒரு தவறான முன்னுதாரணத்தை நீங்கள் எடுத்துச் செல்கிறீர்கள், அது நமது குழந்தைகளை அந்த நாட்டின் மீதான வன்மத்தை நோக்கி நகர்த்தும், நெடுங்காலமாக அமெரிக்கத் திரைப்படங்களில் வரும் ஒரு உயர் முதலாளித்துவச் சிந்தனையை நீங்கள் கையில் எடுத்திருப்பது கொஞ்சம் ஆபத்தானது.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">போதி தர்மனின் வரலாற்றுப் புனைவுகளைத் தவிர்த்து திரைப்படத்தில் வேறெங்கும் புதிய தடங்களை அல்லது மாற்றங்களை நம்மால் காண இயலாமல் போனது வருந்தத்தக்கது. வழக்கமான மசாலா தமிழ்த் திரைப்படங்களில் இருந்து இந்தத் திரைப்படம் மாறுபட்டது என்று சொல்வதற்காகவே போதி தர்மர் உள்ளேற்றம் செய்யப்பட்டிருப்பது போல ஒரு எண்ணம் உள்ளுக்குள் ஊடுருவதை மறுக்க முடியாது. ஸ்ருதி ஹாசனின் தொடர்ச்சியான நாயகித் தோற்றம் வழக்கமான நாயக வழிபாட்டுச் சிந்தனைகளை மறுதலித்து நகர்வது ஒரு தேவையான மாற்றம்.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">இனி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய, சொல்லியே தீர வேண்டிய ஒரு குறிப்பு உண்டு, அது தான் ஊழலையும், இட ஒதுக்கீட்டையும் ஒரே அடுக்கில் வைத்துப் பார்க்கும் இயக்குனரின் அரசியல் புரிந்துணர்வு. அடுக்கு மொழி வசனங்களுக்காக எத்தனை அறிவற்ற வறட்டுச் சிந்தனையை நீங்கள் விதைத்திருக்கிறீர்கள் முருகதாஸ், இட ஒதுக்கீடு இந்தியா போன்ற வர்க்க, வர்ண பேதங்கள் தொடர்ச்சியாக பன்னெடுங்காலம் போதிக்கப்பட்டிருக்கிற நாட்டின் எளிய மக்களுக்கான வாய்ப்பு, காலம் காலமாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, கல்வி இழந்து, பொருள் இழந்து, சமூக இடமிழந்து ஊர்ப்புறத்தின் சேரிகளில் உழன்று கொண்டிருக்கிற எளிய உழைக்கும் மக்களுக்கு எதிரான அந்த நஞ்சை மிகப்பெரிய சமூகப் புரட்சியைப் போல நீங்கள் அடையாளம் செய்திருப்பது உங்கள் ஒட்டு மொத்த உழைப்பையும் கீழே போட்டு நசுக்கி விடுகிறது. </font></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/11/ar-murugadoss.jpg"><font color="#9b00d3"><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="AR-Murugadoss" border="0" alt="AR-Murugadoss" src="http://tamizharivu.files.wordpress.com/2011/11/ar-murugadoss_thumb.jpg?w=230&#038;h=244" width="230" height="244" /></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3">தமிழர்களின் அடையாளத்தையும், வீரத்தையும், பெருமையையும் கடினமாக உழைத்து நீங்கள் தூக்கி விட்டிருப்பதாகச் சொல்வதற்கும், இட ஒதுக்கீட்டையும், ஊழலையும் நாட்டின் பின்னடைவுக்கான காரணமாக ஒரே இடத்தில் நீங்கள் பொருத்தி இருப்பதற்குமான இடைவெளி மிகப் பெரியது மட்டுமில்லை, நிரப்ப இயலாததுமாகிறது. உங்கள் அரசியல் அறிவு வெற்றிடமாக இருக்கும் போது நீங்கள் பேச விளைகிற தமிழர்களின் நீண்ட காலப் பண்பாட்டு அரசியல் விலக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சம் கட்டிய கதைதான்.படுப்பதற்கும், இருப்பதற்கு இடமின்றி வீதிகளில் படுத்து உறங்குகிற ஐம்பது விழுக்காட்டுக்கு மேலான உழைக்கும் எளிய மக்கள் வாழும் நாட்டில் எந்த முற்றத்தில் துளசிச் செடியை வைப்பது? எந்த அறிவியலை அவர்களுக்குச் சொல்வது? என்கிற கேள்விகளோடு திரைப்படம் முடிந்து எழுந்து வர வேண்டியிருந்தது. ஒளிப்பதிவும், கலை இயக்கமும் சில இடங்களில் திரைப்படத்துக்கு உயர் தரத்தை வழங்கும் போது இசை அதைக் கீழே இழுப்பது மாதிரி காதில் இரைகிறது. என்னாச்சு ஹாரிஸ் சார்? உங்கள் வழக்கமான ஒரு மெல்லிசைக் காதல் முத்திரைப் பாடல் கூட இந்தப் படத்தில் மிஸ்ஸிங்????</font></p>
<p align="justify"><font color="#9b00d3">இருப்பினும் தமிழர்களின் வரலாற்றுத் தடங்களை நோக்கி திரைப்பட ஊடகத்தில் பணிபுரிபவர்களை மட்டுமன்றி, நமது இளைஞர்களை, இன்னும் பலரை நீங்கள் ஒரு புதிய திசை நோக்கி நகர்த்த முயற்சி செய்திருக்கிறீர்கள், அது நிச்சயம் நமது அழிந்து போன வரலாற்றுச் சுவடுகளை மீளாய்வு செய்யவும், நல்ல பல விவாதக் களங்களை உருவாக்கவும் பயன்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வாழ்த்துக்கள் ஏ.ஆர்.முருகதாஸ்.</font></p>
<p><font color="#9b00d3"></font></p>
<p><font color="#9b00d3"></font></p>
<p><font color="#9b00d3"></font></p>
<p><font color="#9b00d3"></font></p>
<p><font color="#9b00d3"></font></p>
<h2 align="center"><font color="#ff0000">*************</font></h2>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/tamizharivu.wordpress.com/3040/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/tamizharivu.wordpress.com/3040/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/tamizharivu.wordpress.com/3040/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/tamizharivu.wordpress.com/3040/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/tamizharivu.wordpress.com/3040/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/tamizharivu.wordpress.com/3040/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/tamizharivu.wordpress.com/3040/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/tamizharivu.wordpress.com/3040/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/tamizharivu.wordpress.com/3040/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/tamizharivu.wordpress.com/3040/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/tamizharivu.wordpress.com/3040/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/tamizharivu.wordpress.com/3040/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/tamizharivu.wordpress.com/3040/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/tamizharivu.wordpress.com/3040/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamizharivu.wordpress.com&amp;blog=3902339&amp;post=3040&amp;subd=tamizharivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamizharivu.wordpress.com/2011/11/09/%e0%ae%86%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/53ac03245aa7ccb9e51dbd80eb41ca47?s=96&#38;d=http%3A%2F%2F1.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96&#38;r=G" medium="image">
			<media:title type="html">கை.அறிவழகன்</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/11/stock-photo-a-statue-of-bodhidharma-a-buddhist-monk-traditionally-credited-as-the-transmitter-of1.jpg" medium="image">
			<media:title type="html">stock-photo-a-statue-of-bodhidharma-a-buddhist-monk-traditionally-credited-as-the-transmitter-of-zen-to-china-57588637</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/11/bodhidharma-the-forgotten-hero-b4788303_thumb.jpg" medium="image">
			<media:title type="html">bodhidharma-the-forgotten-hero-b4788303</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/11/surya207aam20arivu20stills00-2-1846696227_thumb.jpg" medium="image">
			<media:title type="html">surya%207aam%20arivu%20stills00-2-1846696227</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/11/ar-murugadoss_thumb.jpg" medium="image">
			<media:title type="html">AR-Murugadoss</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>&#8220;முற்றத்து மரங்கள்&#8221; &#8211; ஒரு முன்னோட்டம்</title>
		<link>http://tamizharivu.wordpress.com/2011/10/20/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae/</link>
		<comments>http://tamizharivu.wordpress.com/2011/10/20/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae/#comments</comments>
		<pubDate>Thu, 20 Oct 2011 12:38:42 +0000</pubDate>
		<dc:creator>கை.அறிவழகன்</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">https://tamizharivu.wordpress.com/2011/10/20/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae/</guid>
		<description><![CDATA[எனது முதல் சிறுகதைத் தொகுப்பு &#8220;முற்றத்து மரங்கள்&#8221; என்னும் தலைப்பில் நூலாக வெளியாகிறது, தகிதா பதிப்பகம் பதிப்பு வேலைகளையும், ஓவியர் அனந்த பத்மநாபன் அட்டைப்படங்களையும் வடிவமைக்க தம்பிகள் வேல்முருகன் (சிங்கப்பூர்), அருள் ராமலிங்கம் (ஜப்பான்) மற்றும் அண்ணன் துரை நந்தன் (கனடா)ஆகியோர் இந்த நூல் வெளியாவதற்கு உளப்பூர்வமான தங்கள் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். படைப்பிலக்கியம் அல்லது புனைவுகள் முற்றிலும் கற்பனையில் எழுதப்பட இயலாது என்பதில் எனக்கு தீவிர நம்பிக்கை உண்டு, எந்த ஒரு எழுத்தாளனும் அல்லது படைப்பிலக்கியவாதியும் தன்னைச் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamizharivu.wordpress.com&amp;blog=3902339&amp;post=3030&amp;subd=tamizharivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/10/mutrathu-marangal1.jpg"><span style="color:#9b00d3;"><img style="background-image:none;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;margin-right:auto;padding-top:0;border:0;" title="mutrathu marangal" src="http://tamizharivu.files.wordpress.com/2011/10/mutrathu-marangal_thumb1.jpg?w=159&#038;h=244" alt="mutrathu marangal" width="159" height="244" border="0" /></span></a></p>
<p align="justify"><span style="color:#9b00d3;">எனது முதல் சிறுகதைத் தொகுப்பு &#8220;முற்றத்து மரங்கள்&#8221; என்னும் தலைப்பில் நூலாக வெளியாகிறது, தகிதா பதிப்பகம் பதிப்பு வேலைகளையும், ஓவியர் அனந்த பத்மநாபன் அட்டைப்படங்களையும் வடிவமைக்க தம்பிகள் வேல்முருகன் (சிங்கப்பூர்), அருள் ராமலிங்கம் (ஜப்பான்) மற்றும் அண்ணன் துரை நந்தன் (கனடா)ஆகியோர் இந்த நூல் வெளியாவதற்கு உளப்பூர்வமான தங்கள் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.</span></p>
<p align="justify"><span style="color:#9b00d3;">படைப்பிலக்கியம் அல்லது புனைவுகள் முற்றிலும் கற்பனையில் எழுதப்பட இயலாது என்பதில் எனக்கு தீவிர நம்பிக்கை உண்டு, எந்த ஒரு எழுத்தாளனும் அல்லது படைப்பிலக்கியவாதியும் தன்னைச் சுற்றி நிகழும் பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டே தனது எழுத்தின் மூலத்தைக் கண்டறிகிறான், இலக்கியங்களில் பதிவு செய்யப்படும் பெரும்பாலான நிகழ்வுகள் பதிவு செய்யும் மனிதனின் பதின் வயதில் நிகழ்ந்தவையாய் இருக்கின்றன, பதின் வயதில் உள்ளீடு செய்யப்படும் வாழ்வியல் தொகுப்புகள் எஞ்சிய நாட்களில் மிகுந்த தாக்கத்தை விளைவிக்கின்றன. </span></p>
<p align="justify"><span style="color:#9b00d3;">இந்தத் தொகுப்பும் அதற்கு விதி விலக்கல்ல, இந்தத் தொகுப்பில் இருக்கும் பெரும்பான்மையான நிகழ்வுகள் அதிகாலைப் பனி மூடிய நினைவு மரங்களைப் போல காலத்தைக் கடந்து எழுத்தாய் நிலை பெற்றிருக்கின்றன. இந்தச் சிறுகதைகளை எழுதிய பிறகு நான் ஒரு இலக்கியவாதி என்று சொல்லத் துவங்கினால் அது ஒரு மூடனின் பிதற்றலாய் இருக்கும், இதில் இடம்பெறும் நிகழ்வுகளும், புனைவுகளும் மொழியை அல்லது இலக்கியத்தைக் கற்றுக் கொள்வதற்குத் துடிப்புடன் இயங்கும் ஒரு சிறு குழந்தையின் காலடித் தடங்களைப் போன்றவை. ஆனால், எல்லா இலக்கியங்களும் ஒரு குழந்தையின் காலடித் தடங்களில் இருந்தே துவங்கி இருக்கும் என்பதில் முரண்கள் இருக்க முடியாது.</span></p>
<p align="justify"><span style="color:#9b00d3;">இந்தச் சிறுகதைகளின் மூலத்தையும், அவை சொல்ல வரும் செய்திகளையும் ஒரு படைப்பாளனின் பார்வையில் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.</span></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/10/312554_293881737307602_100000573330162_1116528_847433190_n.jpg"><span style="color:#9b00d3;"><img style="background-image:none;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;margin-right:auto;padding-top:0;border:0;" title="312554_293881737307602_100000573330162_1116528_847433190_n" src="http://tamizharivu.files.wordpress.com/2011/10/312554_293881737307602_100000573330162_1116528_847433190_n_thumb.jpg?w=189&#038;h=244" alt="312554_293881737307602_100000573330162_1116528_847433190_n" width="189" height="244" border="0" /></span></a></p>
<p align="justify"><strong><span style="text-decoration:underline;"><span style="color:#ff0000;">சிறுகதை 1</span></span></strong></p>
<p align="justify"><span style="color:#9b00d3;">சிறுவயதில் இருந்தே வரலாற்று நிகழ்வுகளை அறிந்து கொள்வதிலும், வரலாற்று நினைவிடங்களைப் பார்வையிடுவதிலும் அளப்பரிய ஆர்வம் எனக்குள் இருந்து வந்திருக்கிறது, நிகழ்காலத்தின் அவலங்கள் வரலாற்றின் நிழலில் சிறிது நேரமேனும் இளைப்பாறிக் கொண்டு விடுகிறது, போரும், கொலைவெறியும் நிரம்பிக் கிடக்கிற வரலாற்றின் பக்கங்களில் மனிதர்களின் சில மெல்லிய உணர்வுகளைப் பதிவு செய்ய சில மாவீரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் உதவி இருக்கிறார்கள், அந்த வகையில் அலெக்சாண்டர் இந்தியாவின் மீது போர் தொடுக்க வந்த போது நிகழ்ந்த சில உண்மைகளின் மீது புனையப்பட்ட சிறுகதை.</span></p>
<p align="justify">
<p align="justify"><span style="color:#9b00d3;"><strong><span style="text-decoration:underline;"><span style="color:#ff0000;">சிறுகதை 2</span></span></strong> </span></p>
<p align="justify"><span style="color:#9b00d3;">தொலைந்து போன சின்னஞ்சிறு பொருட்கள், நினைவுகள், மனிதர்கள் இவை எல்லாம் நமக்குள் விளைவிக்கும் தாக்கம் மகத்தானது, எல்லா மனிதர்களின் நினைவுச் செல்களிலும் இடைவிடாது ஒரு முள்ளைப் போல உறுத்திக் கொண்டிருக்கும் சில மறக்க முடியாத சிறு பொருட்கள் இருக்கக் கூடும், எனக்குள் தொலையாமல் எனது நிலப்பரப்பில் மட்டுமே தொலைந்து போன ஒரு டிக்கி டிக்கி, காளியம்மைப் பாட்டி, அம்மாவின் வகுப்புத் தோழி இவர்களின் நினைவாகக் கட்டப்பட்டிருக்கும் இந்தச் சிறுகதை ஏறத்தாழ ஒரு உண்மைக்கதையே, கதையை அழகு செய்வதற்காகச் சில புனைவுகள் இணைக்கப்பட்டிருக்கும்.</span></p>
<p align="justify">
<p align="justify"><span style="color:#9b00d3;"><strong><span style="text-decoration:underline;"><span style="color:#ff0000;">சிறுகதை 3</span></span></strong> </span></p>
<p align="justify"><span style="color:#9b00d3;">முதலாளிகளின் வணிகமும், அதன் தாக்கமும் வயல்களையும் மரங்களையும் அழித்தபடி பயணிக்க, ஊரகப் பகுதிகளில் அமைதியாக வாழும் உழைக்கும் எளிய மக்களை அன்றாடம் தனக்குள் விழுங்கி ஏப்பம் விடுகிறது நகரத்தின் கட்டிடங்கள், எல்லா மனிதர்களையும் போலவே இவ்வுலகில் பொருளைத் தேடித் பயணிக்கும் ஒரு முதியவரின் வாழ்க்கை நகரத்தின் பாதுகாவலர்களால் துரத்தப்படுவதை இந்தக் கதை அதன் போக்கில் சொல்கிறது, ஐந்து பெண்களைப் பெற்ற ஒரு எளிய தந்தையின் இருப்புக்கான தடைகள், பொருள் தேடலுக்கான இடர்கள் இவைகளைக் குறித்துப் பேசும் இந்தக் கதையின் பின்னே எனக்கு மிக நெருக்கமான ஒரு உறவு இருக்கிறது.</span></p>
<p align="justify">
<p align="justify"><span style="color:#9b00d3;"><strong><span style="text-decoration:underline;"><span style="color:#ff0000;">சிறுகதை 4</span></span></strong> </span></p>
<p align="justify"><span style="color:#9b00d3;">பிச்சைக்காரர்கள் என்று சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிற சில மனிதர்களின் பின்னே இருக்கும் ரகசியங்களை, அவர்களுக்குள் புதைந்து கிடக்கிற மனித வாழ்க்கையின் சுவடுகளை கால்களில் வலுவிழந்த ஒரு முதியவரின் மூலமாகச் சொல்ல முற்படுகிறது இந்தக் கதை, ஏறத்தாழ இது எனது வாழ்க்கையின் இளம்பருவத்தில் நிகழ்ந்த ஒரு உண்மைக் கதையே, தந்தையின் மிதிவண்டியில் அமர்ந்தபடி பயணித்த உன்னதமான சில கணங்களை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு குறைந்த அளவில் என்னுடைய வரலாற்றிலாவது பதிவு செய்யப்பட வேண்டிய கதை என்பதால் இந்தக் கதை உருப்பெற்றது, புனைவின் அலங்காரம் இருந்தாலும் எனக்கு மிக நெருக்கமான ஒரு கதை இது.</span></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/10/268228_2201007941426_1134136782_2701446_1985912_a.jpg"><span style="color:#9b00d3;"><img style="background-image:none;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;margin-right:auto;padding-top:0;border:0;" title="268228_2201007941426_1134136782_2701446_1985912_a" src="http://tamizharivu.files.wordpress.com/2011/10/268228_2201007941426_1134136782_2701446_1985912_a_thumb.jpg?w=183&#038;h=244" alt="268228_2201007941426_1134136782_2701446_1985912_a" width="183" height="244" border="0" /></span></a></p>
<p align="justify"><span style="color:#9b00d3;"><strong><span style="text-decoration:underline;"><span style="color:#ff0000;">சிறுகதை 5</span></span></strong> </span></p>
<p align="justify"><span style="color:#9b00d3;">உடல் நீள அகலங்களை வைத்து மனிதர்களை அளவிடும் நமது பொதுப் புத்தியின் இயலாமையை சுட்டும் கதை, மனதின் நீளமும் அகலமும் எல்லா மனிதர்களின் அளவீடுகளோடு பொருந்திப் போவதை நமக்கு உணர்த்துகிறான் ஒரு மனிதன். சில நேரங்களில் மனிதர்களை விடவும், மனித எண்ணங்களை விடவும் விலங்குகளின் கலப்படமற்ற அன்பு நம்மை நிலைகுலைய வைக்கிறது, தங்களுக்கான நீள அகலங்களுக்கு ஏற்ப மனதைச் சுருக்கிக் கொள்ளும் வலி மிகக் கொடுமையானது மட்டுமில்லை தவிர்க்கப்பட வேண்டியதும் கூட என்கிற சமூக நெறி இதற்குள் பொதிந்து கிடக்கிறது.</span></p>
<p align="justify">
<p align="justify"><span style="color:#9b00d3;"><strong><span style="text-decoration:underline;"><span style="color:#ff0000;">சிறுகதை 6</span></span></strong> </span></p>
<p align="justify"><span style="color:#9b00d3;">எனது முதல் சிறுகதை, ஒற்றையடிப் பாதைகளின் வழியாகப் பயணிக்கத் துடிக்கும் ஒரு சிறுவன் இன்னும் எனக்குள் ஒளிந்து கிடப்பதை அடையாளம் கொண்டு சொன்ன கதை, மலைகள் குறித்த வியப்பு மனிதனுக்குள் அடங்காமல் கிடப்பதை நினைவூட்டி பழைய பண்பாட்டு விழாக்கள் மற்றும் ஒன்று கூடல்களின் தொலைக்க முடியாத நினைவுகளை அள்ளித் தெளிக்கும் கதை, சில உண்மை நிகழ்வுகளோடு புனைவும், இயற்கையும் மட்டுமன்றிக் கொஞ்சம் கத்துக் குட்டியின் நடையும் கலந்திருக்கும். அப்பத்தா, முற்றத்தில் கட்டப்பட்டிருக்கும் மாடுகள், பலூன்களை வைத்து நெற்றியில் உடைத்து விளையாடும் பருவம் எல்லாம் பொதுவாய் இருக்க சாதியின் பிளவுகள் மலைக்குன்றுகளை உடைக்கும் வலிமையோடு அலைவதை வேடிக்கை பார்க்கும் இயலாமை என்று தொடரும் கதை.</span></p>
<p align="justify">
<p align="justify"><span style="color:#9b00d3;"><strong><span style="text-decoration:underline;"><span style="color:#ff0000;">சிறுகதை 7</span></span></strong> </span></p>
<p align="justify"><span style="color:#9b00d3;">நவீனத் தொழில் நுட்பங்களும், கருவிகளும் மனிதனை இவ்வுலகை ஆளப் பிறந்தவனாக மமதை கொள்ள வைக்கும் காலகட்டத்தில் இயற்கை அவனது மிதமிஞ்சிய ஆளுகையை சில நேரங்களில் முறித்துப் போடுகிறது, அவனும் மற்ற விலங்குகளைப் போலவே இவ்வுலகின் தகவமைப்பைப் பகிர்ந்து கொள்ளப் பிறந்தவன் தான் என்பதை அவனுக்கு உணர்த்துகிறது, சுனாமியின் இருபது அடி உயர அலைகள் மனிதனின் எல்லாத் தொழில் நுட்பங்களையும், கருவிகளையும் அடித்து வீழ்த்தி சமநீதியைப் போதிக்கிறது. ஒரு பயணத்தில் மேலும் கீழுமாய் உயரும் உயிர் அச்சம் சில மாறுபட்ட மனித உணர்வுகளை எதிரொலிக்கிறது. சுனாமி சீறித் தீர்த்த நாளில் ஒரு விமானியின் வலைப்பதிவை மையமாக வைத்து எழுதப்பட்டது, ஏறத்தாழ என்னுடைய வாழ்க்கையோடு எந்த நெருங்கிய தொடர்பும் இன்றிப் புனைவாகவே எழுதப்பட்டது.</span></p>
<p align="justify">
<p align="justify"><span style="color:#9b00d3;"><strong><span style="text-decoration:underline;"><span style="color:#ff0000;">சிறுகதை 8</span></span></strong> </span></p>
<p align="justify"><span style="color:#9b00d3;">பயன்பாட்டில் இருந்து அருகிப் போன சில பொருட்களை மீண்டும் காணும்போது அவை பயன்பாட்டில் இருந்தபோது இயங்கிய கணங்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை, தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் விளைந்த நெல்லைக் கொட்டி வைத்திருந்த பரண்கள் இப்போது தேவையற்ற பொருட்களை அடைந்து வைக்கும் வைப்பு அறையாகி விட்டன, ஆனாலும் அவற்றுக்குள் இன்னும் ஈரமாய் சொட்டிக் கொண்டிருக்கும் காலத்தின் போக்கை கொஞ்சமாய் இந்தக் கதை சொல்ல நினைக்கிறது, இந்தப் பரண்களில் நமது மொழியின் மிகப் பழைய சொல்லடைகளும் ஓசைகளின்றி உறங்குவது தான் இப்படியான ஒரு பரணுக்குள் என்னை ஏற்றிப் பார்த்தது. நினைவுப் பரணில் ஏற்றி விடப்பட்டிருக்கும் காலக் குழந்தையின் மெல்லிய காலடித் தடங்களை அங்கு படிந்திருக்கும் நிகழ் காலத் தூசியால் மறைக்க முடிவதில்லை.</span></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/10/vel.jpg"><span style="color:#9b00d3;"><img style="background-image:none;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;margin-right:auto;padding-top:0;border:0;" title="Vel" src="http://tamizharivu.files.wordpress.com/2011/10/vel_thumb.jpg?w=244&#038;h=184" alt="Vel" width="244" height="184" border="0" /></span></a></p>
<p align="justify"><span style="color:#9b00d3;"><strong><span style="text-decoration:underline;"><span style="color:#ff0000;">சிறுகதை 9</span></span></strong> </span></p>
<p align="justify"><span style="color:#9b00d3;">ஒரு பேருந்துப் பயணத்தின் போது எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு குழந்தைகளையும் அவர்களின் தாயையும் கவனிக்க நேர்ந்த போது கருக்கொண்ட கதை, தாய்மையின் உன்னதமான பொழுதுகளைப் படம் பிடித்த ஒரு அற்புதமான உணர்வு, குழந்தைகளை எப்போதும் குழந்தைகளாகவே பார்க்கும் மனநிலை ஒரு தாய்க்கு மட்டுமே இருக்கும் என்பதை உரக்கச் சொல்லும் கதை, ஊனமுற்ற சமூகம் உன்னதமான சில குழந்தைகளை எப்படிப் பார்க்கிறது அல்லது விலக்கி வைக்கிறது என்கிற மிக மெல்லிய உணர்வை ஒரு ஆணின் பார்வையில் படம் பிடிக்கும் கதை, பனிக்கட்டியால் செய்யப்பட கத்தியின் கூர் முனைகளைக் கொண்டு இதயத்தின் ஆழம் வரை ஊடுருவி பேரண்டத்தின் புரியாத சிக்கல்களை நமக்குள் செலுத்தி விட்டுத் தடங்கள் இன்றி வெளியேறும் குளிர் நீரைப் போல இலக்கியத்தின் மூலமாய் வலிகளைப் பகிரும் சிறுகதை.</span></p>
<p align="justify">
<p align="justify"><span style="color:#9b00d3;"><strong><span style="text-decoration:underline;"><span style="color:#ff0000;">சிறுகதை 10</span></span></strong> </span></p>
<p align="justify"><span style="color:#9b00d3;">காதல் ஒரு நிலவின் பல்வேறு பரிமாணங்களைப் போல இவ்வுலகின் அசைக்க முடியாத ஆற்றலாய் நிலை கொண்டிருக்கிறது, கல்லூரிக் காலம் முடிந்து பொருளை மும்பை மாநகரின் பெரிய வீதிகளில் தேடி அலைந்த போது சந்தித்த எண்ணற்ற மனிதர்களில் சங்கீதாவும் ஒருத்தி, பெண்மையின் பல்வேறு கூறுகளை மிக எளிமையாக விளக்கிப் பெண்மையே இவ்வுலகை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது என்கிற மிகப்பெரிய செய்தியை எளிமையாய் அதிகச் சொற்கள் இன்றி விளக்கிச் சொன்னவள் சங்கீதா, எனது வாழ்வனுபவங்களோடு மிக நெருங்கிய தொடர்புடைய கதைதான் என்றாலும் உலகின் பொதுவான கதை போலத் தோற்றம் கொள்கிறது, மறுவாசிப்புச் செய்யும் போது.</span></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/10/5460_1179080284409_1450211022_479362_3479554_n.jpg"><span style="color:#9b00d3;"><img style="background-image:none;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;margin-right:auto;padding-top:0;border:0;" title="5460_1179080284409_1450211022_479362_3479554_n" src="http://tamizharivu.files.wordpress.com/2011/10/5460_1179080284409_1450211022_479362_3479554_n_thumb.jpg?w=244&#038;h=205" alt="5460_1179080284409_1450211022_479362_3479554_n" width="244" height="205" border="0" /></span></a></p>
<p align="justify"><span style="color:#9b00d3;"><strong><span style="text-decoration:underline;"><span style="color:#ff0000;">சிறுகதை 11</span></span></strong> </span></p>
<p align="justify"><span style="color:#9b00d3;">உலகின் ஒவ்வொரு தாயும், தந்தையும் தனது குழந்தைகளின் மேம்பாட்டை நோக்கிக் கனவு காண்கிறார்கள், தனது குழந்தைகள் இவ்வுலகில் அதிகச் சிரமங்கள் இன்றியும், மகிழ்ச்சியோடும் காணப்படும் நிலையில் அவர்களின் உணர்வுகள் அமைதி அடைகின்றன, தங்கள் வாழ்க்கையின் நோக்கம் நிறைவு பெற்றதாக அவர்கள் அப்போது ஒரு நீண்ட பெருமூச்சில் ஓய்வு கொள்கிறார்கள், குறிப்பாக இந்திய சமூகத்தில் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் ஆங்காங்கே நெருடும் இடைவெளிகளை நிரப்ப முயலும் ஒரு சிறு முயற்சி.</span></p>
<p align="justify">
<p align="justify"><span style="color:#9b00d3;"><strong><span style="text-decoration:underline;"><span style="color:#ff0000;">சிறுகதை 12</span></span></strong> </span></p>
<p align="justify"><span style="color:#9b00d3;">சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக்குக் காரணமான சிறுகதை, ஒரு மரத்துக்கும் மனித வாழ்க்கைக்கும் இடையிலான நெருக்கத்தை உணர்த்தும் மிக மெல்லிய உணர்வுகளைப் பிரதிபலிக்கும் சிறுகதை, இதன் பாத்திரங்கள் எல்லாம் நமக்குள் ஒளிந்து கிடக்கும் மென்மையான உணர்வுகளே, ஆதிக் குடிகளின் மனதில் இன்னும் படிந்திருக்கும் இயற்கையோடு ஒன்றிக் கிடக்கிற வாசம் மொழியின் வழியாய்ச் சிதறி வழிந்த போது சிறுகதையாய் வடிவம் பெற்றது. தனது மண்ணும், மக்களும் மனிதர்களின் உயிரெல்லாம் நிறைந்து கிடப்பதை ஒரு மெல்லிய நீரோடை போலச் சொல்ல முற்பட்ட சிறுகதை.</span></p>
<p align="justify">
<h2 align="center"><span style="color:#ff0000;">**********</span></h2>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/tamizharivu.wordpress.com/3030/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/tamizharivu.wordpress.com/3030/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/tamizharivu.wordpress.com/3030/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/tamizharivu.wordpress.com/3030/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/tamizharivu.wordpress.com/3030/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/tamizharivu.wordpress.com/3030/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/tamizharivu.wordpress.com/3030/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/tamizharivu.wordpress.com/3030/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/tamizharivu.wordpress.com/3030/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/tamizharivu.wordpress.com/3030/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/tamizharivu.wordpress.com/3030/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/tamizharivu.wordpress.com/3030/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/tamizharivu.wordpress.com/3030/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/tamizharivu.wordpress.com/3030/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamizharivu.wordpress.com&amp;blog=3902339&amp;post=3030&amp;subd=tamizharivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamizharivu.wordpress.com/2011/10/20/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/53ac03245aa7ccb9e51dbd80eb41ca47?s=96&#38;d=http%3A%2F%2F1.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96&#38;r=G" medium="image">
			<media:title type="html">கை.அறிவழகன்</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/10/mutrathu-marangal_thumb1.jpg" medium="image">
			<media:title type="html">mutrathu marangal</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/10/312554_293881737307602_100000573330162_1116528_847433190_n_thumb.jpg" medium="image">
			<media:title type="html">312554_293881737307602_100000573330162_1116528_847433190_n</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/10/268228_2201007941426_1134136782_2701446_1985912_a_thumb.jpg" medium="image">
			<media:title type="html">268228_2201007941426_1134136782_2701446_1985912_a</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/10/vel_thumb.jpg" medium="image">
			<media:title type="html">Vel</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/10/5460_1179080284409_1450211022_479362_3479554_n_thumb.jpg" medium="image">
			<media:title type="html">5460_1179080284409_1450211022_479362_3479554_n</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>வீடு திரும்பும் பாதையில்&#8230;&#8230;..</title>
		<link>http://tamizharivu.wordpress.com/2011/10/10/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/</link>
		<comments>http://tamizharivu.wordpress.com/2011/10/10/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Mon, 10 Oct 2011 12:23:26 +0000</pubDate>
		<dc:creator>கை.அறிவழகன்</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">https://tamizharivu.wordpress.com/2011/10/10/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/</guid>
		<description><![CDATA[மயில் ஜீவன் என்று ஒரு நண்பர் சென்னையிலிருந்து அலைபேசியில் தொடர்பு கொண்டார், “உங்கள் வலைப்பூவைப் படித்துப் பார்த்தேன், உங்கள் தமிழும், அறிவும் சிறப்பாக இருக்கிறது, வாழ்த்துக்கள், ஆனால், நீங்கள் படித்தது, வளர்ந்தது எல்லாம் இந்தத் தமிழ் மண்ணிலே, உங்கள் அறிவுக்கான உரம் இடப்பட்டது தமிழ் மக்களின் கைகளால், நீங்கள் இப்போது பணிபுரிவது பெங்களூரில், உங்கள் உழைப்பும், அறிவும் கன்னட மக்களுக்குப் பயன்படுகிறது, அதிலும் குறிப்பாகத் தமிழர்களை எதிரியாகப் பார்க்கிற கன்னட மண்ணில் இருந்து கொண்டு நீங்கள் இப்படியெல்லாம் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamizharivu.wordpress.com&amp;blog=3902339&amp;post=3015&amp;subd=tamizharivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/10/migration.jpg"><font color="#9b00d3"><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="migration" border="0" alt="migration" src="http://tamizharivu.files.wordpress.com/2011/10/migration_thumb.jpg?w=244&#038;h=193" width="244" height="193" /></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3">மயில் ஜீவன் என்று ஒரு நண்பர் சென்னையிலிருந்து அலைபேசியில் தொடர்பு கொண்டார், “உங்கள் வலைப்பூவைப் படித்துப் பார்த்தேன், உங்கள் தமிழும், அறிவும் சிறப்பாக இருக்கிறது, வாழ்த்துக்கள், ஆனால், நீங்கள் படித்தது, வளர்ந்தது எல்லாம் இந்தத் தமிழ் மண்ணிலே, உங்கள் அறிவுக்கான உரம் இடப்பட்டது தமிழ் மக்களின் கைகளால், நீங்கள் இப்போது பணிபுரிவது பெங்களூரில், உங்கள் உழைப்பும், அறிவும் கன்னட மக்களுக்குப் பயன்படுகிறது, அதிலும் குறிப்பாகத் தமிழர்களை எதிரியாகப் பார்க்கிற கன்னட மண்ணில் இருந்து கொண்டு நீங்கள் இப்படியெல்லாம் தமிழ் குறித்து எழுதுவது முரண்பாடாக இல்லையா உங்களுக்கு? இதற்கு நீங்கள் பதிலுரைத்தே ஆக வேண்டும்” என்று குரலை உயர்த்திச் சொன்னார். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">நான் அப்போது அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன், அமைதியாக அவரிடம், ஐயா, உங்கள் கேள்வியில் இருக்கும் நியாயம் எனக்குப் புரிகிறது, ஆனால், இது குறித்து நாம் அலைபேசியில் உரையாடி ஒரு தீர்வுக்கு வந்து விட முடியாது, உங்களுக்கான பதிலை நான் மிகச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானாலும் குறைந்தது அரை மணி நேரம் ஆகும், ஆகவே பிறகு ஓய்வாக உங்களைத் தொடர்பு கொள்கிறேன் என்று சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்தேன். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">அன்று மாலை வீடு திரும்பும் போதும், இரவு படுக்கையில் இருக்கும் போதும் கூட அவரது கேள்வி திரும்பத் திரும்ப என் செவிப்பறைக்குள் உலவிக் கொண்டே இருந்தது. இந்தக் கேள்வியை என்னிடம் பலர் கேட்டிருக்கிறார்கள், வெவ்வேறு சமூக இணையத் தள உரையாடல்களின் போது “முதலில் நீங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் குறித்தும், தமிழ் மக்கள் குறித்தும் பேசுங்கள்” என்று சொன்னவர்கள் உண்டு. அவர்களுக்கெல்லாம் பதில் சொல்வதை நான் தவிர்த்தே வந்திருக்கிறேன்.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">இந்தக் கேள்விக்கு விடை சொல்வதற்கு முன்னர் சில அடிப்படை விஷயங்கள் குறித்து நாம் பேசியாக வேண்டும், “மனித உயிர்களின் இருப்பு”, “மொழியின் தாக்கம்”, “இடம்பெயர்தல்”, மற்றும் இதன் மூலமான அடையாளங்களைப் புரிந்து கொள்ளுதல், முதலில் மனித உயிர்களின் இருப்புக் குறித்துப் பேசுவோம். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">ஒவ்வொரு மனித உடலும் தாயின் உடலில் இருக்கும் பொழுதிலேயே தனித்து இயங்கும் வல்லமை கொண்டது. தாயின் சிந்தனைகளும், கருவின் சிந்தனைகளும் வேறு வேறானவை, தனக்கான உணவு மற்றும் இயக்கங்கள் குறித்து மனித உடல் கருவாக இருக்கும் போதிலே சிந்திக்கத் துவங்கி விடுகிறது, ஆகவே எந்த ஒரு உயிரின் இயக்கத்தையும் ஒரு குறிப்பிட்ட கருத்தியலின் படி இயங்க வைப்பது மிகச் சிக்கலானது மட்டுமன்றி கடினமானதும் கூட. </font></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/10/animal-migration-caribou.jpg"><font color="#9b00d3"><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="animal-migration-caribou" border="0" alt="animal-migration-caribou" src="http://tamizharivu.files.wordpress.com/2011/10/animal-migration-caribou_thumb.jpg?w=244&#038;h=165" width="244" height="165" /></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3">தாயின் உடலில் இருந்து பிரிந்து தனி உயிராக ஒரு குழந்தை இயங்கத் துவங்கும் போது அதன் இயக்கம் குறிப்பிட்ட அளவில் மரபணு வழியாகவும், பெருமளவில் தன்னில் தாக்கம் விளைவிக்கிற சூழலின் வழியாகவும் நகரத் துவங்குகிறது. குடும்பத்தின் எல்லைகளைச் சில நேரங்களில் உடைத்துக் கொண்டு வெளியேற முனைகிறது, தன் கண்ணுக்கு முன்னே பறந்து விரிந்து கிடக்கும் இப்பேரண்டத்தின் எல்லைகளை நோக்கித் தனது சிந்தனைகளை விரிக்கத் துவங்குகிறது. </font></p>
<p align="justify"><font color="#9b00d3">நிலவியலின் அமைப்புகளை வேடிக்கை பார்த்தபடி பயணிக்கும் மனித உயிரின் வளர்ச்சியில் தொடர்ந்து தான் சந்திக்கிற மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகள், அமைப்புகள், அரசியல், சமூக நிலைப்பாடுகள் இவை யாவும் அவ்வுயிருக்கான பழக்கத்தை அல்லது வாழ்க்கை முறையை உருவாக்குகிறது. </font></p>
<p align="justify"><font color="#9b00d3">ஒரு காலிப் பாத்திரமாய் அல்லது கொஞ்சமாய் நிரப்பப்பட்ட சோதனைக் குடுவை மாதிரியான மனித உடலின் பல்வேறு வேதியியல் நிகழ்வுகளை புலன்கள் வெவ்வேறு திரவங்களைக் கொண்டு நிரப்புகிறது, பெரும்பான்மையாக நிரப்பப்பட்ட பண்புகளின் தொகுப்பாக ஒரு மனிதன் உருமாற்றம் அடையத் துவங்குகிறான், நானும் அப்படித்தான், நீங்களும் அப்படித்தான், ஆகவே ஒரு மனிதன் எவ்விடத்தில் தன் உயிர் வாழ்க்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்கிற உரிமை அனேகமாக இவ்வுலகில் வேறு ஒருவருக்குக் கிடையாது. </font></p>
<p align="justify"><font color="#9b00d3">இப்பேரண்டம் முழுவதும் சுற்றி அலையும் உரிமை இங்கிருக்கும் ஒவ்வொரு துகளுக்கும் அது அந்தத் துகளாக உருமாற்றம் அடையத் துவங்கும் போதே வழங்கப்பட்டு விடுகிறது, இடையில் காணக் கிடைக்கும் எல்லைக் கோடுகளும், கட்டுப்பாடுகளும், சட்ட விதிகளும் இன்னும் எல்லா விதமான குறுக்கீடுகளும் சக மனிதர்களால் அல்லது சக சமூகங்களால் உண்டாக்கப்பட்ட மாயைகள் என்பதில் எனக்கு எப்போதும் தீவிர நம்பிக்கை உண்டு.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">ஆதி மனிதனுக்கு இயற்கையைத் தவிர இடம் பெயர்தலுக்கு எந்தக் குறுக்கீடுகளும் இருந்திருக்கவில்லை, மனித உயிர் தொன்மையான காலம் தொட்டு இடம் பெயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இடம் பெயர்தல் என்பது பல்வேறு இயற்கையின் கோட்பாடுகளால் முடிவு செய்யப்படுகிற நிலைத்தன்மை கொண்ட பண்பு, அது மனித வாழ்க்கைக்கு என்று இல்லாமல் எல்லா உயிர்களுக்கும் பொருந்தக் கூடிய ஒரு அறிவியல் பண்பு. </font></p>
<p align="justify"><font color="#9b00d3">கடலில் மட்டுமே இருந்த உயிர் வாழ்க்கை பிறகு பல்வேறு நெருக்கடிகளால் நிலத்துக்கு வந்து தவளைக்குக் கால் முளைத்தது, மீனுக்கு வால் முளைத்தது, முதலைக்குச் சிறகு முளைத்தது என்று இன்னும் பல்வேறு உயிரின் ரகசியங்களை நாம் உயிர் வரலாற்றைப் படிக்கும் போது அறிய முடியும், ஆகவே இடம் பெயர்தலை ஒரு வெகு இயல்பான மனிதப் பண்பாகவே நான் நோக்குகிறேன். </font></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/10/winged_migration.jpg"><font color="#9b00d3"><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="winged_migration" border="0" alt="winged_migration" src="http://tamizharivu.files.wordpress.com/2011/10/winged_migration_thumb.jpg?w=244&#038;h=163" width="244" height="163" /></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3">இனி மனித உயிர்களில் மொழியின் தாக்கம் குறித்துப் பேச வேண்டும், மொழி ஒரு தனி மனித உரிமையா? மொழி இனவாதத்தின் அடிப்படைக் காரணியா? மொழி குறிப்பிட்ட சமூகத்தின் நன்மைகளுக்காகவே படைக்கப்பட்டிருக்கும் கருவியா? மொழி மனிதனை அடையாளம் செய்யும் மிகப்பெரிய பண்பா? இப்படிக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்லும் அளவுக்கு மனித உயிர்களில் மொழியின் தாக்கம் அளப்பரியது.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">மொழி இவ்வுலகில் ஒழுக்கத்தைக் கொண்டு வந்தது, நாகரீகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு மகத்தானது, மொழி இலக்கியங்களைப் படைத்தது, ஒரு தனி மனிதனின் புலன்களை இன்னொருவருக்குக் கடத்தும் மிக முக்கியமான கருவியாக மொழி மாற்றம் பெற்றிருக்கும் காலத்தில் இன்று நாம் வாழ்கிறோம், இலக்கியம் எப்படி வரலாற்றைச் சுமந்து செல்லும் ஒரு ஊர்தியாக இருக்கிறதோ அதே போல மொழி மனித உணர்வுகளைக் கடத்திச் செல்லும் ஊர்தியாக இருக்கிறது. </font></p>
<p align="justify"><font color="#9b00d3">மொழியால் அன்பு செலுத்தவும், சக மனித உயிர்களைப் பற்றிய குறிப்புகளையும் அறிந்து கொள்ள முடியுமே தவிர மொழியால் வெறுக்கவும், மொழியால் மனித உயிர்களைத் துண்டாடவும் இயலாது, அப்படி நிகழுமேயானால் மொழியின் அடிப்படை நோக்கம் சிதைந்து போய் விடும், குறிப்பாகத் தாய்மொழியின் சிறப்பு சக மனிதனின் இலக்கியங்களை அறிவதன் மூலம் அவனுக்கு மிக நெருக்கத்தில் நம்மைக் கொண்டு போய்ச் சேர்க்கிறது, தாய்மொழி ஒரு மனிதனைக் குறுக்கி அவனை தேங்க வைப்பதில் நிறைவு பெறுவதில்லை மாறாக இப்பேரண்டத்தின் ஒரு சிறு பகுதியாக அவனை உணர வைக்கிறது. </font></p>
<p align="justify"><font color="#9b00d3">வெகு நுட்பமாகத் தாய் மொழியின் சிறப்பையும், அதன் நோக்கத்தையும் ஒருவன் உணரத் துவங்கும் போது தான் அவன் இந்த மனித குலத்தின் பொது மனிதனாகப் பரிணாமம் அடைகிறான், தனது மொழியை நேசிப்பவனால் வேறெந்த மொழியையும் வெறுக்க இயலாது, தனது மொழியின் நுட்பங்களை உணந்தவனால் மட்டுமே மனித மனத்தின் அடி ஆழம் வரை ஊடுருவிச் செல்லும் திறனைப் பெற முடிகிறது. </font></p>
<p align="justify"><font color="#9b00d3">நான் எனது மொழியை நேசிக்கிறேன், எனது மொழியின் நுட்பங்களின் வழியாகவே நான் இவ்வுலகம் குறித்த தரிசனங்களைப் பெற்றுக் கொள்கிறேன், எனது மொழியின் வழியாகவே உலகெங்கும் வாழ்கிற சக மனிதனின் எண்ணங்களைப் புரிந்து கொள்கிறேன், அவர்களுக்கு விடையளிக்கிறேன், அவர்களின் துன்பங்களுக்கான காரணங்களைக் கண்டறிகிறேன், ஆகவே நான் எங்கு வாழ்ந்தாலும் எனது மொழிக்கும் எனது மக்களுக்கும் மிக நெருக்கமானவனாகவே என்னை உணர்கிறேன்.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">அப்படித்தான் இவ்வுலகில் வாழ்வதற்காக வெவ்வேறு இடங்களுக்குத் துரத்தப்படும் ஒவ்வொரு மனிதனும் உணர்கிறான், கனடாவில் இருந்து கொண்டு “என் மக்களே, என் மொழியே, என் மண்ணே” என்று ஓலமிடுகிற மனிதனும், உள்ளூரில் இருந்து பக்கத்துக் குடிசை மனிதனின் வலிகளைத் துடைக்கிற மனிதனும் ஏறத்தாழ ஒரே மாதிரியானவன் தான், இவர்கள் இருவரின் உடலுக்கும் இடையில் இருக்கிற இடைவெளியை இட்டு நிரப்புகிற அற்புதக் கருவிதான் அவர்களுடைய தாய்மொழி. </font></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/10/back-to-home-a23169148.jpg"><font color="#9b00d3"><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="" border="0" alt="" src="http://tamizharivu.files.wordpress.com/2011/10/back-to-home-a23169148_thumb.jpg?w=244&#038;h=214" width="244" height="214" /></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3">இவ்வுலகின் எல்லா இடங்களிலும் சக மனிதனின் உழைப்பும், குருதியுமே கொட்டிக் கிடக்கிறது, இப்பூவுலகம் முழுவதும் மனிதர்கள் உலவித் திரியும் உழைப்புக் காடாகவே நான் உணர்கிறேன், புவிப்பந்தின் எந்த மூலைக்குச் செல்ல நேரிட்டாலும் அங்கு வாழும் சக மனிதனின் வலிகளை அறிந்து கொள்ளும் இன்னொரு மனிதனாகவே நான் இருக்க விரும்புகிறேன். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">மொழிகளைக் கடந்து, எல்லைகளைக் கடந்து, இனங்கள், சாதிகள், மதங்கள் அனைத்தையும் கடந்து என்னால் இந்த மனித குலத்தின் ஒரு சிறு துண்டாக உணர முடிகிற மிகப்பெரிய வரத்தை எனக்கு வழங்கியது எனது தாய்மொழி, அதற்காகவே அந்தக் கருவியை எனக்குக் கிடைத்த எல்லாக் கருவிகளையும் விடச் சிறந்த ஒன்றாகக் கொண்டாட என்னால் முடிகிறது. </font></p>
<p align="justify"><font color="#9b00d3">உலகின் எந்த மூலையில் வாழ்ந்திருப்பினும் அதனால் தான் எனது தாய்மொழியின் புதிய படைப்புகளை, பழைய இலக்கியங்களைத் துரத்தி ஓட முடிகிறது, எனது மொழியின் மூலமே எனது வெளிப்பாடுகள் வெளிவரத் துவங்கும் போது என் மண்ணின் மீதே வாழ்ந்து கிடக்கிற ஒரு ஒப்பற்ற உணர்வை நான் பெற்றுக் கொள்கிறேன். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">இது ஒரு வகையில் இது சுயநலம் கலந்ததும் கூட, ஏனெனில் முதலில் எனது தனிமையை, எனது துரத்தல்களை, எனது இடம் பெயர்தலை எல்லாம் என்னில் இருந்து ஆற்றுப் படுத்தும் ஒரு மருந்தாகவும் என் மொழி எனக்குப் பயன்படுகிறது. ஆகவே எனது தாய்மொழியைப் பேசுகிற எனது மக்களுக்கு, அவர்களின் உழைப்பில் உரமிடப்பட்ட எனது அறிவும் (கல்வி), திறனும் ஒரு போதும் தீங்கிழைப்பதில்லை. </font></p>
<p align="justify"><font color="#9b00d3">நான் அவர்கள் உழுது பயிரிடுகிற நிலங்களில் என் எழுத்துக்களால், என் மொழியால் நிரம்பிக் கிடக்கிறேன், எனது உடல் அதன் தனியான தேவைகளுக்காக ஓரிடத்தில் நிலை பெற்றிருந்தாலும் நிலத்தால், நீரால், காற்றால் மனிதர்களின் வழியாக ஒரு நிலப்பரப்பைப் போலவே நான் அவர்களோடு இணைக்கப்பட்டிருக்கிறேன், அந்த இணைப்பு உயிர்களின் இணைப்பைப் போலவே இயற்கையானது.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">இறுதியாக நண்பர் மயில் ஜீவன் அவர்களுக்கு நிலவியல் சார்ந்த சில செய்திகளைச் சொல்ல வேண்டும், கன்னட மொழியைப் பேசுகிற உழைக்கும் மக்களோ அல்லது எளிய விவசாயியோ ஒருபோதும் தமிழையும், தமிழர்களையும் வெறுக்கவில்லை, மாறாக அவர்களது பெயரில் செய்யப்படுகிற அரசியல் அப்படியான ஒரு காழ்ப்புணர்வை நம்மீது அள்ளித் தெளித்திருக்கிறது, தங்களுடைய அரசியல் படி நிலைகளுக்காக அங்கிருக்கும் எளிய உழைக்கும் மக்களின் வாழ்க்கை பணயம் வைக்கப்பட்டிருக்கிறது. உலகெங்கும் அப்படித்தான் நிகழ்கிறது.</font></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/10/back_to_home____by_alcove.jpg"><font color="#9b00d3"><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="back_to_home____by_Alcove" border="0" alt="back_to_home____by_Alcove" src="http://tamizharivu.files.wordpress.com/2011/10/back_to_home____by_alcove_thumb.jpg?w=244&#038;h=244" width="244" height="244" /></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3">ஒரு சமூகத்தின் அரசியல் அந்த மொழியோடு தொடர்புடையது, சமூக ஒழுக்கங்களை, சமூக ஏற்ற தாழ்வுகளை எல்லாம் இட்டு நிரப்புகிற குறியீடாக அந்தச் சமூகத்தின் மொழி காலம் காலமாய் அவர்களோடு வளர்கிறது, அறனும், அன்பும் கற்றுக் கொடுக்காத எந்தச் சமூகத்தின் அரசியலும், அந்த சமூகத்தின் மொழியால் உரமிடப்பட்டு வளர்க்கப்பட்டதே,</font></p>
<p align="justify"><font color="#9b00d3">இறுதியாக, இன்னும் வேற்றுக் கிரகங்களுக்குப் போய் வாழும் வாய்ப்புக் கிடைத்தாலும் என்னை ஒரு தமிழன் என்று அறிமுகம் செய்து கொள்வதில் எனக்கு எந்த மனத்தடையும் கிடையாது. எனது தாய்மொழியை நோக்கி என்னை அழைத்துச் செல்லும் பாதையே, இப்பேரண்டத்தின் எல்லா மொழிகளுக்கும் எல்லா மனிதர்களுக்கும், மிக நெருக்கமாக என்னை அழைத்துச் செல்லும் பாதை.</font></p>
<p align="justify"><font color="#9b00d3"></font></p>
<h2 align="center"><font color="#ff0000">**************</font></h2>
<p><font color="#9b00d3"></font></p>
<p><font color="#9b00d3"></font></p>
<p><font color="#9b00d3"></font></p>
<p><font color="#9b00d3"></font></p>
<p><font color="#9b00d3"></font></p>
<p><font color="#9b00d3"></font></p>
<p><font color="#9b00d3"></font></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/tamizharivu.wordpress.com/3015/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/tamizharivu.wordpress.com/3015/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/tamizharivu.wordpress.com/3015/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/tamizharivu.wordpress.com/3015/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/tamizharivu.wordpress.com/3015/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/tamizharivu.wordpress.com/3015/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/tamizharivu.wordpress.com/3015/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/tamizharivu.wordpress.com/3015/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/tamizharivu.wordpress.com/3015/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/tamizharivu.wordpress.com/3015/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/tamizharivu.wordpress.com/3015/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/tamizharivu.wordpress.com/3015/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/tamizharivu.wordpress.com/3015/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/tamizharivu.wordpress.com/3015/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamizharivu.wordpress.com&amp;blog=3902339&amp;post=3015&amp;subd=tamizharivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamizharivu.wordpress.com/2011/10/10/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>9</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/53ac03245aa7ccb9e51dbd80eb41ca47?s=96&#38;d=http%3A%2F%2F1.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96&#38;r=G" medium="image">
			<media:title type="html">கை.அறிவழகன்</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/10/migration_thumb.jpg" medium="image">
			<media:title type="html">migration</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/10/animal-migration-caribou_thumb.jpg" medium="image">
			<media:title type="html">animal-migration-caribou</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/10/winged_migration_thumb.jpg" medium="image">
			<media:title type="html">winged_migration</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/10/back-to-home-a23169148_thumb.jpg" medium="image" />

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/10/back_to_home____by_alcove_thumb.jpg" medium="image">
			<media:title type="html">back_to_home____by_Alcove</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>&#8220;சூர்ப்பணங்கு&#8221; &#8211; குறி அறுக்கும் கலை வீச்சு.</title>
		<link>http://tamizharivu.wordpress.com/2011/10/07/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b1%e0%af%81%e0%ae%95/</link>
		<comments>http://tamizharivu.wordpress.com/2011/10/07/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b1%e0%af%81%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Fri, 07 Oct 2011 12:13:18 +0000</pubDate>
		<dc:creator>கை.அறிவழகன்</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">https://tamizharivu.wordpress.com/2011/10/07/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b1%e0%af%81%e0%ae%95/</guid>
		<description><![CDATA[மூன்று நாட்களுக்கு முன்னர் மாலையில் ஒரு இளைஞர் அழைத்தார், அண்ணா, பெங்களூரில் தமிழ் நாடகமொன்றை நிகழ்த்துவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம், “சூர்ப்பணங்கு” என்ற பெயரில் முருகபூபதியின் இயக்கத்தில் தயாராகி இருக்கிற இந்த நாடகம் முதன் முறையாக பெங்களூரில் நிகழ்த்தப்படுவதால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு செய்தியைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார், இதுகுறித்து நாம் இயன்றால் நாளை மாலையில் சந்தித்துப் பேசலாம் என்றும் சொன்னார். “சரி தம்பி, நாடகம் குறித்த தகவல்களை எனக்கு மின்னஞ்சலில் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamizharivu.wordpress.com&amp;blog=3902339&amp;post=3004&amp;subd=tamizharivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/10/legring.jpg"><font color="#9b00d3"><strong><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="legring" border="0" alt="legring" src="http://tamizharivu.files.wordpress.com/2011/10/legring_thumb.jpg?w=244&#038;h=133" width="244" height="133" /></strong></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>மூன்று நாட்களுக்கு முன்னர் மாலையில் ஒரு இளைஞர் அழைத்தார், அண்ணா, பெங்களூரில் தமிழ் நாடகமொன்றை நிகழ்த்துவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம், “சூர்ப்பணங்கு” என்ற பெயரில் முருகபூபதியின் இயக்கத்தில் தயாராகி இருக்கிற இந்த நாடகம் முதன் முறையாக பெங்களூரில் நிகழ்த்தப்படுவதால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு செய்தியைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார், இதுகுறித்து நாம் இயன்றால் நாளை மாலையில் சந்தித்துப் பேசலாம் என்றும் சொன்னார். </strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>“சரி தம்பி, நாடகம் குறித்த தகவல்களை எனக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள்” என்று சொல்லி விட்டு அமைதியானேன், அன்று இரவே முரளி மனோகரின் &quot;கர்ண மோட்சம்&quot; குறும்படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தேன், ஆர்வமின்மையோடு அருகில் அமர்ந்து பார்க்கத் துவங்கிய நிறைமொழி கண் சிமிட்டாமல் அந்தப் பதினைந்து நிமிடக் குறும்படத்தைப் பார்த்து முடித்து விட்டே அங்கிருந்து நகர்ந்தாள். நிகழ்த்துக் கலைகளின் ஒப்பனைகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவே அதனை என்னால் உணர முடிந்தது.</strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>மறுநாள் நண்பகலில் “ரவீந்திர கலாசேத்ரா” சென்று நண்பர்களைச் சந்தித்தேன், “ஆரங்கள்” என்கிற இலக்கிய வாசிப்பு இயக்கத்தில் இருக்கும் “தோழர் சீனிவாசன்”, “தம்பி திருஜி”, “ஹாலுக்குறிச்சி” என்கிற கன்னட நாடக அமைப்பை நடத்திக் கொண்டிருக்கும் “தோழர் சிவசங்கர்” ஆகிய மூவரும் தீவிரமாக இதற்காக இயங்கிக் கொண்டிருப்பது அவர்களின் முகத்தில் தேங்கி இருந்த வியர்வைத் துளிகளில் தெரிந்தது. </strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>“ஆரங்கள் சீனிவாசன்” மிகத் தெளிவாகவும், உறுதியாகவும் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார், பரமக்குடி ஒடுக்கப்பட்ட மக்களின் படுகொலை நிகழ்வு, அரசியல் விழிப்புணர்வு மற்றும் சூர்ப்பணங்கு நாடகம் குறித்த சில தகவல்களை மிகச் சுருக்கமாக என்னிடம் எடுத்துரைத்தார்.</strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>அவருடைய ஆழ்ந்த அமைதியும், கூரிய பார்வையும் அவர் பேச்சை விடச் செயலில் அதிக ஆர்வம் காட்டும் மனிதர் என்பதைச் சொல்லாமல் சொல்லியது. நான் எனக்கான குடும்ப நுழைவுச் சீட்டுக்களையும், நண்பர்களுக்கான தனி நுழைவுச் சீட்டுக்கள் ஆறையும் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு விடைபெற்றேன்.</strong></font></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/10/sdc13474.jpg"><font color="#9b00d3"><strong><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="SDC13474" border="0" alt="SDC13474" src="http://tamizharivu.files.wordpress.com/2011/10/sdc13474_thumb.jpg?w=244&#038;h=184" width="244" height="184" /></strong></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>நவீன மேடை நாடகங்கள் இன்று பெருமளவில் எல்லா இந்திய மொழிகளிலும் நிகழ்த்தப்படுகின்றன, தமிழை விடக் கன்னடத்தில் இத்தகைய முயற்சிகள் பெரிய அளவில் வரவேற்புப் பெறுகின்றன, மேலும் முன்னணிக் கன்னடத் திரைப்பட நடிகர்கள் கூட இத்தகைய மேடை நாடகங்களில் பங்கு பெறுவதை ஒரு மதிப்புக்குரிய செயலாகக் கருதுகிறார்கள், சென்னையை விடவும் பெங்களூர், பண்பாட்டு வழியான நிகழ்த்துக் கலைகளையும், நவீன நிகழ்த்துக் கலைகளையும் மிகுந்த மதிப்போடு நடத்துகிறது. </strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>நவீன மேடை நாடகங்கள் பெரும்பாலும் ஒலி, ஒளிக் குறியீடுகளாலும், காட்சிப் படிமங்களாலும் நிகழ்த்தப்படுபவை, தொடர்ச்சியான உரையாடலோ வழக்கமான காட்சிகளோ அவற்றில் இடம் பெறாது, அவற்றைச் சரியாக உணர்ந்து கொள்ளக் கொஞ்சம் பார்வைத் திறனும், கொஞ்சம் சமூக அக்கறையும் இருந்தால் போதுமானது. </strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>சிலர் சொல்வதைப் போல “நவீன நாடகங்கள் சரியாகப் புரிந்து கொள்ள இயலாதவை” என்கிற குற்றச்சாட்டு அவர்களின் மனநிலையில் உருவாக்கப்பட்டிருக்கும் காட்சி ஊடகத் தாக்கங்களின் எதிர்மறை உணர்வு தான் என்பதை ஒருமுறை நவீன மேடை நாடகத்தைப் பார்ப்பவரால் உணர்ந்து கொள்ள முடியும்.</strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>திரைப்படம் என்கிற பொழுதுபோக்கு ஊடகமும் நிகழ்த்துக் கலையாகிய மேடை நாடகத்தின் ஒரு மேம்படுத்தப்பட்ட தொகுதி தான், திரைப்படங்களின் தாயாகிய மேடை நிகழ்த்துக் கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது.</strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>சூர்ப்பணங்கு மேடையில் நிகழ்த்தப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகத் தம்பி திருஜியைத் தொடர்பு கொண்டு “அரங்கின் இருக்கைகள் எத்தனை?, எத்தனை பேர் வந்திருக்கிறார்கள்?” என்று ஆர்வமாகக் கேட்டேன், “அண்ணா, அரங்கின் இருக்கைகள் அறுநூற்று ஐம்பது” என்றும், ஏறத்தாழ நூற்றைம்பது பேர் வந்திருப்பதாகவும் கொஞ்சம் தொய்வாகச் சொன்னார். </strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>நூற்றைம்பது என்பது அவர்களின் மனநிலையை, உழைப்பைக் குலைக்கிற எண்ணிக்கை என்ற கவலையோடு அரங்கை அடைந்த போது மிகப்பெரும் வியப்பு காத்திருந்தது, ஏறத்தாழ அரங்கம் நிரம்பி இருந்தது, பெரும்பாலும் இளைஞர்கள், அதிக எண்ணிக்கையில் குடும்பங்கள், பெண்கள், குழந்தைகள் என்று விழிகள் விரிய எனக்கான இருக்கையில் அமர்ந்தேன். தொலைவில் இருந்து பாய்ச்சப்படுகிற விளக்கொளியில் மேடை ஒரு அழகிய காட்சிப் பொருளாய் நிலைத்திருந்தது.</strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>நாடகத்தின் மையப் பொருள் உலகெங்கும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை மெல்லிய இழையாய் நிகழ்த்துக் கலை மூலம் விளக்குவதும், நீதி கேட்பதும் தான். இன்றைய நவீன உலகில் பெண்ணின் உடல் மற்றுமொரு முதலாளித்துவப் பண்டமாய் மாற்றப்பட்டிருக்கிறது, பொருட்களை விற்கவும், வாங்கவும் பெண்களின் உடல் காட்சிப் படுத்தப்படுகிறது.</strong></font></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/10/dsc_4001.jpg"><font color="#9b00d3"><strong><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="DSC_4001" border="0" alt="DSC_4001" src="http://tamizharivu.files.wordpress.com/2011/10/dsc_4001_thumb.jpg?w=244&#038;h=165" width="244" height="165" /></strong></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>பெண் தனக்கான வாழ்க்கையை வாழ இவ்வுலகில் இன்று வரையில் மறுக்கப்படுகிறது, ஏனைய மனிதர்களின் வாழ்க்கையை வாழும்படியோ, ஏனைய மனிதர்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கத் தன்னால் ஆன தியாகங்களைச் செய்யும்படியோ பெண்களை ஆண்களால் ஆளப்படுகிற இவ்வுலகம் தொடர்ந்து வற்புறுத்துகிறது. </strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>பெண்ணின் உடல் ஒரு உணவுப் பண்டத்தைப் போல நுகரப்பட்டு உமிழப்படுகிறது, பெண்களின் உடல் சேவைகளைச் செய்யப் படைக்கப்பட்டிருக்கும் ஒரு பருப்பொருளைப் போலவே நோக்கப்படுகிறது, ஒரு நீரோடையைப் போல நகர வேண்டிய பெண்ணுடலின் ஆசைகளை பல்வேறு குறியீடுகளின் மூலம் ஒடுக்கித் தேங்கிய குட்டையைப் போல மாற்றி வைத்திருப்பதில் நம் அனைவருக்கும் அளப்பரிய பங்கிருக்கிறது, </strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>சமூகத்தின் பொதுப் புத்தியில் உறைந்து போயிருக்கிற இந்தப் பெண்களுக்கு எதிரான மனநிலை சிறிய அளவில் ஒரு குற்ற உணர்வாகக் கூட நம்மிடம் காணப்படுவதில்லை, படுக்கை உட்பட நாம் எடுத்து எறிகிற ஒவ்வொரு பொருளும் அவற்றுக்கான இடங்களில் நிலைத்திருக்கும் பணியை எவ்வித எதிர்ப்புணர்வும் இல்லாமல் பெண்கள் நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம், இத்தகைய சூழலில் குடும்பங்களின் உணவுத் தேவைகள், குடிநீர்த் தேவைகள் மட்டுமன்றி உடைகளின் ஒவ்வொரு மடிப்பிலும் ஒரு பெண்ணின் கைரேகை படிந்து கிடப்பதை வெகு நுட்பமாக சூர்ப்பணங்கு உணர்த்துகிறாள்.</strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு ஆணாகக் குற்ற உணர்வு பீறிடுவதைத் தடுக்க இயலவில்லை, நகர வாழ்க்கையில் கொஞ்சமாய் வண்ணங்கள் பூசப்பட்டு மறைக்கப்பட்டிருக்கும் பெண் உடலுக்கு எதிரான இந்த சமூக மனநிலை ஊரகப் பகுதிகளில் எந்த வண்ணங்களும் இன்றி நிலைத்த உண்மையாகச் சுடுகிறது, போரில், சமூக அரசியல் இயக்கங்களில் பெண்கள் எதிர் கொள்ளும் அவமானங்கள், புராணங்களில் வெட்டி எறியப்படும் சூர்ப்பனகையின் மூக்கைப் போல நம் கண்களில் காட்சியாய் நெருடுகிறது, மேடையெங்கும் பெண்ணின் உடலை வெட்டி குருதி பொங்க வீசி எறிகிறார்கள் பங்கு பெற்ற நடிகர்களும், அதன் இயக்குனரும்.</strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>பெண்களின் கண்ணீரைப் போல அரங்கின் மேலிருந்து வெவ்வேறு அளவுகளில் ஒளி வழிந்து கொண்டே இருக்கிறது, சுற்றிலும் கட்டப்பட்டிருக்கும் மதில் சுவரைப் போல ஆண்மையைப் பெண்கள் உணர்வதை வெகு நேர்த்தியாகவும், உறுத்தல்கள் இன்றியும் இயக்குனர் முருகபூபதி கையாண்டிருப்பது அவருக்கு உண்மையிலேயே பெண்களின் விடுதலை குறித்த பெரிய அளவிலான தாக்கம் இருப்பதை பார்வையாளனுக்கு உணர்த்துகிறது.</strong></font></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/10/298790_1791829295015_1818137511_1173825_1051262563_n.jpg"><font color="#9b00d3"><strong><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="298790_1791829295015_1818137511_1173825_1051262563_n" border="0" alt="298790_1791829295015_1818137511_1173825_1051262563_n" src="http://tamizharivu.files.wordpress.com/2011/10/298790_1791829295015_1818137511_1173825_1051262563_n_thumb.jpg?w=184&#038;h=244" width="184" height="244" /></strong></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>பெண்ணின் உடலைச் சுற்றிப் பல்வேறு குறியீடுகளை நட்டு வைத்திருக்கும் மனித குலம், அந்தக் குறியீடுகளை நீக்காதவரை நாகரீக காலத்தில் நடமாடுவதாகச் சொல்வது மிகப்பெரிய பொய், பெண் நடந்து வருகிற ஓசையை அறிந்து கொள்வதற்கும், கணக்கிடுவதற்கும் கூடக் கொலுசுகளைக் கட்டி வைத்திருக்கும் இந்திய சமூகம், நிரந்தரமாய் அவளைத் தான் ஒரு அடிமை என்று உணர வைப்பதற்காய்த் தாலிகளைக் கண்டறிந்தது. </strong></font></p>
<p align="justify"><strong><font color="#9b00d3">நெற்றியில் இடப்படுகிற பொட்டின் வண்ணங்களில் இருந்து அளவுகள் வரையில் வெவ்வேறு அடிமைத்தளைக் குறிப்புகளை இட்டு வைத்திருக்கும் இந்த உலகம், பெண்ணுடலில் இடப்படும் ஒப்பனைப் பொருட்களில் கூட விடுதலையின் குறியீடுகளைத் தட்டிப் பறித்தது.</font><font color="#9b00d3">பெயர்களைத் தாண்டி, இடங்களைத் தாண்டி உலகெங்கும் பெண்கள் இப்படித்தான் வாழ்கிறார்கள் என்பதை நுட்பமான படிமங்களால் உணர்த்தும் &quot;சூர்ப்பணங்கு&quot; நாடக வரலாற்றில் வெகு வேகமாகக் காணாமல் போக வேண்டிய நிலையை உருவாக்குவது தான் நமக்கு முன்னிருக்கும் மிகப்பெரிய சவால்.</font></strong></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>நவீன நாடகங்களில் இசை வெறும் சடங்காக இல்லாமல் ஒரு பாத்திரமாக மாற்றப்படுவதில் தான் அந்தக் குறிப்பிட்ட நாடகத்தின் வெற்றி அடங்கி இருக்கிறது என்பதற்கு சூர்ப்பணங்கு ஒரு நேரலை சாட்சி, பல்வேறு நாட்டுப்புற இசைக்கருவிகளின் ஓலம் நாடகம் முழுவதும் நமது குற்ற உணர்வின் எல்லையை விரிவு படுத்திக் கொண்டே ஒரு தென்றலைப் போலத் துவங்கி புயலாய் ஒட்டு மொத்த வளிமண்டல அழுத்தமாய் இதயத்தின் புறச்சுவற்றைக் கீறிக் காயம் செய்கிறது. </strong></font></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/10/164817_1375804734661_1818137511_694197_1307873_n.jpg"><font color="#9b00d3"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/10/164817_1375804734661_1818137511_694197_1307873_n1.jpg"><strong><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="164817_1375804734661_1818137511_694197_1307873_n" border="0" alt="164817_1375804734661_1818137511_694197_1307873_n" src="http://tamizharivu.files.wordpress.com/2011/10/164817_1375804734661_1818137511_694197_1307873_n_thumb.jpg?w=196&#038;h=244" width="196" height="244" /></strong></a></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>உலகெங்கும் இடைவிடாது ஒலிக்கும் பெண்களின் ஓலத்தை சிற்சில இசைக் கருவிகளில் அடைத்து வந்து பார்வையாளனின் காதுகளுக்குள் ஒரு நாகப்பாம்பின் பிளவுற்ற நாவுகளைச் செருகி வதை செய்வது உன்னதமான ஒரு நிகழ்வு. ஆண்களின் உலகில் விழுதுகளைப் போலவும், தூண்களைப் போலவும் நிலைத்திருக்கும் சமநீதிக்கு எதிரான குறிகளாய் மண்டிக் கிடக்கும் அடையாளங்களைக் கலை என்கிற வெகு நுட்பமான கருவியின் மூலம் சூர்ப்பணங்கு வெட்டி எறிகிறாள், வெட்டுப்பட்ட காயத்தில் இருந்து கொப்பளித்து வெளிக்கிளம்பும் ஒவ்வொரு ஆணின் ஆற்றாமையும், குற்ற உணர்வும் புற உலகின் காயங்களை ஆற்றும் வல்லமை கொண்டது என்பது தான் இந்த நிகழ்த்துக் கலை வடிவத்தின் தனிச் சிறப்பு. </strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>நாடகம் முடிந்தும் சொல்லவும் உணரவும் முடியாத கயிற்றால் பிணைக்கப்பட்டு செவ்வண்ண மேலாடையும், வெள்ளை வண்ணக் கீழாடையும் அணிந்திருக்கும் பெண்ணின் உடல் &quot;எனக்கான நீதியைக் கொடு, எனக்கான வாழ்க்கையை எனக்குத் திருப்பிக் கொடு&quot; என்று ஓலமிட்டபடி கூடவே வருகிறது. சூர்ப்பணங்கு உலகெங்கும் வெவ்வேறு மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு நிகழ்த்தப்பட வேண்டிய ஒரு மிக முக்கியமான நவீன நாடகம்.</strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong></strong></font></p>
<h2 align="center"><font color="#ff0000">***************</font></h2>
<p><font color="#9b00d3"><strong></strong></font></p>
<p><font color="#9b00d3"><strong></strong></font></p>
<p><font color="#9b00d3"><strong></strong></font></p>
<p><font color="#9b00d3"><strong></strong></font></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/tamizharivu.wordpress.com/3004/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/tamizharivu.wordpress.com/3004/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/tamizharivu.wordpress.com/3004/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/tamizharivu.wordpress.com/3004/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/tamizharivu.wordpress.com/3004/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/tamizharivu.wordpress.com/3004/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/tamizharivu.wordpress.com/3004/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/tamizharivu.wordpress.com/3004/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/tamizharivu.wordpress.com/3004/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/tamizharivu.wordpress.com/3004/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/tamizharivu.wordpress.com/3004/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/tamizharivu.wordpress.com/3004/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/tamizharivu.wordpress.com/3004/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/tamizharivu.wordpress.com/3004/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamizharivu.wordpress.com&amp;blog=3902339&amp;post=3004&amp;subd=tamizharivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamizharivu.wordpress.com/2011/10/07/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b1%e0%af%81%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/53ac03245aa7ccb9e51dbd80eb41ca47?s=96&#38;d=http%3A%2F%2F1.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96&#38;r=G" medium="image">
			<media:title type="html">கை.அறிவழகன்</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/10/legring_thumb.jpg" medium="image">
			<media:title type="html">legring</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/10/sdc13474_thumb.jpg" medium="image">
			<media:title type="html">SDC13474</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/10/dsc_4001_thumb.jpg" medium="image">
			<media:title type="html">DSC_4001</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/10/298790_1791829295015_1818137511_1173825_1051262563_n_thumb.jpg" medium="image">
			<media:title type="html">298790_1791829295015_1818137511_1173825_1051262563_n</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/10/164817_1375804734661_1818137511_694197_1307873_n_thumb.jpg" medium="image">
			<media:title type="html">164817_1375804734661_1818137511_694197_1307873_n</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பெருநீரின் கிளை நதிகள்&#8230;&#8230;..</title>
		<link>http://tamizharivu.wordpress.com/2011/10/04/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a8%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		<comments>http://tamizharivu.wordpress.com/2011/10/04/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a8%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Tue, 04 Oct 2011 15:26:08 +0000</pubDate>
		<dc:creator>கை.அறிவழகன்</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">https://tamizharivu.wordpress.com/2011/10/04/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a8%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</guid>
		<description><![CDATA[உயிர் வாழ்க்கையின் ஒவ்வொரு துளியிலும் சாவின் அலைகள் இடைவிடாது புரண்டு கொண்டே இருக்கின்றன, சாவு என்கிற தவிர்க்கவே முடியாத முதலாளியிடம் மருத்துவ ஒப்பந்தங்களைச் செய்தபடி மனிதன் வாழ்நாட்களை நீட்டித்துக் கொள்கிறான், சாவு ஒரு வகையில் நிரந்தர அமைதியை உயிர்களுக்கு வழங்கி விடுகிறது, வில்லிலிருந்து புறப்பட்ட அம்பின் பயணத்தைப் போல மரணம் மனிதனைத் துரத்துகிறது, வளைந்தும், நெளிந்தும் கண்களை மூடியும் மனிதன் அதிலிருந்து தப்பி விடலாம் என்று ஓடிப் பார்க்கிறான், ஆயினும் இறுதியில் ஒருநாள் அம்பு தனது இலக்கை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamizharivu.wordpress.com&amp;blog=3902339&amp;post=2992&amp;subd=tamizharivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/10/8979_hi_res_picture_1.jpg"><font color="#9b00d3"><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="8979_hi_res_picture_1" border="0" alt="8979_hi_res_picture_1" src="http://tamizharivu.files.wordpress.com/2011/10/8979_hi_res_picture_1_thumb.jpg?w=244&#038;h=196" width="244" height="196" /></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3">உயிர் வாழ்க்கையின் ஒவ்வொரு துளியிலும் சாவின் அலைகள் இடைவிடாது புரண்டு கொண்டே இருக்கின்றன, சாவு என்கிற தவிர்க்கவே முடியாத முதலாளியிடம் மருத்துவ ஒப்பந்தங்களைச் செய்தபடி மனிதன் வாழ்நாட்களை நீட்டித்துக் கொள்கிறான், சாவு ஒரு வகையில் நிரந்தர அமைதியை உயிர்களுக்கு வழங்கி விடுகிறது, வில்லிலிருந்து புறப்பட்ட அம்பின் பயணத்தைப் போல மரணம் மனிதனைத் துரத்துகிறது, வளைந்தும், நெளிந்தும் கண்களை மூடியும் மனிதன் அதிலிருந்து தப்பி விடலாம் என்று ஓடிப் பார்க்கிறான், ஆயினும் இறுதியில் ஒருநாள் அம்பு தனது இலக்கை அடைந்து விடுகிறது. சாவு ஒரு கிரியா ஊக்கியாக இவ்வுலகின் இயக்கத்தை நிகழ்த்திப் பார்க்கிறது, உயிர்களின் துன்பங்களுக்கான காரணிகளைத் தேடி இலக்கியங்களைப் படைக்கிறது, அன்பு, காதல், இருத்தலுக்கான போராட்டம், உறவுகள், வீடு, நிலம், விவசாயம், நாகரீகம், மருத்துவம் என்று பல்வேறு துணை நதிகளை உருவாக்கியபடி வற்றாத நதியாய் சளைக்காமல் சாவு ஓடிக் கொண்டே இருக்கிறது.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">கடந்த வாரத்தில் வழக்கமான ஒருநாள் அலுவலக மாலை, தொலைபேசி ஒலிக்கிறது, மறுமுனையில் பதட்டமாய் தொழிற்சாலைப் பணியாளர் ஒருவர் &quot;ஐயா, கட்டுமானப் பணிகளின் போது ஒரு சுவர் இடிந்து மூன்று மனிதர்களின் மீது விழுந்து விட்டது. ஒருவர் கவலைக்கிடமாய் இருக்கிறார், இன்னுமிருவருக்குக் பலத்த காயங்கள், என்ன செய்ய???&quot; என்கிறார், &quot;உடனடியாக அங்கிருக்கும் பொறியாளரின் மகிழுந்தை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் பெரிய மருத்துவமனைக்கு மருத்துவமனை செல்லுங்கள்&quot; என்று சொல்லி விட்டு என்னுடைய உயர் அலுவலரிடம் சென்று &quot;இது போல ஒரு விபத்து நிகழ்ந்திருக்கிறது&quot; என்று நிலவரத்தைச் சொன்னேன். மும்பை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அவரும் பேசினார், உங்களைப் பிறகு அழைக்கிறேன் என்று சொல்லி என்னை இருக்கைக்குப் போகச் சொன்னார்.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">நான் திரும்ப இருக்கைக்கு வந்த பிறகு தொழிற்சாலை மேலாளரை அழைத்தேன், &quot;ஐயா நான் பிறகு பேசுகிறேன்&quot; என்று சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்துக் கொண்டார் அவர். என்னுடைய உயர் அலுவலர் சிறிது நேரம் கழித்து என்னைத் தொடர்பு கொண்டார், &quot;காயமடைந்தவர்கள் அனைவரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், நமது நிறுவனத்துக்கும் அவர்களுக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை, ஒப்பந்த நிறுவனத்தை அழைத்து விவரங்களைச் சொல்லிப் பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள்&quot; என்று சொன்னார். நான் மீண்டும் அவருடைய அறைக்குள் சென்று &quot;ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆயினும் அவர்கள் நமது நிறுவனத்தின் இடத்திலே வேலை செய்கிறார்கள், ஒப்பந்த நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் யாரும் அங்கே இருப்பதில்லை என்பதால், நாம் யாராவது அங்கு செல்வது மிக முக்கியமானது&quot; என்றேன், &quot;நீங்கள் சொல்வதும் சரியானதுதான், அப்படியானால் நீங்களே சென்று வாருங்கள்&quot; என்று சொல்லி விட்டு வீட்டுக்குக் கிளம்பத் தயாராகி விட்டார்.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">அலுவலக மகிழுந்தில் ஏறி அமர்ந்து மீண்டும் ஒருமுறை தொழிற்சாலை மேலாளரைத் தொடர்பு கொண்டேன், &quot;மிகவும் சன்னமான குரலில், ஐயா, ஒருவர் இறந்து விட்டார்&quot;, நகரத்தின் காற்று மண்டலத்தைச் சூழ்ந்து கொண்டிருக்கும் புகையைப் போல எனக்குள் கவலை படியத் துவங்கியது, &quot;எப்படி நிகழ்ந்தது இந்த விபத்து?, இறந்தவருக்கு என்ன வயது?, எந்த ஊரைச் சேர்ந்தவர்?&quot; என்று விவரங்களைக் கேட்டறிந்து கொண்டு மேலாளரிடம் &quot; நான் வரும் வரைக்கும் அருகிலேயே இருங்கள், காயம்பட்டவர்களின் உடல் நிலையை மருத்துவர்களிடம் அறிந்து கொண்டு உடனடியாக எனக்குத் தெரியப்படுத்துங்கள்&quot; என்றேன்.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே அடர்த்தியாய் அலைந்து திரிகிற காற்றைக் கிழித்துக் கொண்டு மகிழுந்து பயணிக்கும் போது மனம் அமைதியிழந்து தவிக்கிறது, நம்மைப் போலவே காலையில் வேலைக்குப் போவதாகச் சொல்லிக் கொண்டு தானே அந்த மனிதனும் வந்திருப்பான், அவனுடைய வாழ்க்கை வேலையிலேயே முடிந்து போனதாக அவனது பிள்ளைகளுக்கும், குடும்பத்தினருக்கும் சபிக்கப்பட்ட சொற்களால் தெரிவிக்க வேண்டுமே, அந்த நிமிடங்கள் தான் எத்தனை கொடுமையானது, அவனது உயிர் இயக்கங்களை நிறுத்திக் கொண்டு இந்தப் பேரண்டத்தின் பருப் பொருட்களில் ஒன்றாக மாறிப் போனான் என்று முத்தம் கேட்கிற குழந்தைகளுக்கும், அவனது குடும்ப உறுப்பினர்களுக்கும் யார் சொல்வது, அலறித் துடிக்கப்போகிற அவனது மனைவியை எந்தக் கைகள் ஆறுதல் செய்யும், நெஞ்செங்கும் முகம் தெரியாத அந்த மனிதனின் உலகம் படர்ந்து கிடக்கிறது, வழக்கமான தங்களின் சிந்தனைகளோடு அவர் அவருக்கான பயணம் நெடுஞ்சாலையில் தொடர்ந்து நீண்டு கிடக்கிறது.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">மருத்துவமனை வாயிலில் தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்ட மகிழுந்து கவலைகளும், உணர்வுகளும் இல்லாமல் காற்றோடு உரையாடத் துவங்குகிறது, காயங்களோடு படுத்திருக்கும் மனிதர்களை அவர்களின் உறவுகளைச் சந்தித்துக் கவலை அடைய வேண்டாம், உங்களுக்கான எல்லா மருத்துவ உதவிகளையும் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளும் என்கிற உறுதி மொழியைக் கொடுத்து விட்டு அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவரை அவரது அறையில் சென்று சந்தித்தபோது இரவு ஒன்பது மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. அதிகமாகக் காயமடைந்தவரின் மேல் மருத்துவத்தை இங்கு வழங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதையும், இன்னும் பெரிய மருத்துவமனை ஒன்றுக்கு அவரை உடனடியாக மாற்றுவது நல்லது என்றும் மருத்துவர் என்னிடம் சொன்னார். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">உடனடியாக ஒப்பந்த நிறுவனத்தின் முதலாளியை அலைபேசியில் அழைத்து தகவலைக் கொஞ்சம் கடுமையான தொனியில் சொன்னபோது அவர் ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லாதவர் போலக் கொஞ்சம் தயங்கிப் பின் ஒப்புக் கொண்டார். அதே இரவில் காயம்பட்ட மனிதரை வேறொரு பெரிய மருத்துவமனைக்கு அனுப்பும் போது &quot;அவரிடம் அருகில் சென்று இப்படி முணுமுணுத்தேன், &quot;நம்பிக்கையோடிருங்கள், உங்களுக்கு எதுவும் நிகழாது&quot; சிரிக்க முயன்றபடி அவசரகால ஊர்தியில் ஏறிப் புறப்பட்டார் அந்த மனிதர், கூடவே ஒரு ஒப்பந்தப் பொறியாளரும் பயணிக்க, நான் இப்போது இறந்து போன மனிதனைச் சந்திக்க வேண்டும்.</font></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/10/modern-artists.jpg"><font color="#9b00d3"><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="modern-artists" border="0" alt="modern-artists" src="http://tamizharivu.files.wordpress.com/2011/10/modern-artists_thumb.jpg?w=163&#038;h=244" width="163" height="244" /></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3">இவ்வுலகில் மிகக் கடுமையான சவால் இறந்து போன மனிதனின் முகத்தைக் காண்பது தான், ஏனெனில் இறந்து போன மனிதனின் முகம் தான் வாழ்வில் கடைசியும் பெரிதுமான உண்மை, அந்த உண்மையை எதிர் கொள்வது தான் உயிருள்ள எந்த மனிதனுக்கும் மிகக் கடுமையானது. இறந்து போன மனிதன் எந்தச் சலனமும் இல்லாமல் நம்மெதிரே படுத்திருக்கும் போது நமது உயிர் இயக்கம் எல்லாச் சலனங்களையும் கண்டடைகிறது, குழப்பத்தில் ஆழ்கிறது, நடுங்கியபடி தற்காலிகமாக எண்ணங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளத் துடிக்கிறது, ஆயினும் நான் இந்த நீண்ட இரவில் எப்போதாவது அந்த இறந்த மனிதனின் முகத்தைச் சந்தித்தே ஆக வேண்டும், என்னை நானே தயார் செய்து கொண்டு அங்கிருந்த மருத்துவரிடம் &quot;ஐயா, நான் இறந்து போன மனிதனைப் பார்க்க வேண்டும்&quot; என்றேன். வாயிலில் நின்று கொண்டிருந்த ஒரு பணியாளரை அழைத்து என்னைக் கூட்டிப் போய் மார்ச்சுவரி என்றழைக்கப்படும் பிணவறையில் விடுமாறு சொல்லி விட்டு அமைதியானார். </font></p>
<p align="justify"><font color="#9b00d3">அறைக்குள் சென்று கொஞ்சம் தயங்கிய கால்களை இழுத்து அழைத்துக் கொண்டு அந்த மனிதன் கிடத்தப்பட்டிருந்த மேசைக்கு எதிரே நின்ற போது எந்த அசைவுகளும் உணர்வுகளும் இன்றி இறுதி உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான் கோவிந்தப்பா என்கிற அந்த இருபத்தாறு வயதே நிரம்பிய இளைஞன். அவனது கண்கள் கடைசியாய்ச் சந்தித்த காட்சியின் வெளியில் நிலைத்திருந்தது, அவனது வாய் கடைசிச் சொல்லின் உச்சரிப்பை இன்னும் மிச்சம் வைத்திருந்தது, அவனது முகத்தை உற்றுப் பார்க்கத் துவங்கிய போது அச்சம் நீங்கி ஆறுதலும், பரிதாபமும் பெருகியது, இறந்த மனிதர்களைக் கண்டு நாம் ஏன் அஞ்சி நடுங்குகிறோம் என்கிற கேள்வி அந்த நேரத்திற்குப் பொருந்தி இருக்காவிட்டாலும் எனக்குள் மிகப்பெரியதாக எழுந்து நின்றது. எதிர்பாராத மரணத்தைச் சந்தித்த இந்த மனிதனின் இழப்பை யாரால் எப்படி ஈடு செய்ய முடியும் என்று பெருமூச்செறிந்தபடி அந்த இடத்தை விட்டு நகரத் துவங்கினேன்.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">வெளி வாசலில் மருத்துவரும், காவல்துறை அலுவலர் ஒருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள், அவரைச் சுற்றி உறவினர்களும், ஊர்ப் பெரியவர்கள் சிலரும் நின்று கொண்டிருக்க மருத்துவர் என்னருகில் வந்து என்னை அந்தக் காவல்துறை அலுவலருக்கு அறிமுகம் செய்து விட்டு இப்படிச் சொன்னார், ஐயா, இரவிலேயே &quot;போஸ்ட் மோர்டேம்&quot; எனப்படும் பரிசோதனை நிகழ்த்தப்பட வேண்டும், ஊர்தி தயாராக இருக்கிறது, அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுங்கள்&quot; என்று சொன்னார், இரவோடு இரவாக அந்த இறந்த மனிதனின் உடலைக் கடத்தி விட வேண்டும் என்பதில் தனியார் மருத்துவமனை உறுதியாக இருக்கிறது. </font></p>
<p align="justify"><font color="#9b00d3">ஊர்தியில் ஏற்றப்பட்ட கோவிந்தப்பாவின் உடலோடு பயணிக்க அவரது தாயார் மட்டுமே அங்கே இருந்தார், இறந்து போன தனது மகனின் முகத்தை வழிகிற கண்ணீரோடு சேலைத் தலைப்பின் முனைகளின் ஊடாகத் தனிமையில் பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தாயைப் பார்க்கச் சகிக்காமல், நானும் அந்த ஊர்தியின் பின்புறத்தில் ஏறிக் கொண்டேன், கோவிந்தப்பா என்கிற அந்த இளைஞனுடன் கடைசியாகப் பயணம் செய்கிற வாய்ப்பு எனக்கும் அவனது தாய்க்கும் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. நாங்கள் அந்தப் பயணத்தில் ஏதும் பேசிக் கொள்ளவில்லை.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">அரசு மருத்துவமனையின் பிணக் கிடங்கும், இறந்த உடலை ஆய்வு செய்யும் அறையும் அருகருகில் இருந்தன, அரக்கு உடையணிந்த இரண்டு பணியாளர்கள் ஒரு தூக்குப் பலகையை எடுத்து வந்து கோவிந்தப்பாவின் உடலை உள்ளே எடுத்துச் சென்றார்கள், &quot;சிமெண்ட்&quot; மேடை ஒன்றில் கிடத்தி உடைகளைக் களையத் துவங்கியவர்களில் ஒருவர் என்னைப் பார்த்து வெளியே இருக்கும் படி சைகை காட்டினார். நான் வெளியேற மனமின்றி அங்கேயே நின்றிருந்தேன், கொஞ்சம் இளையவராக இருந்த அந்தப் பணியாளர்களில் ஒருவர் கோவிந்தப்பா வின் உடலை பின்புறமாக அணைத்தபடி மேலே தூக்கி ஒரு முறை நிமிர்த்தினார், அப்போது அந்தப் பணியாளரின் முகத்தை உற்று நோக்கினேன் நான், ஏறத்தாழ கோவிந்தப்பாவின் முகத்தைப் போலவே எந்தச் சலனமும் இன்றி இருந்தது அவரது முகம்.</font></p>
<p align="justify"><font color="#9b00d3">உடல் ஆய்வு செய்யும் அந்த இரவு நேர மருத்துவர், அப்போது தான் எழுந்து வந்தவர் போலிருந்தார், வரும் போதே எத்தனை உடல்கள் என்ற கேள்வியோடு வந்தார் அரசு மருத்துவர், அதற்கு மேலாக என்னை அங்கே நின்றிருக்க அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும், கதவு தாழிடப்பட்டது, உடைக்கப்படும் ஓசைகளும், நெகிழ்த்தப்படும் ஓசைகளும் நிறைந்து கிடக்கும் அந்த அறைக்கு வெகு தொலைவில் நான் துரத்தப்பட்டேன். என்னருகில் உயிருள்ள நிறைய உடல்கள் வெவ்வேறு பெயர்களில் நடமாடிக் கொண்டிருந்தன, ஒருவரைக் காவல்துறை உயர் அலுவலர் என்கிறார்கள், ஒருவரை மருத்துவர் என்கிறார்கள், ஒருவரை ஓட்டுனர் என்கிறார்கள், இன்னும் சிலரை லிங்காயத்துகள் என்றும், கௌடர்கள் எனவும் அடையாளம் செய்து கொண்டே இருக்கிறார்கள் மனிதர்கள், எதிரில் இருக்கும் அறைக்குள் கிடத்தப்பட்டிருக்கிற எந்த மனிதருக்கும் அடையாளங்கள் இல்லை, அவை பிணங்கள் என்கிறார்கள், உடல் ஆய்வுக்கு வரும் எல்லா மனிதர்களின் உடலையும் ஒரே மாதிரியாகத்தான் மருத்துவர்கள் உடைத்தும் கீறியும் ஆய்வு செய்கிறார்கள்.</font></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/10/3d-chalk-art-waterfall-parking-lot-edgar-mueller.jpg"><font color="#9b00d3"><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="3d-chalk-art-waterfall-parking-lot-edgar-mueller" border="0" alt="3d-chalk-art-waterfall-parking-lot-edgar-mueller" src="http://tamizharivu.files.wordpress.com/2011/10/3d-chalk-art-waterfall-parking-lot-edgar-mueller_thumb.jpg?w=244&#038;h=192" width="244" height="192" /></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3">இரவு நீண்டு எங்களைக் கடந்து செல்வது போலிருக்கிறது விடியல் பறவைகளின் ஓசை, அவை இன்னொரு நாளை வரவேற்கத் தயாராகின்றன, வழக்கம் போலவே மனிதர்கள் தங்களுக்குள் எப்போதும் ஒளிந்திருக்கும் பிணத்தை மூடி மறைத்து ஆடைகளை அணிந்து கொள்வார்கள், அடையாளங்களை ஒப்பனைப் பொருட்களைப் போல அணிந்து கொண்டு இன்னொரு மனிதனை இவன் என்னை விடப் பிறப்பால் தாழ்ந்தவன் என்றும், உயர்ந்தவன் என்றும் சொல்லிச் சொல்லி மகிழ்வார்கள், அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள், மருத்துவமனைகளின் பிணவறைகளில் அவர்களின் எல்லா அடையாளங்களும் நீக்கம் பெற்று விடும் என்று&#8230;&#8230;&#8230;..</font></p>
<p align="justify"><font color="#9b00d3">கோவிந்தப்பாவின் உடல் ஆய்வு முடிந்து நீல நிறத் துணியால் அவனைப் போர்த்தி எடுத்து வந்து மீண்டும் ஊர்தியில் கிடத்தும் போது அவ்விரண்டு பணியாளர்களும் களைத்திருந்தார்கள், அவர்களின் பணி இங்கே நின்று கொண்டிருக்கும் எல்லா மனிதர்களின் பணியை விடவும் மேன்மையானது போலவும், கடுமையானது போலவும் எனக்குத் தோன்றியது, ஏனென்றால் நாம் எப்போதாவது சந்திக்கும் இறந்த மனிதர்களின் முகத்தை அவர்கள் எப்போதும் எதிர் கொள்கிறார்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து விட்டு நகர்ந்து கொண்டேன் நான், ஊர்தி நகரத் துவங்கியது, இனி இறப்புக்கான எளிமையான சடங்குகள் சிலவற்றைச் செய்து கோவிந்தப்பாவின் வாழ்க்கை வரலாறு முற்றுப் பெறும். விடியத் துவங்கி இருக்கிறது, பிணவறையின் பக்கத்தில் இருந்த ஆலமரத்தில் பறவைகள் கிளைகளில் இருந்து பறப்பதும், பிறகு அமர்வதுமாய் போக்குக் காட்டிக் கொண்டிருந்தன, வானம் தெளிவானதாய் நீல நிறத்தில் மிளிரத் துவங்குகிறது, மருத்துவமனை படிக்கட்டுகளில் ஒரு நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் அமர்ந்திருக்கிறாள், இன்னொரு உயிரை இந்த உலகுக்கு வழங்கத் தயாராக இருக்கும் அந்தப் பெண்ணின் முகத்தில் தாய்மையின் அன்பு நிரம்பிக் கிடக்கிறது, சிலவற்றை உண்டாக்கியபடியும், சிலவற்றை அழித்தபடியும் காலம் சாவு என்கிற மற்றொரு பெயரில் ஒரு பெருத்த நதியைப் போல ஓடிக் கொண்டே இருக்கிறது.</font></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/10/the-river-artwork.jpg"><font color="#9b00d3"><img style="background-image:none;border-bottom:0;border-left:0;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;border-top:0;margin-right:auto;border-right:0;padding-top:0;" title="the-river-artwork" border="0" alt="the-river-artwork" src="http://tamizharivu.files.wordpress.com/2011/10/the-river-artwork_thumb.jpg?w=244&#038;h=139" width="244" height="139" /></font></a></p>
<p align="justify"><font color="#9b00d3">அலைபேசி ஒலிக்கிறது, மறுமுனையில் என்னுடைய உயர் அலுவலர், &quot;நிறுவனம் இறந்த மனிதரின் மனைவிக்கு நிரந்தர வேலை கொடுக்கும், ஒப்பந்த நிறுவனம் இழப்பீட்டுத் தொகை கொடுக்கும்&quot; என்றார். &quot;அதெல்லாம் சரி ஐயா, அந்த மூன்று வயதுக் குழந்தைக்கு தந்தையை யார் கொடுப்பார்கள்?&quot; என்று கேட்கத் தோன்றியது எனக்கு. தந்தை இல்லாத, தாய் இல்லாத குழந்தைகளும் கால நதியின் ஓட்டத்தில் சில கிளை நதிகள் போல&#8230;&#8230;நாம் என்ன செய்வது&#8230;&#8230;</font></p>
<p align="justify"><font color="#9b00d3"></font></p>
<p><font color="#9b00d3"></font></p>
<p><font color="#9b00d3"></font></p>
<p><font color="#9b00d3"></font></p>
<p><font color="#9b00d3"></font></p>
<p align="center"><strong><font color="#ff0000" size="5">**********</font></strong></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/tamizharivu.wordpress.com/2992/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/tamizharivu.wordpress.com/2992/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/tamizharivu.wordpress.com/2992/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/tamizharivu.wordpress.com/2992/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/tamizharivu.wordpress.com/2992/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/tamizharivu.wordpress.com/2992/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/tamizharivu.wordpress.com/2992/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/tamizharivu.wordpress.com/2992/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/tamizharivu.wordpress.com/2992/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/tamizharivu.wordpress.com/2992/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/tamizharivu.wordpress.com/2992/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/tamizharivu.wordpress.com/2992/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/tamizharivu.wordpress.com/2992/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/tamizharivu.wordpress.com/2992/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamizharivu.wordpress.com&amp;blog=3902339&amp;post=2992&amp;subd=tamizharivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamizharivu.wordpress.com/2011/10/04/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a8%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/53ac03245aa7ccb9e51dbd80eb41ca47?s=96&#38;d=http%3A%2F%2F1.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96&#38;r=G" medium="image">
			<media:title type="html">கை.அறிவழகன்</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/10/8979_hi_res_picture_1_thumb.jpg" medium="image">
			<media:title type="html">8979_hi_res_picture_1</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/10/modern-artists_thumb.jpg" medium="image">
			<media:title type="html">modern-artists</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/10/3d-chalk-art-waterfall-parking-lot-edgar-mueller_thumb.jpg" medium="image">
			<media:title type="html">3d-chalk-art-waterfall-parking-lot-edgar-mueller</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/10/the-river-artwork_thumb.jpg" medium="image">
			<media:title type="html">the-river-artwork</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>மணிமுடிக் கனவுகள்&#8230;&#8230;</title>
		<link>http://tamizharivu.wordpress.com/2011/09/30/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		<comments>http://tamizharivu.wordpress.com/2011/09/30/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 30 Sep 2011 12:07:58 +0000</pubDate>
		<dc:creator>கை.அறிவழகன்</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">https://tamizharivu.wordpress.com/2011/09/30/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</guid>
		<description><![CDATA[முதல் நாள் இரவின் கனவில் கூட நான் இந்தப் பயணம் மேற்கொள்வது குறித்து அறிந்திருக்கவில்லை, தம்பிக்குக் குழந்தை பிறந்திருக்கிறது, தம்பி மனைவிக்குச் சொந்த ஊர் கும்பகோணம், குடும்பத்தின் புதிய வரவைக் காண்பதற்காக நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறை விரைவுத் தொடர் வண்டியில் பயணித்து நேற்றுக் காலை ஆறு மணிக்கெல்லாம் கும்பகோணம் சென்றாகி விட்டது. போன கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அரசலாற்றின் கிளை ஒன்றில் ஆடைகளற்ற சிறுவர்களோடு மனதை மயக்கும் நீண்ட குளியல், வழக்கமான அன்பு விசாரிப்புகள், அணைப்புகள், எளிய [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamizharivu.wordpress.com&amp;blog=3902339&amp;post=2983&amp;subd=tamizharivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p align="justify"><font color="#9b00d3"><strong><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/09/001.jpg"><img style="display:block;float:none;margin-left:auto;margin-right:auto;" title="001" alt="001" src="http://tamizharivu.files.wordpress.com/2011/09/001_thumb.jpg?w=240&#038;h=180" width="240" height="180" /></a></strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>முதல் நாள் இரவின் கனவில் கூட நான் இந்தப் பயணம் மேற்கொள்வது குறித்து அறிந்திருக்கவில்லை, தம்பிக்குக் குழந்தை பிறந்திருக்கிறது, தம்பி மனைவிக்குச் சொந்த ஊர் கும்பகோணம், குடும்பத்தின் புதிய வரவைக் காண்பதற்காக நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறை விரைவுத் தொடர் வண்டியில் பயணித்து நேற்றுக் காலை ஆறு மணிக்கெல்லாம் கும்பகோணம் சென்றாகி விட்டது. </strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>போன கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அரசலாற்றின் கிளை ஒன்றில் ஆடைகளற்ற சிறுவர்களோடு மனதை மயக்கும் நீண்ட குளியல், வழக்கமான அன்பு விசாரிப்புகள், அணைப்புகள், எளிய மனிதர்களின் பண்பட்ட விருந்தோம்பல் என்று காலை ஒன்பது மணி வரைக்கும் காலம் விரைந்தோடியது. </strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>ஒன்பது முப்பதுக்கு ஒரு மனிதர் வந்தார், அவர் யாரென்று தெரியாது, உறவினர் என்பது மட்டும் தெரியும், ஒரு ஐந்து நிமிடம் பேசிக் கொண்டிருந்தோம், விடை பெறும் போது எப்போது கிளம்புகிறீர்கள் என்று கேட்டார், குறைந்தது இரண்டு நாட்கள் இருப்போம் என்ற ஆவலில் பக்கத்தில் இருக்கும் புகழ் பெற்ற வழிப்பாட்டிடங்கள் எல்லாவற்றையும் எனக்குச் சொல்லிக் கொண்டே வந்தார், ஆர்வமின்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன், கடைசியில் “கங்கை கொண்ட சோழபுரம்” இங்கிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் தான் இருக்கிறது என்று சொல்லி விட்டு விடைபெற்றார். </strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/09/022.jpg"><img style="display:block;float:none;margin-left:auto;margin-right:auto;" title="022" alt="022" src="http://tamizharivu.files.wordpress.com/2011/09/022_thumb.jpg?w=240&#038;h=180" width="240" height="180" /></a></strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>அதுவரையில் இல்லாத ஆர்வமும், பொறியும் படக்கென்று நெஞ்செங்கும் ஒட்டிக் கொண்டு விட்டது, மனம் பரபரக்கத் துவங்கித் திட்டங்களைத் தன்னிச்சையாக இடத் துவங்கியது. பள்ளிக் காலங்களில் இருந்தே “கங்கை கொண்ட சோழபுரம்” என்ற அந்தப் பெயர் என் மனதை மயக்கும் ஒரு அதிசயமாக இருந்தது, கங்கை கொண்ட சோழபுரத்தின் கோபுரத்தை எங்காவது புகைப்படத்தில் கண்டு விட்டால் ஏறத்தாழ ராஜேந்திர சோழன் உயிர் பெற்று என்னருகில் வந்து விடுவதைப் போலவே ஒரு பிரம்மாண்டத்தை எனக்குள் நானே கட்டமைத்துக் கொண்டிருந்தேன். அந்தக் கனவுலகில் காலடி பாதிக்கும் நாளுக்காய் எனது நினைவுச் செல்களில் சில எப்போதும் காத்திருந்தன.</strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>இறுதியில் அந்தப் பயணம் துவங்கி விட்டது, கும்பகோணத்தில் இருந்து அணைக்கரைக்குப் பேருந்தில் பயணம் செய்து பிறகு அங்கிருந்து தனியார் பேருந்திலோ தானியிலோ பத்துக் கிலோ மீட்டர் செல்ல வேண்டும் என்ற ஒரு உள்ளூர் ஓட்டுனரின் வழிகாட்டுதலைப் பற்றிக் கொண்டு அணைக்கரைப் பேருந்தில் அமர்ந்த போது மனம் சோழ மன்னர்களின் அளப்பரிய ஆதிக்கத்தை அசை போடத் துவங்கி இருந்தது. </strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>ஏறத்தாழ தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களில் சோழர்களால் கட்டப்பட்ட கோவில்கள், மண்டபங்கள், அரண்மனைகள் என்று தங்களின் ஆட்சிக் காலத்தை அவர்கள் வரலாற்றில் நிலை நிறுத்திச் சென்றிருக்கிறார்கள், வேறெந்த மன்னர்களும் மிகப் பெரிய கட்டிடங்களைக் கட்டித் தங்கள் வெற்றியைப் பதிவு செய்யவில்லை அல்லது அத்தகைய வெற்றிகளைப் பெறவே இல்லை. </strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/09/023.jpg"><img style="display:block;float:none;margin-left:auto;margin-right:auto;" title="023" alt="023" src="http://tamizharivu.files.wordpress.com/2011/09/023_thumb.jpg?w=240&#038;h=180" width="240" height="180" /></a>ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சைப் பெரிய கோவிலின் இன்னொரு மாதிரியைப் போலக் கட்டத் துவங்கப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை அவரது மகன் ராஜேந்திர சோழனால் கட்டி முடிக்க இயலவில்லை, அதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன, உண்மை ராஜேந்திர சோழனுக்கு மட்டுமே தெரியும் போலிருக்கிறது.</strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>அணைக்கரை என்பது உண்மையிலேயே ஒரு அணையின் கரை என்பது அங்கு சென்ற போது தான் விளங்கியது, ஒரு அணையில் நீர் ததும்பிக் கொண்டிருக்க மற்றொரு அணையின் சீரமைப்புப் பணிகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது, பேருந்து குறித்த விவரங்களை அருகில் இருந்த கடையில் கேட்டபோது இரவு திரும்பிச் செல்வதற்கான தொடர்வண்டியின் பயணச் சீட்டு நினைவுக்கு வந்தது, ஒரு தானியைப் பிடித்துக் கொண்டு செல்வதே விரைவானதாகவும், எளிதானதாகவும் இருக்கும் என்று முடிவு செய்து தானியில் அமர்ந்தாயிற்று. </strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>மற்றொரு அணையைக் கடக்க இயலாதபடி அதன் சீரமைப்புப் பணிகள் தடையாக இருக்கவே ஆற்றுக்குள் ஒரு தற்காலிகச் சாலை உருவாக்கப்பட்டிருக்கிறது, நீரால் சூழப்பட்டிருக்கும் தஞ்சையின் மண்வளம், பசுமையை வழியெங்கும் அள்ளித் தெளித்திருக்கிறது, சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் தானி பயணிக்கத் துவங்கி இருந்த போது தன்னிச்சையாகக் கண்கள் அந்த வரலாற்றுச் சின்னத்தின் உயர்தனி அடையாளத்தைத் தேடத் துவங்கியது. </strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>மரங்களின் ஊடாக திடுக்கென்று தோன்றி மறைந்த மலைக்க வைக்கும் அந்த கோபுரத்தைக் கண்டபோது மனம் ஒரு பறவையைப் போல சிறகடிக்கத் துவங்கியது, ஆம், வாழ்க்கையின் நெடுநாளையக் கனவான ஒரு காட்சி இப்போது என் கண்களில் தோன்றுவதும், மறைவதுமாய்ப் போக்குக் காட்டிக் கொண்டிருந்தது, நெடுஞ்சாலையில் இருந்து கிளைத்துப் பிரியும் கங்கை கொண்ட சோழபுரத்தின் நுழைவாயிலில் தானி இயக்கத்தை நிறுத்திக் கொண்ட போது எனது உயிரியக்கம் அதிகமாகத் துவங்கி இருந்தது,</strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/09/011.jpg"><img style="display:block;float:none;margin-left:auto;margin-right:auto;" title="011" alt="011" src="http://tamizharivu.files.wordpress.com/2011/09/011_thumb.jpg?w=240&#038;h=180" width="240" height="180" /></a></strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>&quot;யுனெஸ்கோ&quot; என்கிற உலகத் தொல்லியல் ஆய்வுக் கழகத்தால் உலகின் கட்டிடங்களில் ஒரு அதிசயமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிற இந்த வரலாற்றுச் சின்னத்தை குறைந்த பட்சம் தமிழகத்தில் இருக்கும் நாமாவது ஒரு முறை பார்த்து விட வேண்டும், அழகிய புல்வெளிகளில் நமது வாழ்க்கைக்குக் கொஞ்சம் கூடத் தொடர்பே இல்லாமல் அப்படி ஒரு பிரம்மாண்டமான கட்டிடம் நிலை நிறுத்தப்பட்டிருப்பதைக் காணும் போது வரலாற்று உணர்வும், அழகியல் உணர்வும் இருக்கும் யாரும் என்னைப் போலவே மலைத்துப் போய்க் கிடப்பார்கள்.</strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>இறைவழிபாட்டிற்கு அப்பால் மிகப் பெரிய வெளியில் வழிந்து கிடக்கிற கட்டிடக் கலை நுட்பங்களும், அதன் பின்னால் இருக்கிற வரலாற்று நிகழ்வுகளையும் கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தால் நிகழ்காலத்தில் இருந்து தூக்கி எறியப்படும் ஒரு துகளைப் போல நாம் மிதக்க நேரிடலாம்.</strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>கட்டிடத்தின் பிரம்மாண்டம் ஒரு புறம் இருக்கட்டும், இதன் பிரம்மாண்டத்தை நிறுவுவதற்காக சோழ மன்னர்கள் கையாண்ட கட்டுமான யுத்திகள் மலைக்க வைப்பவை மட்டுமல்ல, எளிய உழைக்கும் மக்களின் உயிர் வாழ்க்கையை ஒரு பொருட்டாகவே கருதாத தினவும் நிறைந்தவை. </strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>மிக உயரமான மண்மேடுகளை நிறுவி யானைகளைக் கொண்டும், குதிரைகளைக் கொண்டும் மிகப் பெரிய பாறைகளை மேலேற்றிச் செதுக்கும் முறையை இந்தக் கோவில்களைக் கட்டுவதற்கும், அரண்மனைகளைக் கட்டுவதற்கும் அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள், யானைகளும், குதிரைகளும் பற்றாக் குறையாகும் போது அவ்விடத்தில் மனிதர்களைப் பொருத்திப் பல உயிர்களை அழித்திருக்கிறார்கள். </strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>தஞ்சைப் பெரிய கோவிலைச் சுற்றியும், கங்கை கொண்ட சோழபுரத்தின் பெரிய கோவிலைச் சுற்றியும் அப்படியான அழிவு ஆரங்கள், அடையாளங்களாய் இன்னும் நிலைத்திருக்கின்றன, இடைப்பட்ட விவசாய நிலங்களைக் கோவில் நிலங்களாக அறிவித்த சோழ மன்னர்கள், அங்கிருந்த விவசாயிகளைத் துரத்தி அடித்தார்கள். </strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/09/032.jpg"><img style="display:block;float:none;margin-left:auto;margin-right:auto;" title="032" alt="032" src="http://tamizharivu.files.wordpress.com/2011/09/032_thumb.jpg?w=240&#038;h=180" width="240" height="180" /></a></strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>ஒடுக்கப்பட்ட, எளிய மனிதன் அங்கேயும் போராடி இருக்கிறான், இத்தகைய நிலக் கையகப்படுத்தலை எதிர்த்துத் தஞ்சையைச் சுற்றி இருக்கும் பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் அரண்மனைக்கு எதிராகவோ குறிப்பிட்ட கோவில் வாசலிலோ தலையை அறுத்துக் கொண்டு போராடி இறந்திருக்கிறார்கள், மன்னராட்சியின் கொடுமைகளுக்குத் தங்களின் எதிர்ப்பைக் காட்ட அன்றைய விவசாயிக்கு அது ஒன்று தான் வழியாக இருந்திருக்கிறது. </strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>ராஜ ராஜ சோழனுக்கும், அவனது மகன் ராஜேந்திர சோழனுக்கும் இடையில் ஒரு பனிப் போர் நிகழ்ந்து வந்ததாகச் சொல்கிறார்கள், தனது தந்தையை விடவும் ஒரு பிரம்மாண்டமான கோவிலை வடிவமைக்கும் பொருட்டே ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தை நிறுவினான் என்று சில வரலாற்று ஆய்வாளர்களும், இல்லை, கங்கை வரையிலான தனது வெற்றியை வரலாற்றில் பொறிக்க வேண்டியே இந்த நகரத்தை ராஜேந்திர சோழன் வடிவமைத்தான் என்று இன்னும் சிலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். </strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>கங்கை கொண்ட சோழபுரத்தின் கோவில் கோபுரம் தஞ்சைப் பெரிய கோவிலின் கோபுரத்தை விடவும் சிறியதாக இருப்பதால், தந்தையை விஞ்சி விட வேண்டும் என்கிற ராஜேந்திர சோழனின் கதை கொஞ்சம் தொய்வடைகிறது. கண்ணில் தென்படும் கோவிலைத் தவிர “கங்கை கொண்ட சோழபுரம்” சோழ சாம்ராஜ்யத்தின் பெருமைகள் பலவற்றைத் தனக்குள் உள்ளடக்கி உறங்கிக் கிடக்கிறது, அரண்மனையின் மீள் தடங்கள், கட்டுமான எச்சங்கள் என்று ஏறத்தாழ பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் பல்வேறு புதைந்த வரலாற்றுப் படிமங்கள் நிறைந்து கிடக்கிறது. </strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/09/041.jpg"><img style="display:block;float:none;margin-left:auto;margin-right:auto;" title="041" alt="041" src="http://tamizharivu.files.wordpress.com/2011/09/041_thumb.jpg?w=180&#038;h=240" width="180" height="240" /></a></strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>வெள்ளையர்களால் சிதைக்கப்பட்ட மதில் சுவர்கள் வெறும் கற்களாய் அணைகளைக் கட்டப் பயன்பட்டிருக்கிறது. ராஜராஜ சோழனுக்குப் பிறகு எல்லாச் சோழ மன்னர்களும் கங்கை கொண்ட சோழபுரத்தில் தான் பதவியேற்றுக் கொண்டார்கள் என்கிறது வரலாறு, கடற்படை, காலாட்படை, யானைப்படை, குதிரைப் படை என்று தெற்கு ஆசியாவின் பரந்த எல்லைகளை வெற்றி கொண்ட ஒரு மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட இந்த நகரம் இப்போது ஒரு கோவிலின் சிதிலங்களோடு ஒடுங்கிக் கிடக்கிறது. </strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>ராஜேந்திர சோழனின் இந்த போர் வெறிக்கும், அடங்காத நில ஆளுகை ஆவலுக்கும் ஒரு நெடிய காரணம் இருக்கிறது, ராஜேந்திர சோழனின் தந்தை வழிப் பாட்டனாருக்குப் பாட்டனார் பராந்தகச் சோழன், பாண்டிய மன்னன் மூன்றாம் ராஜசிம்மனைப் போரில் வென்றிருக்கிறான், ஆனால், அவனைக் கைது செய்து மணி முடியைக் கைப்பற்ற முடியவில்லை, போரில் தோற்ற ராஜசிம்மன் கடல் வழியாகத் தப்பி ஓடி இலங்கை மன்னன் ஒருவனிடம் மணி முடியைக் கையளித்து ஒளிந்து கொண்டான். </strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>பராந்தகச் சோழனுக்கு தனது வாழ்நாளில் எப்படியாயினும் அந்த மணிமுடியைக் கைப்பற்றி அணிந்து கொள்ள வேண்டும் என்கிற அடங்காத ஆவல் இருந்ததாகச் சொல்கிறார்கள், ஆசை நிறைவேறாமலேயே இறந்து போன பராந்தகச் சோழனின் மணிமுடிக் கனவு பரம்பரை பரம்பரையாகக் கடத்தப்பட்டிருக்கிறது, அதன் காரணமாகவே தெற்கு ஆசியாவின் பல்வேறு நாடுகளின் மீது ராஜேந்திர சோழன் போர் தொடுத்தான், வெற்றி கொண்டான் என்றும் சில வரலாற்றுக் குறிப்புகள் சொல்கிறது.</strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/09/046.jpg"><img style="display:block;float:none;margin-left:auto;margin-right:auto;" title="046" alt="046" src="http://tamizharivu.files.wordpress.com/2011/09/046_thumb.jpg?w=240&#038;h=180" width="240" height="180" /></a></strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>கோவிலின் முகப்பில் இருக்கும் நுழைவாயிலின் சிதிலமடைந்த பாறைகளின் மீது ஏறி மேல் தளத்திற்குச் சென்று சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்த போது அந்தக் கோவில் கட்டிடத்தின் பிரம்மாண்டமும், கோபுரத்தின் உயரமும் பத்தாம் நூற்றாண்டுக்குள் என்னை அழைத்துச் சென்றது, பத்தாம் நூற்றாண்டின் கனவுலகில் பயணித்துக் கொண்டிருந்த போது குனிந்து கீழே பார்த்தால் &quot;யோவ், தம்பி, இறங்குய்யா, இறங்குய்யா&quot; என்று இரண்டு மூன்று மனிதர்கள் நுழைவாயிலை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார்கள். உடனடியாக இருபத்தோராம் நூற்றாண்டுக்குள் குதித்து அவர்களிடம் சமாதானம் பேச வேண்டியிருந்தது.</strong></font></p>
<p align="justify"><font color="#9b00d3"><strong>ஒரு வழியாகச் சோழர்களின் தலைநகரத்தில் இருந்து விடை பெற வேண்டும் என்கிற எண்ணத்தை கைக்கடிகாரம் உணர்த்தியது, காத்திருந்த தானி ஓட்டுனரை அடைந்த போது வெளிர் நீல நிறத்தில் ஒரு கப்பல் மாதிரியான மகிழுந்து நின்று இளைப்பாறத் துவங்கியது, அதன் கதவுகளைத் திறந்து கொண்டு இறங்கிய ஜெர்மானியச் சுற்றுலாப் பயணிகளின் முகம் கோபுரத்தின் பிரம்மாண்டத்தைப் பார்த்து வியப்பில் கலவரமடைந்து &quot;வாவ்வவ்வ்வ்வ்&quot; என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தது. மீண்டும் ஒருமுறை அந்த உயர்ந்த கோபுரத்தைப் அருகில் இருந்து ஆசை தீரப் பார்த்து விட்டுக் கிளம்பினோம் நானும் ஓட்டுனரும், வழியெங்கும் மரங்களின் ஊடாக மீண்டும் மறைந்தும், தோன்றியும் வரலாற்றைப் போல வந்து கொண்டிருந்தது கங்கை கொண்ட சோழபுரம் கோவிலின் கோபுரம்.</strong></font></p>
<p align="justify"><a href="http://tamizharivu.files.wordpress.com/2011/09/045.jpg"><img style="background-image:none;padding-left:0;padding-right:0;display:block;float:none;margin-left:auto;margin-right:auto;padding-top:0;border-width:0;" title="045" border="0" alt="045" src="http://tamizharivu.files.wordpress.com/2011/09/045_thumb.jpg?w=184&#038;h=244" width="184" height="244" /></a></p>
<h2 align="center"><font color="#ff0000">*********</font></h2>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/tamizharivu.wordpress.com/2983/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/tamizharivu.wordpress.com/2983/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/tamizharivu.wordpress.com/2983/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/tamizharivu.wordpress.com/2983/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/tamizharivu.wordpress.com/2983/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/tamizharivu.wordpress.com/2983/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/tamizharivu.wordpress.com/2983/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/tamizharivu.wordpress.com/2983/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/tamizharivu.wordpress.com/2983/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/tamizharivu.wordpress.com/2983/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/tamizharivu.wordpress.com/2983/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/tamizharivu.wordpress.com/2983/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/tamizharivu.wordpress.com/2983/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/tamizharivu.wordpress.com/2983/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamizharivu.wordpress.com&amp;blog=3902339&amp;post=2983&amp;subd=tamizharivu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamizharivu.wordpress.com/2011/09/30/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/53ac03245aa7ccb9e51dbd80eb41ca47?s=96&#38;d=http%3A%2F%2F1.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96&#38;r=G" medium="image">
			<media:title type="html">கை.அறிவழகன்</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/09/001_thumb.jpg" medium="image">
			<media:title type="html">001</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/09/022_thumb.jpg" medium="image">
			<media:title type="html">022</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/09/023_thumb.jpg" medium="image">
			<media:title type="html">023</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/09/011_thumb.jpg" medium="image">
			<media:title type="html">011</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/09/032_thumb.jpg" medium="image">
			<media:title type="html">032</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/09/041_thumb.jpg" medium="image">
			<media:title type="html">041</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/09/046_thumb.jpg" medium="image">
			<media:title type="html">046</media:title>
		</media:content>

		<media:content url="http://tamizharivu.files.wordpress.com/2011/09/045_thumb.jpg" medium="image">
			<media:title type="html">045</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>
